விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    பொங்கு நீள் முடி அமரர்கள் தொழுது எழ*  அமுதினைக் கொடுத்தளிப்பான்* 
    அங்கு ஓர் ஆமை அது ஆகிய ஆதி!*  நின் அடிமையை அருள் எனக்கு*
    தங்கு பேடையோடு ஊடிய மதுகரம்*  தையலார் குழல் அணைவான்* 
    திங்கள் தோய் சென்னி மாடம் சென்று அணை*  திருவெள்ளறை நின்றானே. 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

பொங்கு - விளங்குகின்ற
நீள் முடி - நீண்ட கிரீடத்தை யுடையரான
அமரர்கள் - தேவர்கள்
தொழுது எழ - (தன்னை) வணங்கி யாச்ரயிக்க

விளக்க உரை

(தங்குபேடையோடு இத்யாதி.) வண்டுகள் ஆணும் பெண்ணுமாய்ப் பூவிலே படுத்திருந்தன; தம்பதிகளுக்குப் பிரணயகலஹம் இயற்கையாகையாலே ஊடல் உண்டாயிற்று; உடனே ஆண்வண்டானது பேடைக்குத் தெரியாததோரிடந்தேடி மறையவேணும் என்றெண்ணி ஸ்த்ரீகளினுடைய கூந்தலிலே மறையக்கோலி, சந்திர மண்டலத்தளவுஞ் சென்றோங்கின சிகரத்தையுடைய மாடங்களிலே சென்றணைகின்றதாம் திருவெள்ளறையில்.

English Translation

O Lord residing in Tiruvellarai, where lover-bees in the coiffure of dames fall out on each other and fly away in a huff to their hives on TOP of mansions that touch the moon! In the yore you came as a turtle and gave ambrosia to the gods, that they may live and worship you. Pray grace me with service to you !

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்