விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    மின்னு மா முகில் மேவு*  தண் திரு வேங்கட மலை கோயில் மேவிய* 
    அன்னம் ஆய் நிகழ்ந்த*  அமரர் பெருமானைக்* 
    கன்னி மா மதிள் மங்கையர் கலி கன்றி*  இன் தமிழால் உரைத்த*
    இம் மன்னு பாடல் வல்லார்க்கு*  இடம் ஆகும் வான் உலகே* (2) 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

மின்னும் மா முகில் மேவு - மின்னுகின்ற காளமேகங்கள் வந்து சேருகிற
தண் திரு வேங்கடம் மலை கோயில் மேவிய - குளிர்ந்த திருமலையைக் கோயிலாகக் கொண்டு எழுந்தருளி யிருப்பவனும்,
அன்னம் ஆய் நிகழ்ந்த - ஹம்ஸ ரூபியாய்த் திரு வவதரித்தவனும்
அமரர் பெருமானை - நித்ய ஸூரிகளுக்குத் தலைவனுமான பெருமான் விஷயமாக,

விளக்க உரை

“மின்னுமா முகில்மேவு” என்ற விசேஷனம்- பெருமாளும் பிராட்டியும் கூடி வாழ்கிற வாழ்ச்சியை ஸூசிப்பித்ததாகவுமாம். மின்னின் ஸ்தானத்திலே பிராட்டியும், முகிலின் ஸ்தானத்திலே எம்பெருமானும். கன்னி - அழிவில்லாமை,

English Translation

The Lord who came as a swan to reveal the Vedas, the Lord of gods, resides in Venkatam hills, his temple is touched by the dark lightning clouds. These sweet garlands of Tamil songs on him are by stone-walled Mangai-king Kalikanri. Those who can master it will find a place in the world of the celestials.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்