பிரபந்த தனியன்கள்

நேரிசை வெண்பா
வாழிபரகாலன் வாழிகலிகன்றி*
வாழிகுறையலூர் வாழ்வேந்தன்*
வாழியரோ மாயோனை வாழ்வலியால் மந்திரங்கொள்* 
மங்கையர்கோன் நூயோன் சுடர்மானவேல்.
கட்டளைக் கலித்துறை
நெஞ்சுக்கிருள்கடிதீபம் அடங்கா நெடும்பிறவி*
நஞ்சுக்கு நல்லவமுதம் தமிழ நன்னூல் துறைகள்*
அஞ்சுக்கிலக்கியம் ஆரணசாரம் பரசமயப்*
பஞ்சுக்கனலின் பொறி பரகாலன் பனுவல்களே.
நேரிசை வெண்பா 
எங்கள்கதியே! இராமானுசமுனியே!*
சங்கைகெடுத்தாண்ட தவராசா*
பொங்குபுகழ் மங்கையர்கோனீந்த மறையாயிரமனைத்தும்*
தங்குமனம் நீயெனக்குத் தா.

   பாசுரங்கள்


    ஏனம் முன் ஆகி இரு நிலம் இடந்து*  அன்று இணை அடி இமையவர் வணங்க* 
    தானவன் ஆகம் தரணியில் புரளத்*  தடஞ் சிலை குனித்த என் தலைவன்*

    தேன் அமர் சோலைக் கற்பகம் பயந்த*  தெய்வ நல் நறு மலர் கொணர்ந்து* 
    வானவர் வணங்கும் கங்கையின் கரைமேல்*  வதரி ஆச்சிரமத்து உள்ளானே.  (2)   


    கானிடை உருவை சுடு சரம் துரந்து*  கண்டு முன் கொடுந் தொழில் உரவோன்* 
    ஊன் உடை அகலத்து அடு கணை குளிப்ப*  உயிர் கவர்ந்து உகந்த எம் ஒருவன்* 

    தேன் உடைக் கமலத்து அயனொடு தேவர்*  சென்று சென்று இறைஞ்சிட*
    பெருகு வானிடை முது நீர்க் கங்கையின் கரைமேல்*  வதரி ஆச்சிரமத்து உள்ளானே.   


    இலங்கையும் கடலும் அடல் அரும் துப்பின்*  இரு நிதிக்கு இறைவனும்*
    அரக்கர் குலங்களும் கெட முன் கொடுந் தொழில் புரிந்த கொற்றவன்*  கொழுஞ் சுடர் சுழன்ற* 

    விலங்கலில் உரிஞ்சி மேல்நின்ற விசும்பில்*  வெண் துகில் கொடி என விரிந்து* 
    வலம் தரு மணி நீர்க் கங்கையின் கரைமேல்*  வதரி ஆச்சிரமத்து உள்ளானே.       


    துணிவு இனி உனக்குச் சொல்லுவன் மனமே!*  தொழுது எழு தொண்டர்கள் தமக்குப்* 
    பிணி ஒழித்து அமரர் பெரு விசும்பு அருளும்*  பேர் அருளாளன் எம் பெருமான்* 

    அணி மலர்க் குழலார் அரம்பையர் துகிலும்*  ஆரமும் வாரி வந்து*
    அணி நீர் மணி கொழித்து இழிந்த கங்கையின் கரைமேல்*  வதரி ஆச்சிரமத்து உள்ளானே.        


    பேய் இடைக்கு இருந்து வந்த மற்று அவள் தன்*  பெரு முலை சுவைத்திட*
    பெற்ற தாய் இடைக்கு இருத்தல் அஞ்சுவன் என்று தளர்ந்திட*  வளர்ந்த என் தலைவன்*

    சேய் முகட்டு உச்சி அண்டமும் சுமந்த*  செம்பொன் செய் விலங்கலில் இலங்கு,* 
    வாய் முகட்டு இழிந்த கங்கையின் கரைமேல்,*  வதரி ஆச்சிரமத்து உள்ளானே


    தேர் அணங்கு அல்குல் செழுங் கயல் கண்ணி திறத்து*  ஒரு மறத் தொழில் புரிந்து* 
    பார் அணங்கு இமில் ஏறு ஏழும் முன் அடர்த்த*  பனி முகில் வண்ணன் எம் பெருமான்

    காரணம் தன்னால் கடும் புனல் கயத்த*  கரு வரை பிளவு எழக் குத்தி* 
    வாரணம் கொணர்ந்த கங்கையின் கரைமேல்*  வதரி ஆச்சிரமத்து உள்ளானே.


