விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    பைங் கண் விறல் செம் முகத்து வாலி மாள*  படர் வனத்துக் கவந்தனொடும் படை ஆர் திண் கை* 
    வெம் கண் விறல் விராதன் உக வில் குனித்த*  விண்ணவர் கோன் தாள் அணைவீர்* 
    வெற்புப்பாலும துங்க முக மாளிகை மேல் ஆயம் கூறும்*  துடி இடையார் முகக் கமலச் சோதி தன்னால்* 
    திங்கள் முகம் பனி படைக்கும் அழகு ஆர்*  காழிச் சீராமவிண்ணகரே சேர்மின் நீரே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

தாள் அணைவீர் - திருவடிகளையடைய விரும்புமன்பர்களே!;-
வெற்பு போலும் துங்கம் முகம் மாளிகை மேல் ஆயம் கூறும்  - மலை போன்று உயர்ந்த முகத்தையுடைய மாளிகைகளின்  மேல் நிலத்திலே நின்று ஸ்நேஹமாகப் பேசிக் கொண்டிருக்கிற
துடி இடையார் - உடுக்கை போன்று நுண்ணிய இடையையுடைய மாதர்களது
கமலம் முகம் சோதி தன்னால் - தாமரை போன்ற முகத்தின் காந்தியினாலே
திங்கள் முகம் பனி படைக்கும் - சந்திரனுடைய முகத்திலே வருத்தமுண்டாக்கப் பெற்ற
 
 

விளக்க உரை

(வெற்புப் போலு மித்யாதி.) - சந்திர மண்டலத்தளவும் ஓங்கியுள்ள மாடங்களின் மீது மாதர்கள் ஒருவர்க்கொருவர் தோழமை கொண்டாடி வார்த்தையாடாநிற்கையில் அவர்களுடைய முகச் சோதியைப் பார்த்துச் சந்திரன் “ இவர்கள் முன்னே நாம் பிழைக்கிற பிழைப்பு ஒரு பிழைப்பா! என்று வெள்கி வருந்துகின்றானென்ற விதனால் - இத்தலத்து மாட மாளிகைகள் மிகவும் ஓங்கி விளங்குகின்றன வென்பதும், இத்தலத்து மாதர்கள் திங்கள் திருமுகத்துச் சேயிழையார் என்பதும் பெறுவிக்கப்பட்டனவாம். துங்கம் - வடசொல், உந்நதமானது, ஆயம் - தோழி, தோழமை, பனி - அச்சம், துக்கம், நடுக்கம்.

English Translation

Green eyed and red faced Vali was killed; deep in-the-forest-dwelling Kabanda too fell. One eyed demon Viradha too fell to the bow of our Lord and master who rules the celestials. Mountain-like mansions in Kali rise high, thin waisted girls in the balconies call, putting to shame the face of the full moon, dazzle in Seerama Vinnagar, O People, go to!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்