விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    எம்மானும் எம் அனையும்*  என்னைப் பெற்று ஒழிந்ததற்பின்* 
    அம்மானும் அம்மனையும்*  அடியேனுக்கு ஆகி நின்ற*
    நல் மான ஒண் சுடரே!*  நறையூர் நின்ற நம்பீ!*  உன்- 
    மைம் மான வண்ணம் அல்லால்*  மகிழ்ந்து ஏத்தமாட்டேனே*        

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

எம்மானும் – என் தகப்பனும்
எம் அனையும் – என் தாயும்
என்னை பெற்று – என்னைப் பிரஸவித்துவிட்டு
ஒழிந்ததன் பின் – நீங்கிய பின்பு
அடியேனுக்கு – அடியேனுக்கு

விளக்க உரை

மாதாபிதாக்களிற் காட்டிலும் பரம உபகாரனான வுன்னை எவ்வகையாலும் மறக்கவல்லேனல்லே னென்கிறார். மாதாபிதாக்கள் காமப்ரேரிதராய்ப் பிரஜைகளை உத்பத்திபண்ணி விடுவர்கள்; பிறகு ‘யௌவநவிரோதி’ என்று உபேக்ஷித்தொழிவர்கள்; அவர்கள் கைவி்ட்ட காலத்திலும் கைவிடாதே உடனிருந்து காத்தருள்பவன் எம்பெருமானே யாதலால் என்றும் “சேலேய் கண்ணியரும் பெருஞ்செல்வமும் நன்மக்களும், மேலாத் தாய்தந்தையும் அவரேயினி ஆவாரே” என்றும் ஸகலவிதபந்துவுமாக அப்பெருமானே கொள்ளவுரியன் என்கிற உறுதியை வெளியிடுகிறார். “பெற்றார் பெற்றொழிந்தார் பின்னும் நின்றடியேனுக்கு, உற்றானாய் வளாத்து என்னுயிராகி நின்றானை...........எத்தால் யான்மறக்கேன் இது சொல்லென் ஏழைநேஞ்சே!” என்பர் மேல் எட்டாம்பத்திலும். நன்மானவொண்சுடரே! = விலக்ஷணமாய் அளிறந்த ஒள்ளிய சுடரையுடையவனே!, என்றவாறே இப்படிப்பட்ட திருவுருவம் பரமபதநாதனுக்கே யன்றேவுள்ளது’ என்று சிலர் நினைக்கக்கூடு மென்றெண்ணி உடனே ‘நறையூர் நின்ற நம்பீ!’ என்கிறார் .

English Translation

After my Father and Mother gave birth to me and left, you became my Father and my Mother with all love and care. O Lord with a hue of cloud and radiance beyond the Sun! I sing not for any but you, Naraiyur lord-in-residence, O!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்