- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
அம்பரம் அனல் கால் நிலம் சலம்* ஆகி நின்ற அமரர்கோன்*
வம்பு உலாம் மலர்மேல்* மலி மட மங்கை தன் கொழுநன்அவன்*
கொம்பின் அன்ன இடை மடக் குற மாதர்* நீள் இதணம்தொறும்*
செம் புனம் அவை காவல் கொள்* திருவேங்கடம் அடை நெஞ்சமே!
காணொளி
பதவுரை
அம்பரம் அனல் கால் நிலம் சலம் ஆகி நின்ற - ஆகாயம் நெருப்பு காற்று பூமி ஜலம் ஆகிய பஞ்சபூதஸ்வ ரூபியும்
அமரர் கோன் - நித்ய ஸூரிகட்குத் தலைவனும்
வம்பு உலாம் மலர்மேல் மலி மட மங்கை தன் - பரிமளம் உலாவுகின்ற தாமரை மலரின் மேலே பொருந்திய பெரிய பிராட்டியாருக்கு
கொழுநன் அவன் - நாயகனுமான எம்பிரான் எழுந்தருளியிருக்கப் பெற்றதும்,
நீள் இதணம் தொறும் - உயர்ந்த பரண்கள் தோறும்
விளக்க உரை
English Translation
He is manifest in Earth, Water, Fire, Wind and space. He is the king of gods, the bee-humming lotus dame Lakshmi’s spouse. Thin waisted gypsy women sit on lofts in the treetops and watch over the tracts of red soil in Tiruvenkatam,- thitherward, o Heart!
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்