விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    எங்ஙனே உய்வர் தானவர் நினைந்தால்*  இரணியன் இலங்கு பூண் அகலம்* 
    பொங்கு வெம் குருதி பொன்மலை பிளந்து*  பொழிதரும் அருவி ஒத்து இழிய*
    வெம் கண் வாள் எயிற்று ஓர் வெள்ளி மா விலங்கல்*  விண் உறக் கனல் விழித்து எழுந்தது* 
    அங்ஙனே ஒக்க அரி உரு ஆனான்*  அரங்க மா நகர் அமர்ந்தானே.    

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

தானவர் - அசுரர்கள்
நினைந்தால் - (இரணியன் பட்ட பாட்டைச் சிந்தித்தார்களாகில்
எங்ஙனே உய்வர் - எப்படி உயிர்தரித்திருப்பார்கள்!;
இரணியன் - ஹிரண்யாஸுரனுடைய
பூண் இலங்கு அகலம் - ஆபரணங்கள் விளங்கப்பெற்ற மார்வில் நின்றும்

விளக்க உரை

நரஸிம்ஹாவதார ப்ரக்ரியையை வாய்விட்டுச் சொல்லுவதற்கு முன்னே “எங்ஙனெ உய்வர் தானவர் நினைந்தால்” என்றருளிச்செய்த அழகு வியக்கத்தக்கது, நம்மைப்போலே அநுகூலித்து பிரஹ்லாதனைப்போலே ‘இது நமக்காகச் செய்த செயல்’ என்றிருப்பார் உஜ்ஜீவித்துப்போவர்கள்; சத்ருபக்ஷமான அஸுரவர்க்கம் இவ்வரலாற்றை நெஞ்சால் நினைத்தமாத்திரத்திலே இடிவிழுந்தாற்போலே உக்கிப்போவார்கள் என்றவாறு. இரணியனுக்குப் பொன்னன் என்று பெயருண்டு; அவனுடம்பு பொன்னிறமாயிருக்கும்; அதில் நின்று ரத்தவெள்ளம் பாய்வதானது பொன்மலை பிளந்து அருவி பெருகுவதொக்கும் என்கிறார். நரஸிம்ஹமூர்த்தி வெண்ணிறங் கொண்டதாதலால் அதற்கு வெள்ளிமலையை உவமை கூறினார்.

English Translation

The radiant ornamented chest of Hiranya with hot blood spilling out every where looked like a golden mountain with red streams, as the fierce red eyed man-lion stalked in like a SILVER mountain and slew the demon. The Asuras through, "How can we escope!" Thus did the Lord come as Narasimha. He is the resident of Arangama-Nagar.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்