பிரபந்த தனியன்கள்
பாசுரங்கள்
சீதக் கடலுள்* அமுது அன்ன தேவகி*
கோதைக் குழலாள்* அசோதைக்குப் போத்தந்த*
பேதைக் குழவி* பிடித்துச் சுவைத்து உண்ணும்*
பாதக் கமலங்கள் காணீரே*
பவள வாயீர் வந்து காணீரே (2)
முத்தும் மணியும்* வயிரமும் நன்பொன்னும்*
தத்திப் பதித்துத்* தலைப்பெய்தாற் போல்* எங்கும்
பத்து விரலும்* மணிவண்ணன் பாதங்கள்*
ஒத்திட்டு இருந்தவா காணீரே*
ஒண்ணுதலீர்! வந்து காணீரே
பணைத்தோள் இள ஆய்ச்சி* பால் பாய்ந்த கொங்கை*
அணைத்து ஆர உண்டு* கிடந்த இப் பிள்ளை*
இணைக்காலில்* வெள்ளித் தளை நின்று இலங்கும்*
கணைக்கால் இருந்தவா காணீரே*
காரிகையீர்! வந்து காணீரே
உழந்தாள் நறுநெய்* ஒரோர் தடா உண்ண*
இழந்தாள் எரிவினால்* ஈர்த்து எழில் மத்தின்*
பழந்தாம்பால் ஓச்ச* பயத்தால் தவழ்ந்தான்**
முழந்தாள் இருந்தவா காணீரே*
முகிழ்முலையீர் வந்து காணீரே
பிறங்கிய பேய்ச்சி* முலை சுவைத்து உண்டிட்டு*
உறங்குவான் போலே* கிடந்த இப்பிள்ளை*
மறம் கொள் இரணியன்* மார்வை முன் கீண்டான்*
குறங்குகளை வந்து காணீரே*
குவிமுலையீர் வந்து காணீரே
மத்தக் களிற்று* வசுதேவர் தம்முடைச்*
சித்தம் பிரியாத* தேவகிதன் வயிற்றில்*
அத்தத்தின் பத்தாம் நாள்* தோன்றிய அச்சுதன்*
முத்தம் இருந்தவா காணீரே*
முகிழ்நகையீர் வந்து காணீரே
இருங்கை மதகளிறு* ஈர்க்கின்றவனைப்*
பருங்கிப் பறித்துக்கொண்டு* ஓடும் பரமன்தன்*
நெருங்கு பவளமும்* நேர்நாணும் முத்தும்*
மருங்கும் இருந்தவா காணீரே*
வாணுதலீர் வந்து காணீரே
வந்த மதலைக்* குழாத்தை வலிசெய்து*
தந்தக் களிறு போல்* தானே விளையாடும்*
நந்தன் மதலைக்கு* நன்றும் அழகிய*
உந்தி இருந்தவா காணீரே*
ஒளியிழையீர்! வந்து காணீரே
அதிருங் கடல்நிற வண்ணனை* ஆய்ச்சி
மதுரமுலை ஊட்டி* வஞ்சித்து வைத்துப்*
பதறப் படாமே* பழந் தாம்பால் ஆர்த்த*
உதரம் இருந்தவா காணீரே*
ஒளிவளையீர் வந்து காணீரே
பெருமா உரலிற்* பிணிப்புண்டு இருந்து* அங்கு
இரு மா மருதம்* இறுத்த இப் பிள்ளை*
குருமா மணிப்பூண்* குலாவித் திகழும்*
திருமார்வு இருந்தவா காணீரே*
சேயிழையீர் வந்து காணீரே
நாள்கள் ஓர் நாலைந்து* திங்கள் அளவிலே*
தாளை நிமிர்த்துச்* சகடத்தைச் சாடிப்போய்*
வாள் கொள் வளைஎயிற்று* ஆருயிர் வவ்வினான்*
தோள்கள் இருந்தவா காணீரே*
சுரிகுழலீர் வந்து காணீரே
மைத்தடங்கண்ணி* யசோதை வளர்க்கின்ற*
செய்த்தலை நீல நிறத்துச்* சிறுப்பிள்ளை*
நெய்த்தலை நேமியும்* சங்கும் நிலாவிய*
கைத்தலங்கள் வந்து காணீரே*
கனங்குழையீர் வந்து காணீரே
