- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
காணொளி
பதவுரை
விளக்க உரை
இத்தலத்தின் வயல்வளங் கூறுவன பின்னடிகள். முற்காலத்தில் ஆலவாயுடையான் என்பானொரு தமிழன் பட்டரிடம் வந்து இப்பாட்டில் ஒருகேள்வி கேட்டான்;- ‘பள்ளச் செறுவில் கயலுகள” என்றபோதே அவ்விடத்து வயல்களில் மீன்கள் அளவற்றுக் கிடக்கின்றமை வெறிவந்து விட்டது; அப்படியிருக்க, ஈற்றடியில் “புள்ளுப் பிள்ளைக்கு இரை தேடும்” என்று எங்ஙனே சொல்லலாம்? மீன் அருமைப்பட்டிருந்தாலன்றோ இரை தேடவேண்டும்; கொள்வார் தேட்டமாம்படி குறையற்றுக் கிடக்கும்போது தேடிப்பிடிப்பதாகச் சொல்லுவது பொருந்தாதன்றோ? என்று கேட்டான்; இதற்குப் பட்டர் அருளிச் செய்ததாவது – பிள்ளாய்! நீ கற்றவனாயினும் சொற்போக்கு அறிந்திலை; “பிள்ளைக்கு இரை தேடும்” என்றுள்ளது காண்; அங்குள்ள மீன்கள் நிலமிதியாலே தூணும் துலாமும்போலே தடித்திருக்கும்; அவை பறவைக் குட்டிகளின் வாய்க்குப் பிடிக்கமாட்டாவாகையால் உரிய சிறிய மீன்கள் தேடிப்பிடிக்க வேண்டு மத்தனை யன்றோ? என்றாராம்.
English Translation
Like a sly trickster He came swooping over Mabali and took the worlds; He went to the wailing elephant and ended his despair, He resides amid water tanks and wetland fields-where birds swoop down upon jumping fish and snatch them, then fly to their wailing chicks to feed them, -in Pullam-Budangudi, yes, always!
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்