    வெம் திறல் களிறும் வேலைவாய் அமுதும்*  விண்ணொடு விண்ணவர்க்கு அரசும்* 
    இந்திரற்கு அருளி எமக்கும் ஈந்தருளும்*  எந்தை எம் அடிகள் எம் பெருமான்*

    அந்தரத்து அமரர் அடி இணை வணங்க*  ஆயிரம் முகத்தினால் அருளி* 
    மந்தரத்து இழிந்த கங்கையின் கரைமேல்* வதரி ஆச்சிரமத்து உள்ளானே.  


    மான் முனிந்து ஒரு கால் வரி சிலை வளைத்த*  மன்னவன் பொன் நிறத்து உரவோன்* 
    ஊன் முனிந்து அவனது உடல் இரு பிளவா*  உகிர் நுதி மடுத்து அயன் அரனைத்* 

    தான் முனிந்து இட்ட*  வெம் திறல் சாபம் தவிர்த்தவன்*
    தவம்புரிந்து உயர்ந்த மா முனி கொணர்ந்த கங்கையின் கரைமேல்*  வதரி ஆச்சிரமத்து உள்ளானே. 


    கொண்டல் மாருதங்கள் குல வரை தொகு நீர்க்*  குரை கடல் உலகு உடன் அனைத்தும்* 
    உண்ட மா வயிற்றோன் ஒண் சுடர் ஏய்ந்த*  உம்பரும் ஊழியும் ஆனான்* 

    அண்டம் ஊடு அறுத்து அன்று அந்தரத்து இழிந்து*  அங்கு அவனியாள் அலமரப்*
    பெருகும் மண்டு மா மணி நீர்க் கங்கையின் கரைமேல்*  வதரி ஆச்சிரமத்து உள்ளானே. 


    வரும் திரை மணி நீர்க் கங்கையின் கரைமேல்*  வதரி ஆச்சிரமத்து உள்ளானை* 
    கருங் கடல் முந்நீர் வண்ணனை எண்ணி*  கலியன் வாய் ஒலிசெய்த பனுவல்* 

    வரம்செய்த ஐந்தும் ஐந்தும் வல்லார்கள்*  வானவர் உலகு உடன் மருவி* 
    இருங் கடல் உலகம் ஆண்டு வெண் குடைக் கீழ்*  இமையவர் ஆகுவர் தாமே. (2)


    அன்று ஆயர் குலக் கொடியோடு*  அணி மாமலர் மங்கையொடு அன்பு அளவி*  
    அவுணர்க்கு என்றானும் இரக்கம் இலாதவனுக்கு*  உறையும் இடம் ஆவது*

    இரும் பொழில் சூழ் நன்று ஆய புனல் நறையூர் திருவாலி குடந்தை*  தடம் திகழ் கோவல்நகர்* 
    நின்றான் இருந்தான் கிடந்தான் நடந்தாற்கு இடம்*  மா மலை ஆவது நீர்மலையே.


    காண்டாவனம் என்பது ஓர் காடு*  அமரர்க்கு அரையன்னது கண்டு அவன் நிற்க*
    முனே மூண்டு ஆர் அழல் உண்ண முனிந்ததுவும் அது அன்றியும்* முன் உலகம் பொறை தீர்த்து ஆண்டான்*

    அவுணன் அவன் மார்வு அகலம் உகிரால் வகிர் ஆக முனிந்து*  அரியாய்  நீண்டான்* 
    குறள் ஆகி நிமிர்ந்தவனுக்கு இடம்*  மா மலை ஆவது நீர்மலையே*  


    அலம் மன்னும் அடல் சுரி சங்கம் எடுத்து*  அடல் ஆழியினால் அணி ஆர் உருவில்* 
    புலம் மன்னும் வடம் புனை கொங்கையினாள்*  பொறை தீர முன் ஆள் அடு வாள் அமரில்* 

    பல மன்னர் பட சுடர் ஆழியினைப்*  பகலோன் மறையப் பணிகொண்டு அணிசேர்* 
    நில மன்னனும் ஆய் உலகு ஆண்டவனுக்கு இடம்*  மா மலை ஆவது நீர்மலையே.


    தாங்காதது ஓர் ஆள் அரி ஆய்*  அவுணன் தனை வீட முனிந்து அவனால் அமரும்* 
    பூங் கோதையர் பொங்கு எரி மூழ்க விளைத்து அது அன்றியும்*  வென்றி கொள் வாள் அமரில்*

    பாங்கு ஆக முன் ஐவரொடு அன்பு அளவி*  பதிற்றைந்து இரட்டிப் படை வேந்தர் பட* 
    நீங்காச் செருவில் நிறை காத்தவனுக்கு இடம்*  மா மலை ஆவது நீர்மலையே.      


