விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    பண்ணின் இன் மொழி யாழ் நரம்பில் பெற்ற*  பாலை ஆகி இங்கே புகுந்து*  என் 
    கண்ணும் நெஞ்சும் வாயும் இடம் கொண்டான்*  கொண்ட பின் மறையோர் மனம் தன் உள்*
    விண் உளார் பெருமானை எம்மானை*  வீங்கு நீர் மகரம் திளைக்கும் கடல் 
    வண்ணன்*  மா மணி வண்ணன் எம் அண்ணல்*  வண்ணமே அன்றி வாய் உரையாதே*

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

பண்ணின் - இராகங்களுக்குள்ளே
இன் - இனிமையான
மொழி - சொல்லையுடைய
யாழ் - வீணையினுடைய
நரம்பில் - தந்திகளில்

விளக்க உரை

என்னுடைய மனமொழி மெய்கள் அவனையல்லாது அறியா என்கிறார். எம்பெருமானடைய விலக்ஷணமான இனிமைக்கு அபூர்வமான த்ருஷ்டாந்தமொன்று இப்பாட்டில் கூறுகின்றார்; “பண்ணினின்மொழி யாழ் நரம்பிற்பெற்ற பாலையாகி” = பாலை யென்றது ஒரு சிறந்த பண். வீணையின் தந்தியிலே பாலையென்னும் பண்ணை இசைத்தால் எவ்வளவு இனிமையாயிருக்குமோ அவ்வளவு இனிமையாக என்னுள்ளே புகுந்தானென்கை. “யாழ்பயில ரூபியைப் பாலையாகி யென்று விசேஷி்க்கையாலே” என்பது ஆசார்ய ஹ்ருதய ஸூக்தி. இரண்டாமடியிலுள்ள ‘கொண்டபின்’ என்பதற்கு ஈற்றடியில் அந்வயம்; என் கண்ணையும் நெஞ்சையும் வாயையும் இடங் கொண்டானாதலால் என் வாயானது எம்மண்ணல் வண்ணமேயன்றி மற்றொன்றை யுரையாது என்கை.

English Translation

weetness sounding from the well tempered Iyre Yal-string which plays on the Palai mode softly! Lord residing in hearts of the Vedic seer,s –he has come to my heart, eyes and lowly tongue. He's the lord of all gods in the sky above. He reclilnes in deep ocean with dancing fish. He's the dark-of-hue emerald an Master, my tongue knows to prate the name of no other god!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்