விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    எங்ஙனும் நாம்இவர் வண்ணம் எண்ணில்*  ஏதும் அறிகிலம் ஏந்திழையார்* 
    சங்கும் மனமும் நிறையும் எல்லாம்*  தம்மனஆகப் புகுந்து*
    தாமும்பொங்கு கருங்கடல் பூவைகாயா*  போதுஅவிழ் நீலம் புனைந்தமேகம்* 
    அங்ஙனம் போன்றிவர் ஆர்கொல் என்ன*  அட்டபுயகரத்தேன் என்றாரே.    

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

இவர் வண்ணம் - இவருடைய படிகளை
எங்ஙன் எண்ணிலும் - எவ்விதமாக அறியப் பார்த்தாலும்
ஏதும் அறிகிலம் - ஒன்றும் அறிய மாட்டுகின்றிலோம்:
ஏந்து இழையார் - ஆபரணம் பூண்டிருப்பவர்களான மாதர்களுடைய
சங்கும் - வளைகளும்

விளக்க உரை

மேலெழுந்தவாரியாகப் பார்த்துவிடாதே உள்ளிழிந்து எவ்வளவுதூரம் ஆராய்ந்து பார்த்தாலும் இப்பெரியவருடைய படிகளொன்றும் தெரிகின்றதில்லை; இவர் இங்குவந்தது ஸ்த்ரிகளுடைய ஸர்வஸ்வத்தையும் கொள்ளை கொள்ளுதற்காகவேயாம்; இவருடைய வடிவோ பூவையும் காயாவும் நீலமும் மேகமும் போன்றுள்ளது; இப்படிப்பட்ட இவர் ஆர்? என்றேன்; நான்தான் அட்டபுயகரத்தேன் என்றார்---என்கிறாள். எங்ஙனும் என்ற விடத்துள்ள உம்மையைப்பிரித்து எண்ணில் என்பதோடு கூட்டியுரைக்கப்பட்டது. அறிகிலம்=அறியகில்லோம் என்றவாறு. ஏந்திழையார்சங்கும் மனமும்நிறைவுமெல்லாம் தம்மனவாகப் புகுந்து ஸ்ரீ ‘ஏந்திழையார்’ என்று பொதுவாக மாதர்களைச் சொல்லுகிறது; அவர்களுடைய சங்கும் மனமும் நிறைவும் தம்மனவாகப் புகுகையாவது -இவரைக்கண்டவுடனே விரும்பினபடி கலவிசெய்யப் பெறாமையாலே உடல் இளைத்துக் கைவளைகள் கழன்றொழியும்படியும், நெஞ்சு இவரிடத்திலேயே பதிந்திருக்கும்படியும் அடக்கத்தை விட்டுப் பதறி மேல்விழும்படியும் செய்து கொள்ளுகை. தம்மன--தம்முடையவை.

English Translation

No matter how much I saw him, I could not identify Him: He entered and took the jewels worn by the maidens, together with their hearts, their calm and all, then displayed his dark form, - the hue of the ocean, the Puvai flower, the Kaya flower, the blue lotus and the dark clouds. Seeing this, who could this be, I wondered. “I am the Lord of Attabuyakaram!” he said.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்