    மாலும் கடல் ஆர மலைக் குவடு இட்டு*  அணை கட்டி வரம்பு உருவ*
    மதி சேர் கோல மதிள் ஆய இலங்கை கெட*  படை தொட்டு ஒருகால் அமரில் அதிர*

    காலம் இது என்று அயன் வாளியினால்*  கதிர் நீள் முடி பத்தும் அறுத்து அமரும்* 
    நீல முகில் வண்ணன் எமக்கு இறைவற்கு இடம்*  மா மலை ஆவது நீர்மலையே.   


    பார் ஆர் உலகும் பனி மால் வரையும்*  கடலும் சுடரும் இவை உண்டும்*
    எனக்கு ஆராது என நின்றவன் எம் பெருமான்*  அலை நீர் உலகுக்கு அரசு ஆகிய*

    அப் பேரானை முனிந்த முனிக்கு அரையன்*  பிறர் இல்லை நுனக்கு எனும் எல்லையினான்* 
    நீர் ஆர் பெயரான் நெடுமால் அவனுக்கு இடம்*  மா மலை ஆவது நீர்மலையே. 


    புகர் ஆர் உரு ஆகி முனிந்தவனைப்*  புகழ் வீட முனிந்து உயிர் உண்டு*
    அசுரன் நகர் ஆயின பாழ்பட நாமம் எறிந்து அது அன்றியும்*  வென்றி கொள் வாள் அவுணன்* 

    பகராதவன் ஆயிரம் நாமம்*  அடிப் பணியாதவனை பணியால் அமரில்* 
    நிகர் ஆயவன் நெஞ்சு இடந்தான் அவனுக்கு இடம்*  மா மலை ஆவது நீர்மலையே. 


    பிச்சச் சிறு பீலி பிடித்து*  உலகில் பிணம் தின் மடவார் அவர் போல்* 
    அங்ஙனே அச்சம் இலர் நாண் இலர் ஆதன்மையால்*  அவர் செய்கை வெறுத்து அணி மா மலர் தூய்*

    நச்சி நமனார் அடையாமை*  நமக்கு அருள்செய் என உள் குழைந்து ஆர்வமொடு* 
    நிச்சம் நினைவார்க்கு அருள்செய்யும் அவற்கு இடம்*  மா மலை ஆவது நீர்மலையே. 


    பேசும் அளவு அன்று இது வம்மின்*  நமர் பிறர் கேட்பதன் முன் பணிவார் வினைகள்* 
    நாசம் அது செய்திடும் ஆதன்மையால்*  அதுவே நமது உய்விடம் நாள்மலர்மேல்*

    வாசம் அணி வண்டு அறை பைம் புறவின்*  மனம் ஐந்தொடு நைந்து உழல்வார்*
    மதிஇல் நீசர் அவர் சென்று அடையாதவனுக்கு இடம்*  மா மலை ஆவது நீர்மலையே. 


    நெடுமால் அவன் மேவிய நீர்மலைமேல்*  நிலவும் புகழ் மங்கையர் கோன்*
    அமரில் கட மா களி யானை வல்லான்*  கலியன் ஒலி செய் தமிழ் மாலை வல்லார்க்கு*

    உடனே விடும் மால் வினை*  வேண்டிடில் மேல் உலகும் எளிது ஆயிடும் அன்றி இலங்கு ஒலி சேர்* 
    கொடு மா கடல் வையகம் ஆண்டு*  மதிக் குடை மன்னவர் ஆய் அடி கூடுவரே. (2)


    ஒரு குறள் ஆய் இரு நிலம் மூவடி மண் வேண்டி*  உலகு அனைத்தும் ஈர் அடியால் ஒடுக்கி*
    ஒன்றும் தருக எனா மாவலியைச் சிறையில் வைத்த*  தாடாளன் தாள் அணைவீர்*

    தக்க கீர்த்தி அரு மறையின் திரள் நான்கும் வேள்வி ஐந்தும்*  அங்கங்கள் அவை ஆறும் இசைகள் ஏழும்* 
    தெருவில் மலி விழா வளமும் சிறக்கும் காழிச்*  சீராமவிண்ணகரே சேர்மின் நீரே. (2) 


    நான்முகன் நாள் மிகைத் தருக்கை இருக்கு வாய்மை*  நலம் மிகு சீர் உரோமசனால் நவிற்றி*
    நக்கன் ஊன்முகம் ஆர் தலை ஓட்டு ஊண் ஒழித்த எந்தை*  ஒளி மலர்ச் சேவடி அணைவீர்*

    உழு சே ஓடச் சூல் முகம் ஆர் வளை அளைவாய் உகுத்த முத்தைத்*  தொல் குருகு சினை எனச் சூழ்ந்து இயங்க*
    எங்கும் தேன் முகம் ஆர் கமல வயல் சேல் பாய்*  காழிச் சீராமவிண்ணகரே சேர்மின் நீரே.


