விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    கருமகள் இலங்கையாட்டி* பிலங் கொள் வாய் திறந்து*  தன்மேல் 
    வரும்அவள் செவியும் மூக்கும்*  வாளினால் தடிந்த எந்தை*
    பெருமகள் பேதை மங்கை*  தன்னொடும் பிரிவு இலாத* 
    திருமகள் மருவும் நாங்கூர்த்*  திருமணிக்கூடத்தானே.    

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

கருமகள் - சண்டாள ஸ்த்ரிபோல் மிகவும் தண்ணியளாய்
இலங்கை யாட்டி - லங்காபுரிக்கு அதிகாரம் செலுத்துமவளாய்
பிலம் கொள் வாய்த் திறந்து தன்மேல் வருமவள் - குஹைபோன்ற வாயைத் திறந்துகொண்டு தன்மேல் வந்தவளான சூர்ப்பணகையினுடைய
செவியும் மூக்கும் - காதையும் மூக்கையும்
வாளினால் தடிந்த எந்தை - வாட்படையனால் அறுத்தொழிந்த ஸ்வாமி

விளக்க உரை

“ராமஸ்ய தக்ஷிணோ பாஹு:” என்றபடி இராமபிரானுக்கு லக்ஷ்மணன் வலக்கையெனப்படுதலால் அங்ஙனம் கையாகிய லக்ஷ்மணனுடைய செயலை அவயவியான இராமன் செய்ததாகச் சொல்லுதலும் தகுதியே. பலராமன் செய்தருளிய ப்ரலம்பாஸுர வதத்தைக் கண்ணபிரான் செய்தருளியதாக அநுஸந்திப்பதும், இதுபோன்றதேயாம். இவள் மிக்க நீசஜாதியிற் பிறந்தவளென்கைக்காகக் கருமகள் எனப்பட்டது. இலங்கையாட்டி - இலங்கையாளனான இராவணனுக்கு உடன பிறந்தவள் என்க. “ராவணனுடன் பிறந்தாளாகையாலே லங்கையிலுள்ளாரிடையக் கொண்டாடும்படி யிருக்கிறவள்” என்பது வியாக்கியான வாக்கியம்.

English Translation

The Lord who chopped off the nose and EARS of the terrible Lanka princess surpanakha with gaping mouth, who offered herself, resides at Nangur in Tirumanik-kudam with the virtuous, innocent Dame Earth, and the always-together-dame Lakshmi by his sides.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்