- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்

பாசுரம்
வளைக் கை நெடுங்கண் மடவார்* ஆய்ச்சியர் அஞ்சி அழைப்ப*
தளைத்து அவிழ் தாமரைப் பொய்கைத்* தண் தடம் புக்கு அண்டர் காண*
முளைத்த எயிற்று அழல் நாகத்து* உச்சியில் நின்று அது வாடத்*
திளைத்து அமர் செய்து வருவான்* சித்திரகூடத்து உள்ளானே.
காணொளி
பதவுரை
காண - பார்த்தவளவிலே
முளைத்த எயிறு அழல் நாகத்து உச்சியில் - முளைத்த பற்களையுடையதும் விஷாக்நியை உமிழ்வதுமான காளியநாகத்தினுச்சியிலே
நின்று - நின்று கொண்டு
அது வாட திளைத்து - அந்த நாகம் இளைக்கும்படி நர்த்தனஞ் செய்து
அமர் செய்து - உல்லாஸமாக வீதியார எழுந்தருளின பெருமான்
விளக்க உரை
தவளத் தமிழ் தாமரைப் பொய்கை தளைத்து அவிழ் - கட்டுண்டிருந்து (பிறகு) அவிழ்ந்த ” என்று பொருளாய் விகஸிந்தபடியைச் சொல்லிற்றுகிறது. தாமரைகள் புஷ்பிக்கக்கூடிய பொய்கை என்று கருத்து, இப்படிப்பட்ட பொய்கையையன்றோ காளியன் தன் விஷாக்கியினால் கொதிப்பித்துக் கொண்டு கிடந்தானென்கை, தடம் - வடசொல் கரை.
English Translation
The fair-bangled wide-eyed cowherd dames wailed in concern when the Lord entered the cool waters of the lotus-lake and, -watched by all, -danced over the hoods of the poison fanged serpent. The mischief maker resides in Tillai Tiruchitrakudam.
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்