விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    ஆநிரை மேய்த்து அன்று அலை கடல் அடைத்திட்டு*  அரக்கர் தம் சிரங்களை உருட்டி* 
    கார்நிறை மேகம் கலந்தது ஓர் உருவக்*  கண்ணனார் கருதிய கோயில்*
    பூநிரைச் செருந்தி புன்னை முத்து அரும்பி*  பொதும்பிடை வரி வண்டு மிண்டி* 
    தேன்இரைத்து உண்டு அங்கு இன் இசை முரலும்*  திருவெள்ளியங்குடி அதுவே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

அன்று - முற்காலத்தில்
ஆ நிரை மேய்த்து - (கோபாலகிருஷ்ணனாய்ப் பிறந்து) பசக்கூட்டங்களை மேய்த்தவனாயும்
அலை கடல் அடைத்திட்டு - அலையெறிகின்ற கடலிலே அணைகட்டி (இலங்கையிற் சென்று)
அரக்கர்தம் சிரங்களை உருட்டி - ராக்ஷஸர்களுடைய தலைகளை அறுத்துத் தள்ளினவனாயும்

விளக்க உரை

வரிவண்டு மிண்டி அங்கு தேன் இரைத்து உண்டு – அழகிய வண்டுகள் நெருங்கியிருந்து அவ்விடத்தில் மதுவை ஆரவாரத்தோடே பருகி இன் இசை முரலும் - மதுரமான இசைகளைப்பாடா நிற்கப்பெற்ற திருவெள்ளியங்குடி அதுவே.

English Translation

The Lord who then grazed cows, built a bridge on the ocean and killed all the Rakshasa, has the dark hue of rain-laden cloud is Krishna the Lord who resides in flower groves of Punnai, spilling their pearl buds, -Serund! trees harbouring bumble-bees drinking the nectar, singing in temple of iruvelliyangudi, that is it!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்