விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    இடும்பையால் அடர்ப்புண்டு இடுமினோ துற்று என்று*  இரந்தவர்க்கு இல்லையே என்று* 
    நெடுஞ் சொலால் மறுத்த நீசனேன் அந்தோ!*  நினைக்கிலேன் வினைப் பயன் தன்னை* 
    கடுஞ் சொலார் கடியார் காலனார் தமரால்*  படுவது ஓர் கொடு மிறைக்கு அஞ்சி* 
    நடுங்கி நான் வந்து உன் திருவடி அடைந்தேன்*  நைமிசாரணியத்துள் எந்தாய்!

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

இடும்பையால் அடர்ப்புண்டு - ஏழ்மைத்தனத்தினால் கஷ்டப்பட்டு
ஓ! துற்று இடுமின் என்று - “ஐயோ! ஒரு கவளம் இடுங்கோள்” என்று கதறி
இரந்தவர்க்கு - பிச்சை கேட்டவர்களுக்கு
இல்லையே என்று - இல்லவேயில்லை யென்று சொல்லி
நெடு சொலால் மறுத்த - நீண்ட சொல்லாலே திரஸ்கரித்த

விளக்க உரை

English Translation

Those who when starving, seeking a morsel, came to me, but I gave them nothing. Hard-hearted cold one, lowly this self O, -- thoughtless of the fruit of my action. Hot-spoken Time-Lord, cruel and nasty, ---fearing his terrible tortures, Trembling and panting. I have come to; your feet Naimisaraniyam-living Lord, O!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்