விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    காண்டாவனம் என்பது ஓர் காடு*  அமரர்க்கு அரையன்னது கண்டு அவன் நிற்க*
    முனே மூண்டு ஆர் அழல் உண்ண முனிந்ததுவும் அது அன்றியும்* முன் உலகம் பொறை தீர்த்து ஆண்டான்*
    அவுணன் அவன் மார்வு அகலம் உகிரால் வகிர் ஆக முனிந்து*  அரியாய்  நீண்டான்* 
    குறள் ஆகி நிமிர்ந்தவனுக்கு இடம்*  மா மலை ஆவது நீர்மலையே*  

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

அமரர்க்கு அரையன் அவன் - தேவர்களுக்குத் தலைவனான இந்திரனானவன்
கண்டு நிற்க - பார்த்துக்கொண்டிருக்கையில்
முனே - அவன் கண் முன்னே
“காண்டாவனம்”; என்பது ஓர் காடு அது - ‘காண்டாவனம்’ என்று ப்ரஸித்தமான வொருகாட்டை
ஆர் அழல் - அக்நி பகவான்

விளக்க உரை

- “காண்டவவநம்” என்பது ‘காண்டாவனம்’ என்று கிடக்கிறது. இவ்வனத்தை அக்நிபகவான் உண்ணும்போது தேவேந்திரன் அதைத் தடுக்க முயன்றும் பயன்படவில்லை யென்பது விளங்க “ கண்டு அவன் நிற்கமுனே” எனப்பட்டது. காண்டவவனத்தை எரிக்க அநுமதித்த முகத்தால் பூமி பாரங்களைத் தொலைத்ததும், தானே நேரில் பல துஷ்டஜனங்களைக் கொன்றொழித்து அம்முகத்தாலும் பூமி பாரங்களைத் தொலைத்தும் அருளின எம்பெருமானுறையுமிடம் திருநீர் மலை என்றாராயிற்று. அரையன்-அரசன், முனே-முன்னே. வகிர்-பிளவு.

English Translation

Kandavanam, the forest belonging to Indra the king of gods, was being consumed by a terrible forest fire. In his very presence our Lord angrily swallowed the fire. He waged a terrible war to rid the Earth of its burden. He came as a man-loin and tore apart the chest of Hiranya. He came as a manikin and grew to cover the Earth. Tirunirmalai is His great hill abode.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்