வண்டு அமர் பூங்குழல்* ஆய்ச்சி மகனாகக்*
கொண்டு வளர்க்கின்ற* கோவலக் குட்டற்கு*
அண்டமும் நாடும்* அடங்க விழுங்கிய*
கண்டம் இருந்தவா காணீரே*
காரிகையீர்! வந்து காணீரே
எம் தொண்டை வாய்ச் சிங்கம்* வா என்று எடுத்துக்கொண்டு*
அந் தொண்டை வாய்* அமுது ஆதரித்து* ஆய்ச்சியர்
தம் தொண்டை வாயால்* தருக்கிப் பருகும்* இச்
செந் தொண்டை வாய் வந்து காணீரே*
சேயிழையீர்! வந்து காணீரே
நோக்கி யசோதை* நுணுக்கிய மஞ்சளால்*
நாக்கு வழித்து* நீராட்டும் இந் நம்பிக்கு*
வாக்கும் நயனமும்* வாயும் முறுவலும்*
மூக்கும் இருந்தவா காணீரே*
மொய்குழலீர் வந்து காணீரே
விண்கொள் அமரர்கள்* வேதனை தீர* முன்
மண்கொள் வசுதேவர்* தம் மகனாய் வந்து*
திண்கொள் அசுரரைத்* தேய வளர்கின்றான்*
கண்கள் இருந்தவா காணீரே*
கனவளையீர் வந்து காணீரே
பருவம் நிரம்பாமே* பாரெல்லாம் உய்யத்*
திருவின் வடிவு ஒக்கும்* தேவகி பெற்ற*
உருவு கரிய* ஒளி மணிவண்ணன்*
புருவம் இருந்தவா காணீரே*
பூண்முலையீர்! வந்து காணீரே
மண்ணும் மலையும்* கடலும் உலகு ஏழும்*
உண்ணுந் திறத்து* மகிழ்ந்து உண்ணும் பிள்ளைக்கு*
வண்ணம் எழில்கொள்* மகரக்குழை இவை*
திண்ணம் இருந்தவா காணீரே*
சேயிழையீர்! வந்து காணீரே
முற்றிலும் தூதையும்* முன்கைமேல் பூவையும்*
சிற்றில் இழைத்துத்* திரிதருவோர்களைப்*
பற்றிப் பறித்துக்கொண்டு* ஓடும் பரமன்தன்*
நெற்றி இருந்தவா காணீரே*
நேரிழையீர்! வந்து காணீரே
அழகிய பைம்பொன்னின்* கோல் அங்கைக் கொண்டு*
கழல்கள் சதங்கை* கலந்து எங்கும் ஆர்ப்ப*
மழ கன்றினங்கள்* மறித்துத் திரிவான்*
குழல்கள் இருந்தவா காணீரே*
குவிமுலையீர் வந்து காணீரே
சுருப்பார் குழலி* யசோதை முன் சொன்ன*
திருப் பாதகேசத்தைத்* தென்புதுவைப் பட்டன்*
விருப்பால் உரைத்த* இருபதோடு ஒன்றும்
உரைப்பார் போய்* வைகுந்தத்து ஒன்றியிருப்பரே (2)
போய்ப்பாடு உடைய நின் தந்தையும் தாழ்த்தான்* பொரு திறற் கஞ்சன் கடியன்*
காப்பாரும் இல்லை கடல்வண்ணா* உன்னை தனியே போய் எங்கும் திரிதி*
பேய்ப்பால் முலை உண்ட பித்தனே!* கேசவ நம்பீ! உன்னைக் காது குத்த*
ஆய்ப் பாலர் பெண்டுகள் எல்லாரும் வந்தார்* அடைக்காய் திருத்தி நான் வைத்தேன் (2)
வண்ணப் பவளம் மருங்கினிற் சாத்தி* மலர்ப்பாதக் கிண்கிணி ஆர்ப்ப*
நண்ணித் தொழும் அவர் சிந்தை பிரியாத* நாராயணா! இங்கே வாராய்*
எண்ணற்கு அரிய பிரானே* திரியை எரியாமே காதுக்கு இடுவன்*
கண்ணுக்கு நன்றும் அழகும் உடைய* கனகக் கடிப்பும் இவையாம்!
