- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்

பாசுரம்
காணொளி
பதவுரை
விளக்க உரை
“பஞ்சிச்சிறு கூழையுருவாகி” என்றது பூனையிடத்து அந்வயிக்கவுமாம், கண்ணபிரானிடத்தில் அந்வயிக்கவுமாம். பூதனையிடத்து அந்வயிக்கும்போது “பஞ்சச்சிறுகூழை” என்னுமளவும் அன்மொழித் தொகையாய், பஞ்சுபொல் மெல்லிய சிறிய கடலையுடையவள் என்று பொருள்பட்டு யசோதைப்பிராட்டிக்கு வாசகமாகி, அவளுடைய வேஷத்தை ஏறிட்டுக்கொண்டு வந்தாளென்றதாகிறது. ‘நம்முடைய தாயான யசோதைகள் நமக்கு முலைகொடுக்க வருகிறாள்’ என்று கண்ணபிரான் கருதவேணுமென்று தாய்வேடம் பூண்டு வந்தாளிறே பூதனை. இனி, “பஞ்சிச் சிறுகூழை யுரவாகி” என்றதைக் கண்ணபிரானிடத்து அந்வயிக்கில், பிடித்துக் கட்ட வொண்ணாதபடியான மயிர்முடியையுடைய இளம்பிள்ளையான பருவத்திலேயே வஞ்சப் பெண்ணின் விஷத்தையுண்டவன் என்பதாம். ‘கம்ஸ’ என்ற வடசொல் ‘கஞ்சு’ எனச் சிதைந்தது. “கஞ்சைக் காய்ந்த கருவில்லி” என்றாள் சூடிக்கொடுத்த நாச்சியாகும்.
English Translation
The Lord came as a wee little infant and relished the poison on the breast of the ogress Putana. He killed Kamsa too. He resides in Kadal Mallai Talasayanam. Those who contemplate him in their hearts are our masters, O Heart!
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்