விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    மூவர் ஆகிய ஒருவனை*  மூவுலகு உண்டு உமிழ்ந்து அளந்தானை* 
    தேவர் தானவர் சென்று சென்று இறைஞ்ச*  தண் திருவயிந்திரபுரத்து* 
    மேவு சோதியை வேல் வலவன்*  கலிகன்றி விரித்து உரைத்த* 
    பாவு தண் தமிழ்ப் பத்து இவை பாடிடப்*  பாவங்கள் பயிலாவே  (2)

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

தேவர் தானவர் சென்றுசென்று இறைஞ்ச - தேவரும் தானவரும் வந்து வந்து வணங்கலாம்படி
தண்திரு அயிந்திராபுரத்து மேவு சோதியை - குளிர்ந்த திருவயிந்திரபுரத்திலே நித்யவாஸம் பண்ணுகிற பரஞ்சோதியான பெருமானைக்குறித்து
வேல் வலவன் கலிகன்றி - வேல் பிடிக்கவல்ல திருமங்கை மன்னன்
விரித்து உரைத்த - விரிவாக அருளிச்செய்த
பாவு தன் தமிழ் இவை பத்து பாடிட - அழகிய விஸ்தார கவியாக அமைந்த இப்பத்துப் பாசுரங்களையும் பாடியநுஸந்திக்குமளவில் பாவங்கள் பயிலா பாவங்கள் சேரமாட்டா.

விளக்க உரை

English Translation

The Lord, who swallowed, made and measured the Earth, the One who became the Three, whom the gods and Asuras go to again and again and offer worship, resides in Tiruvayindirapuram. He has been praised in this garland of cool Tamil songs by sharp speared Kalikanri. Those who master it will be freed of karmas.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்