வையம் எல்லாம் பெறும் வார்கடல் வாழும்* மகரக்குழை கொண்டுவைத்தேன்*
வெய்யவே காதில் திரியை இடுவன்* நீ வேண்டிய தெல்லாம் தருவன்*
உய்ய இவ் ஆயர் குலத்தினில் தோன்றிய* ஒண்சுடர் ஆயர்கொழுந்தே*
மையன்மை செய்து இள ஆய்ச்சியர் உள்ளத்து* மாதவனே! இங்கே வாராய்
வணம் நன்று உடைய வயிரக் கடிப்பு இட்டு* வார்காது தாழப் பெருக்கிக்*
குணம் நன்று உடையர் இக் கோபால பிள்ளைகள்* கோவிந்தா! நீ சொல்லுக் கொள்ளாய்*
இணை நன்று அழகிய இக் கடிப்பு இட்டால்* இனிய பலாப்பழம் தந்து*
சுணம் நன்று அணி முலை உண்ணத் தருவன் நான்* சோத்தம் பிரான்! இங்கே வாராய்
சோத்தம் பிரான்! என்று இரந்தாலும் கொள்ளாய்* சுரிகுழலாரொடு நீ போய்க்*
கோத்துக் குரவை பிணைந்து இங்கு வந்தால்* குணங்கொண்டு இடுவனோ? நம்பீ*
பேர்த்தும் பெரியன அப்பம் தருவன்* பிரானே! திரியிட ஒட்டில்*
வேய்த் தடந்தோளார் விரும்பும் கருங்குழல்* விட்டுவே! நீ இங்கே வாராய்
விண்ணெல்லாம் கேட்க அழுதிட்டாய்!* உன்வாயில் விரும்பி அதனை நான் நோக்கி*
மண்ணெல்லாம் கண்டு என் மனத்துள்ளே அஞ்சி* மதுசூதனே என்று இருந்தேன்*
புண் ஏதும் இல்லை உன்காது மறியும்* பொறுத்து இறைப் போது இரு நம்பீ!
கண்ணா! என் கார்முகிலே! கடல்வண்ணா* காவலனே! முலை உணாயே
முலை ஏதும் வேண்டேன் என்று ஓடி* நின்காதிற் கடிப்பைப் பறித்து எறிந்திட்டு*
மலையை எடுத்து மகிழ்ந்து கல்-மாரி காத்துப்* பசுநிரை மேய்த்தாய்*
சிலை ஒன்று இறுத்தாய்! திரிவிக்கிரமா!* திரு ஆயர்பாடிப் பிரானே!*
தலை நிலாப் போதே உன்காதைப் பெருக்காதே* விட்டிட்டேன் குற்றமே அன்றே?
என் குற்றமே என்று சொல்லவும் வேண்டா காண்* என்னை நான் மண் உண்டேனாக*
அன்புற்று நோக்கி அடித்தும் பிடித்தும்* அனைவர்க்கும் காட்டிற்றிலையே?*
வன் புற்று அரவின் பகைக் கொடி* வாமன நம்பீ! உன்காதுகள் தூரும்*
துன்புற்றன எல்லாம் தீர்ப்பாய் பிரானே! திரியிட்டுச் சொல்லுகேன் மெய்யே
மெய் என்று சொல்லுவார் சொல்லைக் கருதித்* தொடுப்புண்டாய் வெண்ணெயை என்று*
கையைப் பிடித்துக் கரை உரலோடு என்னைக்* காணவே கட்டிற்றிலையே?*
செய்தன சொல்லிச் சிரித்து அங்கு இருக்கில்* சிரீதரா! உன்காது தூரும்*
கையிற் திரியை இடுகிடாய் இந்நின்ற* காரிகையார் சிரியாமே
காரிகையார்க்கும் உனக்கும் இழுக்கு உற்று என்* காதுகள் வீங்கி எரியில்?*
தாரியா தாகில் தலை நொந்திடும் என்று* விட்டிட்டேன் குற்றமே அன்றே?*
சேரியிற் பிள்ளைகள் எல்லாரும்- காது பெருக்கித்* திரியவும் காண்டி*
ஏர் விடை செற்று இளங்கன்று எறிந்திட்ட* இருடிகேசா! என்தன் கண்ணே!
