விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    பார் மன்னு தொல் புகழ்ப் பல்லவர்கோன் பணிந்த*  பரமேச்சுரவிண்ணகர்மேல்* 
    கார் மன்னு நீள் வயல் மங்கையர் தம்தலைவன்*  கலிகன்றி குன்றாது உரைத்த* 
    சீர் மன்னு செந்தமிழ் மாலை வல்லார்*  திரு மா மகள் தன் அருளால்*
    உலகில் தேர் மன்னராய் ஒலி மா கடல் சூழ்*  செழு நீர் உலகு ஆண்டு திகழ்வர்களே. (2)        

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

பார்மன்னு தொல் புகழ் - இப்பூமியிலே நிலைத்து நின்ற பெரும்புகழையுடைய
பல்லவர்கோன் - பல்லவராஜன்
பணிந்த - கைங்கரியங்கள் செய்யப்பெற்ற
பரமேச்சுரவிண்ணகரிமேல் - பரமேச்சுரவிண்ணகர மென்னும் திருப்பதி விஷயமாக
கார்மன்னு நீள்வயல் - சினைகொண்ட பெரிய கழனிகளையுடைய

விளக்க உரை

English Translation

The world renowned Pallava king of lasting fame offers worship at Paramecchura Vinnagaram, which the fertile Mangai-tract’s king Kalikanri has sung in a proper-Tamil song-garland. Those who master it will, by the grace of Lakshmi, rule the Earth as crowned kings and enjoy Heaven.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்