விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    இந்திரனுக்கு என்று ஆயர்கள் எடுத்த*  எழில் விழவில் பழ நடைசெய்* 
    மந்திர விதியில் பூசனை பெறாது*  மழை பொழிந்திட தளர்ந்து*
    ஆயர் எந்தம்மோடு இன ஆ நிரை தளராமல்*  எம் பெருமான் அருள் என்ன* 
    அந்தம் இல் வரையால் மழை தடுத்தானை*  திருவல்லிக்கேணிக் கண்டேனே*

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

இந்திரனுக்கு என்று - இந்திரனை உத்தேசித்து
ஆயர்கள் எடுத்த - இடையர்களால் நடத்தப்பட்டு வந்த
எழில் விழவில் - சிறந்த உத்ஸவத்திலே
பழநடை செய் - அநாதி ஆசாரமாகச் செய்து வருகிற
மந்திரம் விதியில் பூசனை பெறாது - ஸங்கேதப்படி நடக்கவேண்டிய ஆராதனையைப் பெறாமல்

விளக்க உரை

திருவாய்ப்படியில் வருஷந்தோறும் இந்திரனுடைய பூஜை பெரிய திருவிழாவாக நடத்தப் பட்டு வந்தமையால் எழில்விழவு எனப்பட்டது. மந்திரவிதி = வேதத்துக்கு அநதிகாரிகளான இடையர்களுக்கு மந்திர விதியுண்டோ வென்னில்; இங்கு மந்த்ரமாவது ஆலோசனை; அதாவது ஸங்கேதம்.

English Translation

When the great feast,-that the cowherds used to offer with chants from yore,-was not forthcoming, Indra rained hailstones, which made the cowherds lose heart and seek Krishna for protection, whereupon our Lord held aloft the matchless Govardhana mountain, and stopped the rains. I have seen Him in Tiruvallikkeni.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்