கண்ணைக் குளிரக் கலந்து எங்கும் நோக்கிக்* கடிகமழ் பூங்குழலார்கள்*
எண்ணத்துள் என்றும் இருந்து* தித்திக்கும் பெருமானே! எங்கள் அமுதே*
உண்ணக் கனிகள் தருவன்* கடிப்பு ஒன்றும் நோவாமே காதுக்கு இடுவன்*
பண்ணைக் கிழியச் சகடம் உதைத்திட்ட* பற்பநாபா இங்கே வாராய்
வா என்று சொல்லி என்கையைப் பிடித்து* வலியவே காதிற் கடிப்பை*
நோவத் திரிக்கில் உனக்கு இங்கு இழுக்குற்று என்?* காதுகள் நொந்திடும் கில்லேன்*
நாவற் பழம் கொண்டுவைத்தேன்* இவை காணாய் நம்பீ* முன் வஞ்ச மகளைச்
சாவப் பால் உண்டு சகடு இறப் பாய்ந்திட்ட* தாமோதரா இங்கே வாராய்
வார் காது தாழப் பெருக்கி அமைத்து* மகரக்குழை இட வேண்டிச்*
சீரால் அசோதை திருமாலைச் சொன்ன சொல்* சிந்தையுள் நின்று திகழப்*
பார் ஆர் தொல் புகழான் புதுவை மன்னன்* பன்னிரு நாமத்தால் சொன்ன*
ஆராத அந்தாதிப் பன்னிரண்டும் வல்லார்* அச்சுதனுக்கு அடியாரே (2)
சீலைக் குதம்பை ஒருகாது* ஒருகாது செந்நிற மேற் தோன்றிப்பூ*
கோலப் பணைக் கச்சும் கூறை- உடையும்* குளிர் முத்தின் கோடாலமும்*
காலிப் பின்னே வருகின்ற* கடல்வண்ணன் வேடத்தை வந்து காணீர்*
ஞாலத்துப் புத்திரனைப் பெற்றார்* நங்கைமீர்! நானே மற்று ஆரும் இல்லை (2)
கன்னி நன் மா மதில் சூழ்தரு* பூம்பொழிற் காவிரித் தென்னரங்கம்*
மன்னிய சீர் மதுசூதனா! கேசவா!* பாவியேன் வாழ்வு உகந்து*
உன்னை இளங்கன்று மேய்க்கச்* சிறுகாலே ஊட்டி ஒருப்படுத்தேன்*
என்னின் மனம் வலியாள் ஒரு பெண் இல்லை* என்குட்டனே முத்தம் தா*
காடுகள் ஊடு போய்க்* கன்றுகள் மேய்த்து மறியோடிக்* கார்க்கோடற்பூச்-
சூடி வருகின்ற தாமோதரா!* கற்றுத் தூளி காண் உன் உடம்பு*
பேடை மயிற் சாயற் பின்னை மணாளா!* நீராட்டு அமைத்து வைத்தேன்*
ஆடி அமுதுசெய் அப்பனும் உண்டிலன்* உன்னோடு உடனே உண்பான்*
கடி ஆர் பொழில் அணி வேங்கடவா!* கரும் போரேறே!* நீ உகக்கும்-
குடையும் செருப்பும் குழலும்* தருவிக்கக் கொள்ளாதே போனாய் மாலே!*
கடிய வெங் கானிடைக் கன்றின் பின் போன* சிறுக்குட்டச் செங் கமல*
அடியும் வெதும்பி* உன்கண்கள் சிவந்தாய் அசைந்திட்டாய் நீ எம்பிரான்!*
பற்றார் நடுங்க முன் பாஞ்சசன்னியத்தை* வாய்வைத்த போரேறே!* என்
சிற்றாயர் சிங்கமே! சீதை மணாளா!* சிறுக்குட்டச் செங்கண் மாலே!*
சிற்றாடையும் சிறுப்பத்திரமும்* இவை கட்டிலின் மேல் வைத்துப் போய்*
