விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    சின இல் செங் கண் அரக்கர் உயிர் மாளச்*  செற்ற வில்லி என்று கற்றவர் தம்தம் 
    மனமுள் கொண்டு*  என்றும் எப்போதும் நின்று ஏத்தும் மாமுனியை*  மரம் ஏழ் எய்த மைந்தனை*
    நனவில் சென்று ஆர்க்கும் நண்ணற்கு அரியானை*  நான் அடியேன் நறையூர் நின்ற நம்பியைக்* 
    கனவில் கண்டேன் இன்று கண்டமையால்*  என்- கண்இணைகள் களிப்பக் களித்தேனே!*. (2)

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

சினம் இல் - கோபத்துக்கு இருப்பிடமாய்
செம் கண் - சிவந்த கண்களையுடைரான
அரக்கர் - ராக்ஷஸர்கள்
உயிர் மாள - உயிரிழந்து முடியும்படியாக
செற்ற - சீறின

விளக்க உரை

திருநறையூர் நம்பியைக் கண்டுகளிக்கப் பெற்றேனென்கிறார். சில விசேஷணங்களால் நம்பியை விசேஷிக்கிறார் சினவிற் செங்கணென்று தொடங்கி. ஆச்ரித விரோதிகளை அழியச் செய்து பக்தர்களைப் பாதுகாத்தருள்பவ னென்று கற்றவர்களால் கொண்டாடப் படுகின்றானென்பது முதல் விசேஷணத்தின் கருத்து. கண்ட காட்சியிலே மஹாகோபிஷ்டர்களென்று தோன்றும் படியான கண்களை யுடையரான ராவணாதி ராக்ஷஸர்களை யொழித்த வில்லாள னென்று ஒவ்வொரு அன்பரும் தங்கள் தங்கள் நெஞ்சிலே கொண்ட துதிப்பார்களென்க. மாமுனியை என்றது – ஆச்ரிதர்கட்கு எத்தனையோ நன்மைகள் செய்திருந்தும் ஒரு நன்மையும் செய்திலன் போல ‘என்ன செய்வோம்!’ என்றே நெடுகச்சிந்தித்துக் கொண்டிருப்பவனையென்றபடி. “ ஒன்றுண்டு செங்கண்மால் யானுரைப்பது, உன்னடியார்க்கு என்செய்வனென்றே யிருத்தி நீ” என்ற பெரிய திருவந்தாதிப் பாசுரங்காண்க. முநி - மநநஞ்செய்வன்; (அதாவது) சிந்தித்துக்கொண்டிருப்பவன் தன்னுடைய திறலில் நம்பிக்கை யற்றவர்களுக்கு அரியன செய்தும் நம்பிக்கையுண்டாக்கு மியல்வினன் என்று காட்டுதற்காக ‘மரமேழெய்த மைந்தனை’ என்றார்.

English Translation

Angry ruddy-eyed fierce Rakshasa-killer! Lord ascestic. O the piercer of seven trees! Noble bow wielder! Scholars and learned ones Hold thee dearly in their hearts, offer worship. Hard to reach by even knowledge-wealth bearing ones, Perfect Lord residing in Tirunaraiyur, -I this lowly self, saw him in my dream state, Seeing, my eyes and heart rose in abounding joy.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்