- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்

பாசுரம்
காணொளி
பதவுரை
விளக்க உரை
வயலாலி மணவாளன் பக்கலிலே சென்று தமது நிலைமையைச் சொல்லுமாறு ஒரு வண்டை நோக்கிக் கூறுகிறார். அந்த வண்டு தன் பேடையோடே கலந்து மலரிலே மதுபானம் பண்ணிக் கொண்டிருந்தனையால், ‘நான் துணைவனைப் பிரிந்து உணவும் உறக்கமுமற்று வருந்திக் கிடக்கும்போது நீ இப்படி உன் காரியமே கண்ணாக இருப்பது தகுதியோ?’ என்னுங் கருத்து முன்னிரண்ட்டிகளில் வெளிவரும். வண்டுகள் சிறகுகளே விரித்துக்கொண்டு மலரை மிதித்தேறி மதுவைப் பருகுதல் இயல்பாதலால் “தாவிரியமலருழக்கி” எனப்பட்டது. ‘தா’ என்றும் ‘தாவி’ என்றும் சிறகுக்குப் பெயர். உழக்கல் மிதித்தல், சிதிலமாக்குதல். முதலடியில் “தாவிரியும் மலருழக்கி” என்ற பாடமுண்டென்று பெரியவாச்சான் பிள்ளை வியாக்கியானத்தினால் தெரிகின்றது; தூய்தாக விரியும் மலரை=நன்றாக அலர்ந்த மலரை என்றபடி. பொறிவாயி = புள்ளிகளும் ரேகைகளும் வண்டுக்கு இயல்பு.
English Translation
Hovering on the lotus blooms, --never leaving your beloved spouse, Drinking from the nectar filled buds, O, My freckled bumble-bees! Go to my bow-wielding Lord, tell him of my condition. He resides in Tiruvali guarding the Vedic fire.
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்