கற்றாயரோடு நீ கன்றுகள் மேய்த்துக்* கலந்து உடன் வந்தாய் போலும்*
அஞ்சுடர் ஆழி உன் கையகத்து ஏந்தும் அழகா!* நீ பொய்கை புக்கு*
நஞ்சு உமிழ் நாகத்தினோடு பிணங்கவும்* நான் உயிர் வாழ்ந்திருந்தேன்*
என் செய்ய என்னை வயிறு மறுக்கினாய்?* ஏதும் ஓர் அச்சம் இல்லை*
கஞ்சன் மனத்துக்கு உகப்பனவே செய்தாய்* காயாம்பூ வண்ணம் கொண்டாய்!*
பன்றியும் ஆமையும் மீனமும் ஆகிய* பாற்கடல் வண்ணா!* உன்மேல்-
கன்றின் உருவாகி மேய்புலத்தே வந்த* கள்ள அசுரர் தம்மைச்*
சென்று பிடித்துச் சிறுக்கைகளாலே* விளங்காய் எறிந்தாய் போலும்*
என்றும் என்பிள்ளைக்குத் தீமைகள் செய்வார்கள்* அங்ஙனம் ஆவர்களே*
கேட்டு அறியாதன கேட்கின்றேன்* கேசவா! கோவலர் இந்திரற்குக்*
காட்டிய சோறும் கறியும் தயிரும்* கலந்து உடன் உண்டாய் போலும்*
ஊட்ட முதல் இலேன் உன்தன்னைக் கொண்டு* ஒருபோதும் எனக்கு அரிது*
வாட்டம் இலாப் புகழ் வாசுதேவா!* உன்னை அஞ்சுவன் இன்று தொட்டும்*
திண் ஆர் வெண்சங்கு உடையாய்!* திருநாள் திரு வோணம் இன்று எழு நாள்* முன்-
பண்நேர் மொழியாரைக் கூவி முளை அட்டிப்* பல்லாண்டு கூறுவித்தேன்*
கண்ணாலம் செய்யக்* கறியும் கலத்தது அரிசியும் ஆக்கி வைத்தேன்*
கண்ணா! நீ நாளைத்தொட்டுக் கன்றின் பின் போகேல்* கோலம் செய்து இங்கே இரு*
புற்றரவு அல்குல் அசோதை நல் ஆய்ச்சி* தன் புத்திரன் கோவிந்தனைக்*
கற்றினம் மேய்த்து வரக் கண்டு* உகந்து அவள் கற்பித்த மாற்றம் எல்லாம்*
செற்றம் இலாதவர் வாழ்தரு* தென்புது வை விட்டுசித்தன் சொல்*
கற்று இவை பாட வல்லார்* கடல்வண்ணன் கழலிணை காண்பர்களே (2)
உருப்பிணிநங்கை தன்னைமீட்பான்* தொடர்ந்துஓடிச்சென்ற*
உருப்பனைஓட்டிக் கொண்டிட்டு* உறைத்திட்டஉறைப்பன்மலை*
பொருப்பிடைக்கொன்றைநின்று* முறிஆழியும்காசும்கொண்டு*
விருப்பொடுபொன்வழங்கும்* வியன்மாலிருஞ்சோலையதே. (2)
கஞ்சனும்காளியனும்* களிறும்மருதும்எருதும்*
வஞ்சனையில்மடிய* வளர்ந்தமணிவண்ணன்மலை*
நஞ்சுஉமிழ்நாகம்எழுந்துஅணவி* நளிர்மாமதியைச்*
செஞ்சுடர்நாவளைக்கும்* திருமாலிருஞ்சோலையதே.
மன்னுநரகன்தன்னைச்* சூழ்போகிவளைத்துஎறிந்து*
கன்னிமகளிர்தம்மைக்* கவர்ந்தகடல்வண்ணன்மலை*
புன்னைசெருந்தியொடு* புனவேங்கையும்கோங்கும்நின்று*
பொன்அரிமாலைகள்சூழ்* பொழில்மாலிருஞ்சோலையதே.
