விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    கறை ஆர் நெடு வேல் மற மன்னர் வீய* விசயன் தேர் கடவி* 
    இறையான் கையில் நிறையாத*  முண்டம் நிறைத்த எந்தை இடம்*
    மறையால் முத்தீ அவை வளர்க்கும்*மன்னு புகழால் வண்மையால்* 
    பொறையால் மிக்க அந்தணர் வாழ்*  புள்ளம்பூதங்குடி தானே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

இறையான் கையில் நிறையாத முண்டம் - ருத்ரனுடைய கையில் ஒட்டிக்கொண்டதாய் ஒன்றாலும் நிரம்பாதிருந்த கபாலத்தை
நிறைத்த - (பிச்சையிட்டு) நிறைத்தவனுமான
எந்தை - எம்பெருமானுடைய
இடம் - இருப்பிடமாவது
மறையால் - வேதங்களாலும்

விளக்க உரை

“மறையால் முத்தீயவை வளர்க்கும்” என்று சேர்த்து அந்லயித்து, வேதங்களைக் கொண்டு அனலோம்புகிறவர்கள் என்றுரைத்தலுமாம்.

English Translation

The Lord who drove the chariot in war for Vijayan, and killed the armed and angry kings, then also filled the un-fillable skull-begging-bowl of Siva, resides –where Vedic seers of lasting fame, forgiveness and patience tend the three sacred fires with proper Vedic chants, - in pullam-Budangudi, yes, always!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்