விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    ஊழியாய் ஓமத்துஉச்சிஆய்*  ஒருகால் உடைய தேர்ஒருவன்ஆய்*  உலகில்- 
    சூழி மால் யானைத் துயர் கெடுத்து*  இலங்கை மலங்க அன்று அடு சரம் துரந்து*
    பாழியால் மிக்க பார்த்தனுக்கு அருளி*  பகலவன் ஒளி கெடப்*  பகலே- 
    ஆழியால் அன்று அங்கு ஆழியை மறைத்தான்*  அரங்க மா நகர் அமர்ந்தானே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

ஓமத்து உச்சி ஆய் - யஜ்ஞங்களுக்குத் தலைவனாய்
ஒருகால் உடைய தேர் ஒருவன் ஆய் - ஒற்றைச் சக்கரத்தேர் வலவனான ஸூர்யனுக்கு அந்தராத்மாவாய்
உலகில் - இவ்வுலகத்திலே,
சூழி மால் யானை - முகபடாத்தையுடைத்தாய்ப் பெரிதான ஸ்ரீகஜேந்திரத்தினுடைய
துயர் கெடுத்து - துன்பத்தைப் போக்கினவனாய்

விளக்க உரை

ஓமத்து உச்சியாய் = ஓமம் - ஹோமம்; யாகமென்றபடி. உச்சி என்றது – பிரதானன் என்றபடி. “அஹம்ஹி ஸர்வயஜ்ஞாநாம் போக்தா” என்றும் “போக்தாரம் யஜ்ஞதபஸாம்” என்றும் சொல்லுகிறபடியே ஸர்வயஜ்ஞ ஸமாராத்யன் என்றவாறு. ஒரு காலுடையதேரொருவனாய் = ஒற்றைச்சக்கரம் பூண்ட தேரையேறி நடத்துமவன் ஸூர்யன்; அவனுக்கு அந்தர்யாமி. சூழி மால்யானை = சூழியாவது முகபடாம். பிங்கல நிகண்டில் 1287 காண்க. யானையின் முகப்போர்வை. காட்டில் திரிந்து கொண்டிருந்த கஜேந்திராழ்வானுக்கு முகபடாம் இராதாயினும் உரிமைபற்றிய விசேஷணமிடுதல் தமிழ்வழக்காம்.

English Translation

The Lord of discus is the indweller of the Single-wheel-chariot Sun-god and receiver of the offerings made of the fire altar. He wielded his discus the save the elephant in distress. He rained fire-arrows over Lanka City. He favoured the righteous Arjuna in the great Bharata war by masking the Sun with his discus, making day appear like night. He is the resident of Arangama-Nagar.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்