விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    நீண்டாயை வானவர்கள்*  நினைந்து ஏத்திக் காண்பு அரிதால்* 
    ஆண்டாய் என்று ஆதரிக்கப்படுவாய்க்கு*  நான் அடிமை
    பூண்டேன்*  என் நெஞ்சின் உள்ளே புகுந்தாயைப் போகல் ஒட்டேன்* 
    நான்தான் உனக்கு ஒழிந்தேன்*  நறையூர் நின்ற நம்பீயோ!*

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

நீண்டாயை – நெடுமாலாகிய உன்னை
வானவர்கள் – பிரமன் முதலியோர்கள்
நினைந்து – தியானித்து
ஏத்தி – தோத்திரம்பண்ணி
காண்பு அரிது – காண்பதானது அஸாத்யமான காரியம்

விளக்க உரை

‘நீண்டாயை’ என்றது – ஸ்வரூபம் ரூபம் குணம் விபூதி இத்யாதிகளில் ஒவ்வொன்றுமே எல்லை காண வொண்ணாதபடி அபரிச்சிந்நனாயிருக்கிற வுன்னை என்றபடி. பிரமன் முதலிய தேவர்கள் ஞானசக்திகளிற் சிறந்தவர்களாயிருந்தாலும் கொக்கு கடலைக் கண்டாற் போலே உன் ஸ்வரூப ரூபகுண விபூதி விஸ்தாரங்களைக் கண்டு வியந்து சிந்திக்கவும் பேசவும் மாட்டாதே திகைத்து நிற்பர்கள்; எல்லைக்கண்டு பேசமுடியாமல் போனாலும் ஸ்வரூபஸத்தைக்காக ஏதேனும் பேசவேணுமே; ‘ஆண்டாய்’ (ஸ்வாமிந்!) என்று பேசுவார்களாம்; இப்படி வானவர்களால் ஆதரித்துப் பேசப்படுகிற வுன்விஷயத்திலே நான் நித்ய கைங்கரியஞ்செய்வதாக ஒருப்பட்டேன்; நீயும் இஃதறிந்து என்னெஞ்சினுள்ளே வந்து புகுந்துகொண்டாய்; இனி நீ பெயர்ந்து போகப்பார்த்தாலும் “திருவாணை நின்னாணை கண்டாய்” என்னுமாபோலே ஆணையிட்டாகிலும் தடுப்பனேயன்றி உன்னைவிட்டுக்கொடுக்க ஸம்மதிக்கக் கடவேனல்லேன் என்று சொன்ன ஆழ்வாரை நோக்கித் திருநறையூர் நம்பி, “ஆழ்வீர்! நீர் அடிக்கடி அடியேன் அடியேன் என்கிறீர்; சேஷி செய்தபடி செய்யக் கண்டிருப்பதன்றோ சேஷபூதர்க்கு உரியது; ‘ஒட்டேன்’ என்று நிர்ப்பந்திக்கை உம்முடைய ஸ்வரூபத்துக்குச் சேராதே” என்ன நாண்தான் உனக்கொழிந்தேன்’ என்கிறார்.

English Translation

Lord eternal hard to reach by contemplating celestials! Lord of all, I placed myself in total service to your feet, You I have entered my heart lowly, how now can I let you go? Long ago, I lost my shame, Naraiyur Lord-in-residence, O!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்