விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    மேவி எப்பாலும் விண்ணோர்வணங்க*  வேதம் உரைப்பர் முந் நீர்மடந்தை தேவி* 
    அப்பால் அதிர்சங்கம்இப்பால் சக்கரம்*  மற்றுஇவர் வண்ணம் எண்ணில்* 
    காவிஒப்பார் கடலேயும்ஒப்பார்*  கண்ணும் வடிவும் நெடியர்ஆய்*
    என் ஆவிஒப்பார் இவர்ஆர்கொல் என்ன*  அட்டபுயகரத்தே என்றாரே.        

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

விண்னோர் - நித்யஸுரிகள்
எப்பாலும் மேவி - சுற்றிலும் சூழ்ந்துகொண்டு
வணங்க - வணங்கப்பெற்று
வேதம் உரைப்பர் - (இப்பெரியவர்) வேதங்களை உருச்சொல்லுகின்றார்;
முந்நீர் மடந்தை - கடலிற்பிறந்த கமலையானவள்;

விளக்க உரை

என்முன்னே வந்து தோற்றின பெரியவர் தனியராய் வந்திலர்; நித்யஸுரிகள் சுற்றிலும் சூழ்ந்து வணங்காநிற்க வந்தார்; வாயில் நல்வேதமோதும் வேதியரென்று விளங்கும்படி வேதங்களை ஓதிக்கொண்டு வந்தார்; அருகில் திருமகள் தேவியாகத் திகழ்ந்தனள்; இறாபுறத்திலும் திருவாழி திருச்சங்குகள் பொலிந்தன: கருநெய்தற்பூவோ! கடல்தானோ! என்னும்படியான வடிவு தோன்றிற்று; அவ்வடிவழகுக்கும் கண்ணழகுக்கும் எல்லை காணமுடியவேயில்லை: நம்முடைய பிராணண்தான் இங்ஙனே உருவெடுத்து வெளித்தோன்றுகின்றதோ என்று நினைக்கலாம்படி பரமப்ரிதிக்கு இலக்காயிருந்தார். இப்படி நித்யஸுரிகளும் பிராட்டிமாரும் திவ்யாயுதங்களும் திவ்யமங்கள விக்ரஹமும் ஸ்பஷ்டமாக விளங்கச்செய்தேயும் இவரை இன்னாரென் றறுதியிடமாட்டாத நான் இவரார் கொல்! என்றேன்; ‘நான் தான் அட்டபுககரத்தேன’; என்றார்--என்கிறாள். மடந்தை--பத்தொன்பது வயதுள்ள பெண்: பொதுவாகப் பெண்பாலுக்கும் பெயராக வழங்கும்:

English Translation

Gods on every side stood and offered worship with Vedic chants, the lady of-the sea Lakshmi was his consort. On that side was the vibrant conch, on this side the dicus. Come to describe his colour, -was he lotus-red, or was he ocean-blue?, -his eyes and his frame sarik deeply into my soul. Who could this be, I wondered. “I am the Lord of Attabuyakaram”, he said.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்