விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    விரை கமழ்ந்த மென் கருங் குழல் காரணம்*  வில் இறுத்து*  அடல் மழைக்கு- 
    நிரை கலங்கிட வரை குடை எடுத்தவன்*  நிலவிய இடம் தடம் ஆர்* 
    வரை வளம் திகழ் மத கரி மருப்பொடு*  மலை வளர் அகில் உந்தித்* 
    திரை கொணர்ந்து அணை செழு நதி வயல் புகு*  திருவயிந்திரபுரமே.  

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

நிலவிய இடம் - மகிழ்ந்து உறையும் இடமாவது;
தடம் ஆர்வரை வளம் திகழ் மதகரி மருப்பொடு - தடாகங்கள் நிறைந்த மலைக்கு அழகுசெய்து விளங்குகின்ற மதயானைகளையுடைய
மருப்பொடு - தந்தங்களையும்
திரை உந்தி கொணர்ந்து அணை - அலைகளினாலே தள்ளிக் கொண்டுவந்து சேருகிற
செழு நதி - அழகிய ஆறு
வயல் புகு - கழனிகளில் பாயப்பெற்ற

விளக்க உரை

(தடமார்வரைவள மித்யாதி) ஆறுகள் பெரு வெள்ளமாய்ப் பெருகும்போது யானைத் தந்தங்களையும் அகில் மரங்களையும் மற்றும் பலப்பல மணிமாணிக்கங்களையும் கொழித்துக்கொண்டு வருகிற வழக்கமாகையாலும் அங்ஙனமே கவிகளும் கவிபாடுகிற வழக்கமையாலும், இங்கே கருடநதி ப்ரவஹிக்கும்படியை வருணிக்கிறாராயிற்று.

English Translation

The Lord who broke a bow for the sake of the dark tressed Sita, and who lifted the mountain to protect the cows against a storm resides in Tiruvayindirapuram where rivers flowing through the mountains and forest, bring elephant tusk and fragrant Agil wood as offering, then irrigate the fields.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்