விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    எப்போதும் பொன் மலர் இட்டு*  இமையோர் தொழுது*  தங்கள்- 
    கைப்போது கொண்டு இறைஞ்சி*  கழல்மேல் வணங்க நின்றாய்*
    இப்போது என் நெஞ்சின் உள்ளே*  புகுந்தாயைப் போகல் ஒட்டேன்- 
    நல் போது வண்டு கிண்டும்*  நறையூர் நின்ற நம்பீயோ!*           

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

இமையோர் – நித்யஸூரிகள்
எப்போதும் – எக்காலத்திலும்
பொன்மலர் இட்டு– நல்ல பூக்களை ஸமர்ப்பித்து
தொழுது – வணங்கி
தங்கள் – தங்களுடைய

விளக்க உரை

தேவரீரை வணங்கி வாழ்த்தி வழிபாடு செய்யுமவர்கள் பல்லாயிரவர் குறையற்றிருக்கச் செய்தேயும் அவர்கட்குக் காட்சிகொடுத்துக் கொண்டிருக்கு மிருப்பிற்காட்டிலும் என்னெஞ்சிலே வந்து புகுந்திருக்குமதுவே சிறப்பு என்று திருவுள்ளம்பற்றி இமையோர்களையும் விட்டு என்னெஞ்சிலே புகுந்தருளிற்று; இனி நான் போகலொட்டேன் – என்கிறார். பொன்மலர் – பொன்போல் விரும்பத்தக்கமலர் என்றபடி. ‘தொழுது இறைஞ்சி, வணங்க’ என்ற ஒருபொருட் பன்மொழிகள் மனமொழி மெய்களாகிற த்ரிகரணங்களினுடையவுமு் வ்ருத்தியைச் சொல்லுகின்றன வென்னலாம். கைபோது கொள்ளுதல் – அஞ்ஜலி செய்தல்.

English Translation

All the time with golden flowers, gods in sky offer worship, Folding their lotus soft hands, falling at your lotus feet, Now I have you in my heart, I shall never let you go! Bumbele-bees in nectared groves, -Naraiyur Lord-in-residence O!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்