மாவலிதன்னுடைய* மகன்வாணன்மகள்இருந்த*
காவலைக்கட்டழித்த* தனிக் காளை கருதும் மலை*
கோவலர்கோவிந்தனைக்* குற மாதர்கள் பண் குறிஞ்சிப்*
பாஒலிபாடிநடம்பயில்* மாலிருஞ் சோலையதே.
பலபலநாழம்சொல்லிப்* பழித்தசிசுபாலன்தன்னை*
அலைவலைமை தவிர்த்த* அழகன்அலங்காரன்மலை*
குலமலைகோலமலை* குளிர்மாமலைகொற்றமலை*
நிலமலைநீண்டமலை* திருமாலிருஞ்சோலையதே.
பாண்டவர்தம்முடைய* பாஞ்சாலிமறுக்கம்எல்லாம்*
ஆண்டுஅங்கு நூற்றுவர்தம்* பெண்டிர்மேல்வைத்த அப்பன்மலை*
பாண்தகு வண்டினங்கள்* பண்கள்பாடிமதுப்பருக*
தோண்டல்உடையமலை* தொல்லைமாலிருஞ்சோலையதே.
கனங்குழையாள்பொருட்டாக் கணைபாரித்து* அரக்கர்தங்கள்-
இனம்கழுஏற்றுவித்த* ஏழிற்தோள்எம்இராமன்மலை*
கனம்கொழிதெள்அருவி* வந்துசூழ்ந்துஅகல்ஞாலம்எல்லாம்*
இனம்குழுஆடும்மலை* எழில்மாலிருஞ்சோலையதே.
எரிசிதறும்சரத்தால்* இலங்கையினைத்* தன்னுடைய-
வரிசிலைவாயிற்பெய்து* வாய்க்கோட்டம்தவிர்த்துஉகந்த*
அரையன்அமரும்மலை* அமரரொடுகோனும்சென்று*
திரிசுடர்சூழும்மலை* திருமாலிருஞ்சோலையதே.
கோட்டுமண்கொண்டுஇடந்து* குடங்கையில்மண்கொண்டுஅளந்து*
மீட்டும்அதுஉண்டுஉமிழ்ந்து* விளையாடும்விமலன்மலை*
ஈட்டியபல்பொருள்கள்* எம்பிரானுக்குஅடியுறைஎன்று*
ஓட்டரும்தண்சிலம்பாறுஉடை* மாலிருஞ்சோலையதே.
ஆயிரம்தோள்பரப்பி* முடிஆயிரம்மின்இலக*
ஆயிரம்பைந்தலைய* அனந்தசயனன்ஆளும்மலை*
ஆயிரம்ஆறுகளும்* சுனைகள்பலஆயிரமும்*
ஆயிரம்பூம்பொழிலும்உடை* மாலிருஞ்சோலையதே (2)
மாலிருஞ்சோலைஎன்னும்* மலையைஉடையமலையை*
நாலிருமூர்த்திதன்னை* நால்வேதக்-கடல்அமுதை*
மேல்இருங்கற்பகத்தை* வேதாந்தவிழுப்பொருளின்*
மேல்இருந்தவிளக்கை* விட்டுசித்தன்விரித்தனனே (2)
துக்கச் சுழலையைச் சூழ்ந்து கிடந்த* வலையை அறப்பறித்துப்*
புக்கினில் புக்குன்னைக் கண்டுகொண்டேன்* இனிப்போக விடுவதுண்டே?*
மக்கள் அறுவரைக் கல்லிடைமோத* இழந்தவள் தன்வயிற்றில்*
சிக்கென வந்து பிறந்து நின்றாய்!* திருமாலிருஞ்சோலை எந்தாய்!* (2)
வளைத்துவைத்தேன் இனிப்போகலொட்டேன்* உன்தன் இந்திரஞாலங்களால்*
ஒளித்திடில் நின் திருவாணை கண்டாய்* நீ ஒருவர்க்கும் மெய்யனல்லை*
அளித்தெங்கும் நாடும்நகரமும்* தம்முடைத் தீவினைதீர்க்கலுற்று*
தெளித்துவலஞ்செய்யும் தீர்த்தமுடைத்* திருமாலிருஞ்சோலை எந்தாய்!
