விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    அண்டர் ஆனவர் வானவர்கோனுக்கு என்று*  அமைத்த சோறு அது எல்லாம் உண்டு* 
    கோநிரை மேய்த்து அவை காத்தவன்*  உகந்து இனிது உறை கோயில்*
    கொண்டல் ஆர் முழவின் குளிர் வார் பொழில்*  குல மயில் நடம் ஆட* 
    வண்டு தான் இசை பாடிடும் நாங்கூர்*  வண்புருடோத்தமமே.     

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

குளிர் வார் பொழில் - குளிர்ந்து பரந்த சோலைகளிலே,
கொண்டல் ஆர் முழவில் - மேகங்களினுடைய மிக்க கோஷம்உண்டாகும் போது
குலம் மயில் நடம் ஆட - கூட்டங் கூட்டமான மயில்கள் கூத்தாடப் பெற்றதும்,
வண்டு இசைபாடிடு - வண்டுகள் (மயில்களின் கூத்தாட்டத்திற்குத் தகுதியாக) இசைபாடப் பெற்றதுமான
நாங்கூர் - திருநாங்கூரில்

விளக்க உரை

English Translation

The Lord who gulped all the food-offering, --that the cowherd-folk had made for Indra, -- then lifted a mount to protect the cows, resides at Nangur, --amid groves resounding with the bees sing and the peacocks dance, --in the temple of Van-Purushottamam.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்