    வை அணைந்த நுதிக் கோட்டு வராகம் ஒன்று ஆய்*  மண் எல்லாம் இடந்து எடுத்து மதங்கள் செய்து* 
    நெய் அணைந்த திகிரியினால் வாணன் திண் தோள்*  நேர்த்தவன் தாள் அணைகிற்பீர்*

    நெய்தலோடு மை அணைந்த குவளைகள் தம் கண்கள் என்றும்*  மலர்க் குமுதம் வாய் என்றும் கடைசிமார்கள்* 
    செய் அணைந்து களை களையாது ஏறும்*  காழிச் சீராமவிண்ணகரே சேர்மின் நீரே.


    பஞ்சிய மெல் அடிப் பின்னைதிறத்து*  முன் நாள் பாய் விடைகள் ஏழ் அடர்த்து பொன்னன் பைம் பூண்* 
    நெஞ்சு இடந்து குருதி உக உகிர் வேல் ஆண்ட*  நின்மலன் தாள் அணைகிற்பீர்*

    நீலம் மாலைத் தஞ்சு உடைய இருள் தழைப்ப தரளம் ஆங்கே*  தண் மதியின் நிலாக் காட்ட பவளம் தன்னால்* 
    செஞ் சுடர் வெயில் விரிக்கும் அழகு ஆர்*  காழிச் சீராமவிண்ணகரே சேர்மின் நீரே.


    தெவ் ஆய மற மன்னர் குருதி கொண்டு*  திருக் குலத்தில் இறந்தோர்க்குத் திருத்திசெய்து* 
    வெவ் வாய மா கீண்டு வேழம் அட்ட*  விண்ணவர் கோன் தாள் அணைவீர்*

    விகிர்த மாதர் அவ் ஆய வாள் நெடுங் கண் குவளை காட்ட*  அரவிந்தம் முகம் காட்ட அருகே ஆம்பல்* 
    செவ் வாயின் திரள் காட்டும் வயல் சூழ்*  காழிச் சீராமவிண்ணகரே சேர்மின் நீரே.   


    பைங் கண் விறல் செம் முகத்து வாலி மாள*  படர் வனத்துக் கவந்தனொடும் படை ஆர் திண் கை* 
    வெம் கண் விறல் விராதன் உக வில் குனித்த*  விண்ணவர் கோன் தாள் அணைவீர்* 

    வெற்புப்பாலும துங்க முக மாளிகை மேல் ஆயம் கூறும்*  துடி இடையார் முகக் கமலச் சோதி தன்னால்* 
    திங்கள் முகம் பனி படைக்கும் அழகு ஆர்*  காழிச் சீராமவிண்ணகரே சேர்மின் நீரே.


    பொரு இல் வலம் புரி அரக்கன் முடிகள் பத்தும்*  புற்று மறிந்தன போலப் புவிமேல் சிந்த* 
    செருவில் வலம் புரி சிலைக் கை மலைத் தோள் வேந்தன்*  திருவடி சேர்ந்து உய்கிற்பீர்*

    திரை நீர்த் தெள்கி மருவி வலம்புரி கைதைக் கழி ஊடு ஆடி*  வயல் நண்ணி மழை தரு நீர் தவழ் கால் மன்னி* 
    தெருவில் வலம்புரி தரளம் ஈனும்*  காழிச் சீராமவிண்ணகரே சேர்மின் நீரே.         


    பட்டு அரவு ஏர் அகல் அல்குல் பவளச் செவ் வாய்*  பணை நெடுந் தோள் பிணை நெடுங்கண் பால்ஆம் இன்சொல்* 
    மட்டு அவிழும் குழலிக்கா வானோர் காவின்*  மரம் கொணர்ந்தான் அடி அணைவீர்*

    அணில்கள் தாவ நெட்டு இலைய கருங் கமுகின் செங்காய்வீழ*  நீள் பலவின் தாழ் சினையில் நெருங்கு*
    பீனத்தெட்டபழம் சிதைந்து மதுச் சொரியும்*  காழிச்சீராம விண்ணகரே சேர்மின் நீரே. 


