விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    படல் அடைத்த சிறு குரம்பை நுழைந்து புக்கு*  பசு வெண்ணெய் பதம் ஆர பண்ணை முற்றும்* 
    அடல் அடர்த்த வேல் கணார் தோக்கை பற்றி*  அலந்தலைமை செய்து உழலும் ஐயன் கண்டீர்*
    மடல் எடுத்த நெடுந் தெங்கின் பழங்கள் வீழ*  மாங்கனிகள் திரட்டு உருட்டாவரு நீர்ப் பொன்னி* 
    திடல் எடுத்து மலர் சுமந்து அங்கு இழியும் நாங்கூர்த்*  திருத்தெற்றியம்பலத்து என் செங் கண் மாலே* 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

மடல் எடுத்த நெடு தெங்கின - பாளைகள் மிகவும் நிறைந்து உயர்ந்துள்ள தென்னை மரங்களினின்று,
பழங்கள் - காய்கள்
வீழ - (மாமங்களின் மீது) விழ அதனால் உதிர்ந்த
மாங்கனிகள் திரட்டு - மாம்பழத் திரள்களை
திடல் எடுத்து - மேட்டு நிலங்களை யெடுத்துவிட்டு

விளக்க உரை

குரம்பை – குடிசை, பசுவெண்ணெய் - பசுமைமாறாத வெண்ணெய்; அப்போது தான் கடைந்து திரட்டினவெண்ணெய். புதமார - ‘பதம’; என்னுஞ்சொல்லுக்கு உள்ள பலபொருள்களில் உண்பதும் ஒரு பொருள். தோக்கை – முன்தானை. ‘அலந்தலை’ என்னுஞ் சொல்லின் மேல் பண்புப் பெயர்விகுதி ஏறிக்கிடக்கிறது; துன்பம் என்பதுபொருள். வியாமோஹம் என்ற பொருளுமுண்டு. (மடலெடுத்த இத்யாதி.) திருநாங்கூரெங்கும் தென்னைமரங்களும் மாமரங்களும் மலிந்து கிடக்கின்றன; ஓங்கியிருக்கின்ற தெங்குகளினின்று தேங்காய்கள் மாமரங்களின் மீது விழவே, அந்த அதிர்ச்சியினால் மாம்பாங்கள் உதிர்ந்து வீழ்கின்றன; அவற்றையெல்லாம் திரட்டியுருட்டிக் கொண்டும் மற்றும் பலவகையான புஷ்பங்களை யடித்துக்கொண்டும் பெருவெள்ளமாகப் பிரவஹிக்கின்ற காவிரியாற்றுக்கால்களையுடையது திருநாங்கூர். திடலெடுத்து – திடல்-திடர்; எழுத்துப்போலி. திடராவது மேட்டுநிலம்; பெருவெள்ளம் பெருகும்போது மேடுகளெல்லாம் கரைந்து ஸமநிலமாதல் இயல்பு

English Translation

See, the Lord who entered the huts of cowherd-dames, and ate the butter all over the tenements, and wen about playing mischief, pulling the Saree-ends of Vel-eyed dames is or senkanmai who resides at Nangur, -where fronds of tall coconut trees burst, dropping ripe coconuts that the river Ponni gathers in its waves and flows into lakes with lotus thickets, -In his temple of Tirutetri Amabalm.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்