உனக்குப் பணிசெய்திருக்கும் தவமுடையேன்,* இனிப்போய்ஒருவன்-
தனக்குப்பணிந்து* கடைத்தலைநிற்கை* நின்சாயையழிவுகண்டாய்*
புனத்தினைக் கிள்ளிப்புதுவவி காட்டி* உன்பொன்னடிவாழ்கவென்று*
இனத்துக்குறவர் புதியதுண்ணும்* எழில்மாலிருஞ்சோலை எந்தாய்! (2)
காதம்பலவும் திரிந்து உழன்றேற்கு* அங்கோர்நிழலில்லை நீருமில்லை* உன்-
பாதநிழலல்லால் மற்றோருயிர்ப்பிடம்* நான்எங்கும்காண்கின்றிலேன்*
தூதுசென்றாய்! குருபாண்டவர்க்காய்* அங்கோர்பொய்ச்சுற்றம்பேசிச்சென்று*
பேதஞ்செய்து எங்கும் பிணம்படைத்தாய்!* திருமாலிருஞ்சோலை எந்தாய்!
காலுமெழா கண்ணநீரும் நில்லா* உடல்சோர்ந்து நடுங்கி* குரல்-
மேலுமெழா மயிர்க்கூச்சுமறா* எனதோள்களும் வீழ்வொழியா*
மாலுகளாநிற்கும் என்மனனே!* உன்னை வாழத்தலைப்பெய்திட்டேன்*
சேலுகளாநிற்கும் நீள்சுனைசூழ்* திருமாலிருஞ்சோலை எந்தாய்!
எருத்துக் கொடியுடையானும்* பிரமனும் இந்திரனும்* மற்றும்-
ஒருத்தரும் இப்பிறவியென்னும் நோய்க்கு* மருந்து அறிவாருமில்லை*
மருத்துவனாய் நின்ற மாமணிவண்ணா! மறுபிறவிதவிரத்-
திருத்தி* உன்கோயில் கடைப்புகப்பெய்* திருமாலிருஞ்சோலை எந்தாய்!
அக்கரையென்னுமனத்தக் கடலுள் அழுந்தி* உன்பேரருளால்*
இக்கரையேறி இளைத்திருந்தேனை* அஞ்சேலென்று கைகவியாய்*
சக்கரமும் தடக்கைகளும்* கண்களும் பீதகவாடையொடும்*
செக்கர் நிறத்துச் சிவப்புடையாய்!* திருமாலிருஞ்சோலை எந்தாய்!
எத்தனைகாலமும் எத்தனையூழியும்* இன்றொடுநாளையென்றே*
இத்தனைகாலமும் போய்க்கிறிப்பட்டேன்* இனிஉன்னைப்போகலொட்டேன்*
மைத்துனன்மார்களைவாழ்வித்து* மாற்றலர்நூற்றுவரைக்கெடுத்தாய்!*
சித்தம் நின்பாலதறிதியன்றே* திருமாலிருஞ்சோலை எந்தாய்!
அன்று வயிற்றில் கிடந்திருந்தே* அடிமைசெய்யலுற்றிருப்பன்*
இன்றுவந்துஇங்கு உன்னைக்கண்டுகொண்டேன்* இனிப்போகவிடுவதுண்டே?*
சென்றங்குவாணனை ஆயிரந்தோளும்* திருச்சக்கரமதனால்*
தென்றித்திசைதிசைவீழச்செற்றாய்!* திருமாலிருஞ்சோலை எந்தாய்!
சென்றுலகம் குடைந்தாடும் சுனைத்* திருமாலிருஞ்சோலை தன்னுள்-
நின்றபிரான்* அடிமேல் அடிமைத்திறம்* நேர்படவிண்ணப்பஞ்செய்*
பொன்திகழ்மாடம் பொலிந்துதோன்றும்* புதுவைக்கோன்விட்டுசித்தன்*
ஒன்றினோடு ஒன்பதும் பாடவல்லார்* உலகமளந்தான்தமரே. (2)