விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    மாஇருங் குன்றம் ஒன்று மத்து ஆக*  மாசுணம் அதனொடும் அளவி* 
    பா இரும் பௌவம் பகடு விண்டு அலற*  படுதிரை விசும்பிடைப் படர*
    சேய்இரு விசும்பும் திங்களும் சுடரும்*  தேவரும் தாம் உடன் திசைப்ப* 
    ஆயிரம் தோளால் அலை கடல் கடைந்தான்*  அரங்க மா நகர் அமர்ந்தானே.     

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

மா இரு குன்றம் ஒன்று - அகன்றும் உயர்ந்துமிருக்கிற (மந்தரமென்னும்) ஒருமலையை
மத்து ஆக - மத்தாகக்கொண்டு
அதனொடும் - அம்மலையிலே
மாசுணம் - (வாஸுகியென்னும); நாகத்தை
அளவி - சுற்றி,

விளக்க உரை

பகடு விண்டு அலற – ‘பகடு’ என்னுஞ் சொல்லுக்கு உள்ள பல பொருள்களில் ‘யானை’ என்னும் பொருள் இங்குக்கொள்ளவுரியது. உவமவுருபு தொக்கியிருக்கின்றதென்க. விண்டுவாய்விரிந்து. “ஆயிரந்தோளால் அலைகடல் கடைந்தான்” என்கிறாரே, இப்படி உண்டோ? என்னில்; “நாலு தோள்கொண்டு வ்யாபரித்தபடிதான் ஆயிரந் தோள்கொண்டு வ்யாபரித்தான் என்னலாம்படியாய்த்து” என்ற வியாக்கியான ஸ்ரீஸூக்திகண்டு தெளிக.

English Translation

Rolling the big serpent Vasuki over the big mountain Mandara, the Lord churned the ocean with a thousand arms. The ocean opened its mouth and roared, the waves splashed sky-high. The heavens, the Sun, the Moon, the gods and the celestials, all witnessed the wonder spell-bound. He is the resident of Arangama-Nagar.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்