- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்

பாசுரம்
காணொளி
பதவுரை
விளக்க உரை
எம்பெருமான் திருப்பாற்கடல் முதலியவிடங்களில் வாழ்வதானது அவ்விடமே உத்தேச்யமென்கிற எண்ணத்தினாலன்று; எந்த ஸமயத்திலே எந்த அன்பருடைய உள்ளத்திலே புகுந்து கொள்ளலாமென்று பார்த்துக்கொண்டு உபாயாநுஷ்டாநம் பண்ணுமவன்போல அங்கே கிடக்கிறானென்பர்; இவ்வர்த்தம் ஸ்ரீவசந பூஷணத்தில்-“ ‘திருமாலிருஞ் சோலைமலையே’ என்கிறபடியே உகந்தருளின நிலங்களெல்லாவற்றிலும் பண்ணும் விருப்பத்தை இவனுடைய சரீர ஏகதேசத்திலே பண்ணும்; அங்குத் தைவாஸம் ஸதாநம், இங்குத்தைவாஸம் ஸாத்யம். ‘கல்லுங்தனை கடலும்’ என்கிறபடியே இது ஸித்தித்தால் அவற்றில் ஆதரம் மட்டமாயிருக்கும். ‘இளங்கோயில் கைவிடேல்’ என்று இவன் ப்ரார்த்திக்க வேண்டும்படி யாயிருக்கும்.” 170-3 என்ற ஸ்ரீஸூக்திகளால் நன்கு விசதமாகும். இதுவே இப்பாட்டின் முதலடியிலுறையும் பொருளாம். உலவு திரைக்கடலில் பள்ளிகொண்டிருந்தது அடியேன் மனத்தில் புகுருகைக்காக வென்கிறார். இப்படி நெடுநாள் பாரித்து ஸமயம் பார்த்து என் மனத்திலே புகுந்து உன்னை இனி நான் போகவொட்டேனென்கிறார். “(அப்புலவர் ;) விசேஷஜ்ஞனல்லையோ? அவஸரமறியாயோ புகுருகைக்காக” என்ற பெரியவாச்சான்பிள்ளை வியாக்கியான ஸ்ரீஸூக்தி காண்க. ‘புண்ணியனே!’ என்றது-உன்னைப் பெறுவதற்கு உறுப்பாக என்பக்கலிலே யாதொரு ஸூக்ருகமுங் கண்டத்திலே; நீயே யன்றோ மூலஸூக்ருதம் என்றபடி.
English Translation
O, Lord of beautiful Tiruvali, amid lakes where male crabs rest on lotuses under the shade of ever-blossoming Punnai and Nalai trees! You left your serpent bed in the ocean to come and reside in this lowly heart. O, My sacred poet, I shall never let you go.
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்