- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
காணொளி
பதவுரை
விளக்க உரை
ஸ்ரீ ராமாவதராத்தில் குஹப்பெருமாள் திறத்தில் நீ செய்தருளின திருவருள் என்னெஞ்சை விட்டு அகலாது என்னை உருக்குகின்றது; அப்படிப்பட்ட திருவருள் அடியேன் மேலும் செய்தருளத்தக்கது காண் என்கிறார் இம்முதற்பாட்டில். க்ஷத்ரிய ஜாதியில் ஸூர்யகுலத்தில் இக்ஷ்வாகு வம்சத்தில் திருவவதரித்தவனும் சக்ரவர்த்தியின் திருக்குமாரனும் ஸகலைச்வர்ய ஸம்பந்நனும் மஹாபுத்திமானும் பகைவரிடத்தும் அன்பு கொள்பவனுமான இராமபிரான் குஹனை நோக்குங்கால், இவன் இழிவான வேடச்சாதியனென்றும் அதனால் பகுத்தறிவில்லாத அவிவேகியென்றும்அச்சாதிக்கு இயல்பான கொடுமையினால் எல்லா வுயிர்களோடும் பகைமை கொள்பவனென்றும் இகழ்ச்சி கொள்ளவேண்டியது ப்ராப்தமாயிருந்தும் அங்ஙனம் இகழ்ச்சி கொள்ளாது தனது பெருமைக் குணங்களையும் பாராமல் அவனுடன் கலந்து பரிமாறின கருணையை இங்ஙனம் பாராட்டியெடுத்துக்கூறி, ஆழ்வார், ‘அவ்வாறே அடியேனிடமுள்ள இழிகுணங்களையும் பொருள்செய்யாது என்னையும் ஆட்கொண்டருள்வன் எம்பெருமான்’ என்னும் நம்பிக்கைகொண்டு தாம் அவன் திருவடிகளிற் சரண்புகுந்தமையை வெளியிட்டார்.
English Translation
"Woe-begotten most lowly born servant", -not addressing the boatman Guha thus, Fawn-like tender-eyed Sita beside you, you made your most devoted brother his too, "Come my dear Brother, friend to me always", those words come to my heart and they haunt me Ocean-hued Lord, I've come to your lotus feet, O Lord surrounded by groves in Arangam!
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்