விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    அரக்கர் ஆவி மாள அன்று*  ஆழ் கடல் சூழ் இலங்கை செற்ற* 
    குரக்கரசன் என்றும்*  கோல வில்லி என்றும் மா மதியை*
    நெருக்கும் மாடம் நீடு நாங்கை*  நின்மலன்தான் என்று என்று ஓதி* 
    பரக்கழிந்தாள் என் மடந்தை*  பார்த்தன்பள்ளி பாடுவாளே. 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

என் மடந்தை - என் பெண்ணானவள்
அன்று அரக்கர் ஆவி மாள - முன்பொரு காலத்தில் ராக்ஷஸர்களினுடைய பிராணன் முடியும்படியாக
ஆழ் படல் சூழ் இலங்கை செற்ற - ஆழ்கடலால் கூழப்பட்ட லங்காபுரியைப் பொடிபடுத்தின
குரங்கு - வாநர வீரர்களுக்கு
அரசன் என்றும் - ஸ்வாமியாவன் என்றும்,

விளக்க உரை

பரக்கழித்தாள் - ‘பரக்கு அழிந்தாள்’ என்று பிரித்து, பரக்கு என்பதற்கு அடக்கமென்று பொருள் கூறி, ‘அடக்கங்கெட்டாள்’ என்றுரைப்பர் சிலர். அதுநிற்க : கம்பராமாயணத்தில் கிட்கிந்தா காண்டத்து வாலிவதைப் படலத்தில் -(79) “அரக்கரோ ரழிவுசெய்து கழிவரேலதற்கு வேறோர், குரக்கினத்தரசைக் கொல்ல மனநெறி கூறிற்றுண்டோ? இரக்கமெங்குகுத்தாயென்பால் எப்பிழை கொண்டாயப்பா, பரக்கழி யிதுநீ பூண்டாற் புகழையார் பரிக்கற்பாலார்?” என்ற செய்யுளில் ‘பரக்கழி’ என்றும் பதத்தின் பிரயோகம் காண்கிறது; அவ்விடத்துரையில் “பரக்கழி – பெருநிந்தை; பெருந்தீங்குமாம்” என்றிருக்கக் காண்கிறோம். ஆகவே இங்கே பரக்கழிந்தாள் என்பதற்கு – ‘பெரும்பழி விளையப்பெற்றாள்’ எனப்பொருள் கொள்ளுதல் பொருந்தும். பெரிய வாச்சான்பிள்ளையும் பலவிடங்களில் இங்ஙனமேவி யாக்கியான மருளிச்செய்யக் காண்கிறோம். நாச்சியார் திருமொழியில் (12-3) “கொந்தளமாக்கிப் பரக்கழித்துக் குறும்பு செய்வானோர் மகனைப்பெற்ற” என்றவிடத்தில், ‘பரக்கழிக்கை – பழிவிளைக்கை’ என்பது வியாக்கியானம்.

English Translation

"Leader of the monkey army! Wielding mighty bow and arrow, Marching O'er a bridge on ocean you destroyed the Rakshasa clan!" "O My faultless Lord in Nangai, -mansions rise and stop the Moon!" Losing all her grace and CHARM my daughter sings of Parttan-Palli, O!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்