விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    தளைக் கட்டு அவிழ் தாமரை வைகு பொய்கைத்*  தடம் புக்கு அடங்கா விடம் கால் அரவம்* 
    இளைக்கத் திளைத்திட்டு அதன் உச்சி தன்மேல்*  அடி வைத்த அம்மான் இடம்*  
    மாமதியம் திளைக்கும் கொடி மாளிகை சூழ் தெருவில்*  செழு முத்து வெண்ணெற்கு எனச் சென்று*  
    முன்றில் வளைக்கை நுளைப் பாவையர் மாறும் நாங்கூர்*  மணிமாடக்கோயில் வணங்குஎன்மனனே!    

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

தளை (தாமரை) - கட்டுவிரியாமல் மொக்காயிருக்கிற (தாமரைப் பூக்களும்)
கட்டு அவிழ் தாமரை - கட்டு நெகிழ்ந்து அலர்ந்த தாமரைப் பூக்களும்
வைகு - தங்கி யிருக்கப்பெற்ற
பொய்கைத் தடம் புக்கு - பொய்கையிலே புகுந்து,
அடங்காவிடம் கால் அரவம் இளைக்க திளைத்திட்டு - (அப்பொய்கையினுள்) அடங்காமல் கிளர்ந்தெழுந்தாய் விஷத்தைக் கக்குகின்ற காளிய நாகம் இளைத்துப்போம்படி விளையாடி

விளக்க உரை

தளைக் கட்டவிழ் தாமரை = ‘தளைத்தாமரை, கட்டவிழ் தாமரை’ என்று இரண்டு படியாக யோஜிப்பது. தளையாவது கட்டு; நெகிழாமல் முகுளமாகவே யிருக்கிற தாமரைகளும், கட்டவிழ்ந்து மலர்ந்துள்ள தாமரைகளும் தங்கியிருக்கிற பொய்கை என்றவாறு. விடம் கால் = ‘கால்’ என்பது வினைப்பகுதி. (‘காற்று’ என்னுஞ் சொல் இப்பகுதி யடியாகவே பிறந்தது,) காலுதல்-வீகதல். காலரவம்-வினைத்தொகை. அதனுச்சிதன் மேலடிவைத்த = “அடிச்சி யோந்தலைமிசை நீயணியாய் ஆழியங்கண்ணாவுன் கோலப்பாதம்” 3694. என்று அன்பர் சென்னிக் கணியாகத் திருவடிகளை வைத்திடாயென்று எத்தனையேனும் வேண்டியனாலும் கிடைக்கமாட்டாத திருவடிகள் பாபியான காளியன் தலையிலே வைக்கப்பட்டனவே! என்ற பரிதாபம் தோற்றம். ஆழ்வானும் ஸூந்தரபாஹூ ஸ்தவத்திலே ‘ஐயோ! நான் காளியம் தலையாகப் பிறவாதொழிந்தேனே!’ என்று ஒரு ச்லோகத்தால் கதறுகின்றார் -“ இத்தாதி.

English Translation

Then in the yore the Lord entered the lake of lotus buds and opened blossoms, then placed his feet on the hoods of the venom-spitting snake. He resides in Nangur where pennons atop mansion: play with the Moon and bangled coastal women roam the streets peddling rice pearls for pearl rice. Offer worship in Manimadakkoyil, O Heart!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்