விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    உம்பரும் இவ்ஏழ்உலகும், ஏழ்கடலும் எல்லாம்*  உண்டபிரான் அண்டர்கள், முன்கண்டு மகிழ்வுஎய்தக்* 
    கும்பம்மிகு மதயானை, மருப்புஒசித்து*  கஞ்சன் குஞ்சிபிடித்துஅடித்த பிரான் கோயில்*
    மருங்குஎங்கும் பைம்பொனொடு, வெண்முத்தம் பலபுன்னை காட்ட*  பலங்கனிகள் தேன் காட்ட பட அரவு ஏர் அல்குல் 
    அம்பு அனைய கண்மடவார், மகிழ்வுஎய்தும் நாங்கூர்*  அரிமேய விண்ணகரம்,வணங்குமடநெஞ்சே!    

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

உண்ட பிரான் - (பிரளயகாலத்தில் ) திரு வயிற்றிலே வைத்து நோக்கின உபகார சீலனும்
முன் அண்டர்கள் கண்டு மகிழ்வு  எய்த - முன்பு இடையர்கள் கண்ணாலே கண்டு களிப்படையும்படி
கும்பம் மிகு மதம் யானை மருப்பு ஒசித்து - குடம் போன்ற பெரிய மத்தகத்தையுடைய மந்தகஜ மான குவலயாபீடத்தி னுடைய தந்தங்களை முறித்துவிட்டு (உள்ளே நுழைந்து)
கஞ்சன் குஞ்சி பிடித்து அடித்த - கம்ஸனுடைய மயிரைப் பிடித்து (கீழே தள்ளி) அவனை யழியச் செய்த
புpரான் - உபகாரகனுமான  பெருமானுடைய

விளக்க உரை

எங்குப் பார்த்தாலும் புன்னைமரங்கள் மொக்கும் மலருமாய்க் காண்கையாலே, மொக்கும் முத்துக்கள் போலவும் மலர்கள் பொன்போலவும் விளங்கப்பெற்று, தேனைச் சொரியா நிற்கும் பலாமரங்கள் நிறைந்திருக்கப் பெற்று, அழகிற் சிறந்த மாதர்கள் மகிழ்ந்து வாழப்பெற்றதான திருநாங்கூரிலுள்ளது இத்தலம் - குஞ்சி - ஆண்மயிர்.

English Translation

Then in the yore, the Lord swallowed the seven worlds, the seven oceans, and all else. He came as a cowherd-lad and destroyed a rutted elephant by his tusk, then dragged the wicked Kamsa by his hair and killed him, applauded by the gods. He resides permanently in Nangur amid groves of Punnai which spill buds of PEARLS and flowers of gold, jackfruit trees which spill nectar, and dames with-snake-slender waists and arrow-sharp eyes spill joy. Offer worship to him in Arimeya Vinnagaram, O Frail Heart!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்