விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    தீ எம் பெருமான் நீர் எம் பெருமான்*  திசையும் இரு நிலனும்* 
    ஆய் எம் பெருமான் ஆகி நின்றால்*  அடியோம் காணோமால்*
    தாய் எம் பெருமான்*  தந்தை தந்தை ஆவீர்*  அடியோமுக் 
    கே எம் பெருமான் அல்லீரோ நீர்*  இந்தளூரீரே!

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

இந்தளூரீர் - திருவிந்தளூர்ப் பெருமாளே!
நீர் - தேவரீர்
தீ எம் பெருமான் - தேஜஸ்தத்வத்திற்கு அந்தர்யாமியான எம்பெருமானாகவும்
நீர் எம் பெருமான் - ஜலதத்வத்திற்கு அந்தர்யாமியான பெருமானாயும்
திசை எம்பெருமான் ஆயும் இருநிலன் எம்பெருமான் ஆகியும் நின்றால் - திசைகளுக்கு அந்தர்யாமியான பெருமானாயும் விசாலமான பூமிக்கு அந்தர்யாமியான பெருமானாயும் நின்றால்

விளக்க உரை

“நீர்வானம் மண்ணொரிகாலாய்நின்ற நெடுமால்” என்றும் “குன்றமும் வானும் மண்ணுங் குளிர்புனல் திங்களோடு நின்றவெஞ்சுடரும் அல்லா நிலைகளுமாயவெந்தை” என்றும் நாம் கண்ணால் காண்கிற பொருள்களெல்லாம் எம்பெருமான் வடிவேயென்று இவர் துணிந்திருப்பவராதலால், ‘இத்துணிவு இல்லாதவரன்றோ வருந்தவேண்டும்; இத்துணிவுடையார்க்கு எம்பெருமானுடைய ஸாக்ஷாத்காரம் எப்போதும் குறையற்றிரக்கின்றதன்றோ; ஆகையாலே இவர் வீணாக வருந்துகின்றார்’ என்று திருவிந்தள்ளூர்ப்பெருமான் திருவுள்ளம் பற்றி யிப்பதாகக்கொண்டு, பிரானே! நி எல்லாப்பொருளுமாக நிற்கின்றாய் என்கிற சாஸ்த்ரார்த்தம் அடியோமுக்குத் தெரியாமையில்லை; “சங்கும் சக்கரமும் சிரித்தமுகமும் தொங்கும் பதக்கங்களும்;” என்றாற்போலே அஸாதாரண திவ்யமங்கள விக்ரஹ வேஷத்தைக் கண்டகளிக்க ஆவல்கொண்டிருக்கிற அடியோமுக்கு ஜகத் ஸ்வரூபனாயிருக்குமிப்பு என்ன பயனளிக்கும்? தீ நீர் முதலானவையெல்லாம் உன்வடிவே என்று அநுஸந்தித்துக்கொள்வதில் யாதொரு ஆக்ஷேபமுமில்லை. அப்படி அநுஸந்திப்பதனால் அவற்றில் உனது அஸாதாரணத் திருமேனியைக் காண்போமோ. யாம்; காணமாட்டோம்; நாங்கள் கண்டுகளிப்பதற்கன்றோ நீ திருவிந்தளூரிலே வந்து நிற்கிறது என்கிறார்.

English Translation

"Lord who swallowed all the worlds and brought them out in time again!" "Lord of dark adorable hue, like the ocean, -deep in a sleep!" "Dancing, set-fish fields in Nangai, "Deva-deva's paradise!", speech-of-milk-and-nectar sweet, my daughter sings of Parttan-Palli O!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்