விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    வாத மா மகன் மர்க்கடம் விலங்கு*  மற்றுஓர்சாதிஎன்று ஒழிந்திலை*  உகந்து 
    காதல் ஆதரம் கடலினும் பெருகச்*  செய்தகவினுக்கு இல்லை கைம்மாறு என்று*
    கோது இல் வாய்மையினாயொடும் உடனே*  உண்பன் நான் என்ற ஒண் பொருள்*  எனக்கும 
    ஆதல் வேண்டும் என்று அடிஇணை அடைந்தேன்*  அணி பொழில் திருவரங்கத்து அம்மானே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

உகந்து - அவனிடம் அன்புவைத்து
காதல் ஆதரம் கடலினும் பெருக - அன்பும் ஆசையும் கடலைக் காட்டிலும், அதிகமாக வளர
செய் - (நமக்கு இவன்) செய்த
தகவினக்கு - உபகாரங்களுக்கு
கைம்மாறு இல்லை - பிரதியுபகாரம் இல்லை’

விளக்க உரை

சக்ரவர்த்தி திருமகன் சிறிய திருவடியை ஆதரித்த வரலாற்றை முன்னிட்டுக் கொண்டு சரணம் புகுகிறாரிதில். கீழ்ப்பாட்டில் - மநுஷ்யஜாதியிலே குலத்தாலும் குணத்தாலும் குறையநின்ற குஹனிடத்துப் பெருமாள் பேரன்பு காட்டினதைக் கூறிய ஆழ்வார், அப்படி ஸமாந ஜாதியுமன்றி விஷம ஜாதியாயுள்ள விலங்கையுமுட்பட அதன் இழிவு பாராதே ஆட்கொண்டு அதன் பக்கல் விசேஷ கடாக்ஷஞ்செய்த பொருளை இப்பாட்டில் எடுத்துக்கூறி ஈடுபடுகிறார். நீ அனுமனிடத்து வரம்புகடந்து அருள்செய்ததுபோல அடியேனிடத்தும் என் இழிவு பாராதே பேரருள் புரியவேண்டுமென்று பிரார்த்திக்கின்றனர்.

English Translation

"Son of wind, just a monkey and animal", not addressing the different Hanuman, you Gave your love that was more than the ocean, saying that nothing could repay him for service. May your pure lotus-feet be my refuge, may I too stand by and always enjoy you. Ocean-hued Lord, I've come to your lotus feet, O Lord surroudned by groves in Arangam!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்