- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்

பாசுரம்
கல்லால் கடலை* அணை கட்டி உகந்தாய்*
நல்லார் பலர்* வேதியர் மன்னிய நாங்கூர்ச்*
செல்வா* திருவெள்ளக்குளத்து உறைவானே*
எல்லா இடரும்* கெடுமாறு அருளாயே.
காணொளி
பதவுரை
கல்லால் கடலை அணை கட்டி உகந்தாய் - கண்ட கற்களையுங்கொண்டு கடலிலே சேதுகட்டி மகிழ்ந்தவனே!
நல்லார் பலர் வேதியர் மன்னிய நாங்கூர் - விலக்ஷணரான பல வைதிகர்கள் நித்யவாஸம் பண்ணுகிற திருநாங்கூரில்
திருவெள்ளக் குளத்து உறைவானே - திருவெள்ளக்குளத்தில் எழுந்தருளியிருப்பவனே!
செல்வா - செல்வனே!
எல்லா இடரும் கெடும் ஆறு அருளாய் - (எனது) துன்பங்களெல்லாம் தீரும்படி அருள்புரிய வேணும்.
விளக்க உரை
English Translation
O Lord who parted the ocean with rock and sand, residing in Nangur with godly learned seers! Wealth of the residents, -Tinivellakulam Lord! Grace that I be rid of my karmic misery.
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்