விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    வாரணம் கொள் இடர் கடிந்த மாலை*  நீல மரகதத்தை மழை முகிலே போல்வான் தன்னைச்* 
    சீர் அணங்கு மறையாளர் நிறைந்த*  செல்வத் திருக்கோவலூர் அதனுள் கண்டேன், என்று* 
    வார் அணங்கு முலை மடவார் மங்கை வேந்தன்* வாட் கலியன் ஒலி ஐந்தும் ஐந்தும் வல்லார 
    காரணங்களால் உலகம் கலந்து அங்கு ஏத்த*  கரந்து எங்கும் பரந்தானைக் காண்பர் தாமே. (2)      

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

சீர் - ஆத்ம குணங்களாலே
அணங்கு - (அனைவரும்) ஆசைப்படக்கூடிய
மறையாளர் - வைதிகரிகள்
நிறைந்த செல்வம் - நிறைந்திருக்கையாகிற அழகு பொருந்திய
திரு கோவலூர்அதனுள் - திருக்கோவலூரென்னுந் திருப்பதியிலே

விளக்க உரை

“வாரணங்குமலைமடவார்மங்கை” என்று மங்கை நாட்டின் சிறப்பு சொன்னபடி. சோலைவாய்ப்பு. வயலவீறு, மதிப்பொலிவு முதலியவற்றைச் சொல்லும் முகத்தால் நகரத்தின் சிறப்பை வெளியிடுதல்போல, மாதர்களின் மேன்மையைச் சொல்லும் முகத்தாலும் வெளியிடுதலுண்டு ;”ஒப்பவரில்லா மாதர்கள் வாழும் மாடமாமயிலைத் திருவல்லிக்கேணி” என்னாற்போல.காரணங்களால் ஏத்த = ஐச்வர்யம் வேணுமென்றும் புத்ரஸந்தானம் வேணுமென்றும் இந்திரலோகம் வேணுமென்றும் ;இப்படி பலபல அபேக்ஷிகள் காரணமாக ஏந்துமவர்களுக்கும் பலன்அளிக்க எங்கும் புகுந்து பரந்திருக்கிறானாம் எம்பெருமான்.

English Translation

The coiffured-dames-abounding Mangai’s king, swordsman kaliyan, has sung these ten Tamil songs with the refrain “I have seen him in Tirukkovalur” on the lord who saved the elephant in distress, has the hue of the blue water lily, is the emerald gem, and is the rain-cloud pleasing to Vedic seers. He lives in abounding wealth. Those who master the garland will be worshipped by the world, and receive the vision of the Lord.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்