    பிறைதங்கு சடையானை வலத்தே வைத்து*  பிரமனைத் தன் உந்தியிலே தோற்றுவித்து* 
    கறைதங்கு வேல்தடங்கண் திருவைமார்பில்*  கலந்தவன் தாள்அணைகிற்பீர்*

    கழுநீர்கூடி துறைதங்கு கமலத்துத்துயின்று*  கைதைத் தோடுஆரும் பொதிசோற்றுச் சுண்ணம்நண்ணி* 
    சிறைவண்டு களிபாடும் வயல்சூழ்*  காழிச்சீராம விண்ணகரே சேர்மின்நீரே.    


    செங்கமலத்து அயன்அனைய மறையோர்*  காழிச் சீராமவிண்ணகர் என்செஙகண்மாலை* 
    அம்கமலத் தடவயல்சூழ் ஆலிநாடன்*  அருள்மாரி அரட்டுஅமுக்கி அடையார்சீயம்*

    கொங்குமலர்க் குழலியர்வேள் மங்கைவேந்தன்*  கொற்றவேல் பரகாலன் கலியன் சொன்ன* 
    சங்கமுகத் தமிழ்மாலை பத்தும் வல்லார்*  தடங்கடல்சூழ் உலகுக்குத் தலைவர் தாமே. (2) 


    மாற்றரசர் மணி முடியும் திறலும் தேசும்*  மற்று அவர்தம் காதலிமார் குழையும்*
    தந்தை  கால் தளையும் உடன் கழல வந்து தோன்றி*  கத நாகம் காத்து அளித்த கண்ணர் கண்டீர்*

    நூற்றிதழ் கொள் அரவிந்தம் நுழைந்த பள்ளத்து*  இளங் கமுகின் முது பாளை பகு வாய் நண்டின்* 
    சேற்று அளையில் வெண் முத்தம் சிந்தும் நாங்கூர்த்*  திருத்தெற்றியம்பலத்து என் செங் கண் மாலே. (2)


    பொற்றொடித் தோள் மட மகள் தன் வடிவு கொண்ட*  பொல்லாத வன் பேய்ச்சி கொங்கை வாங்கி* 
    பெற்று எடுத்த தாய்போல மடுப்ப*  ஆரும் பேணா நஞ்சு உண்டு உகந்த பிள்ளை கண்டீர்*

    நெல் தொடுத்த மலர் நீலம் நிறைந்த சூழல்*  இருஞ் சிறைய வண்டு ஒலியும் நெடுங்கணார்தம்* 
    சிற்றடிமேல் சிலம்பு ஒலியும் மிழற்றும் நாங்கூர்த்*  திருத்தெற்றியம்பலத்து என்செங்கண் மாலே.


    படல் அடைத்த சிறு குரம்பை நுழைந்து புக்கு*  பசு வெண்ணெய் பதம் ஆர பண்ணை முற்றும்* 
    அடல் அடர்த்த வேல் கணார் தோக்கை பற்றி*  அலந்தலைமை செய்து உழலும் ஐயன் கண்டீர்*

    மடல் எடுத்த நெடுந் தெங்கின் பழங்கள் வீழ*  மாங்கனிகள் திரட்டு உருட்டாவரு நீர்ப் பொன்னி* 
    திடல் எடுத்து மலர் சுமந்து அங்கு இழியும் நாங்கூர்த்*  திருத்தெற்றியம்பலத்து என் செங் கண் மாலே* 


    வார் ஆரும் முலை மடவாள் பின்னைக்கு ஆகி*  வளை மருப்பின் கடுஞ் சினத்து வன் தாள் ஆர்ந்த* 
    கார் ஆர் திண் விடை அடர்த்து வதுவை ஆண்ட*  கரு முகில்போல் திரு நிறத்து என் கண்ணர் கண்டீர்*

    ஏர் ஆரும் மலர்ப் பொழில்கள் தழுவி எங்கும்*  எழில் மதியைக் கால் தொடர விளங்கு சோதிச்* 
    சீர் ஆரும் மணி மாடம் திகழும் நாங்கூர்த்*  திருத்தெற்றியம்பலத்து என் செங் கண் மாலே.


    கலை இலங்கும் அகல் அல்குல் கமலப் பாவை*  கதிர் முத்த வெண் நகையாள் கருங் கண் ஆய்ச்சி* 
    முலை இலங்கும் ஒளி மணிப் பூண் வடமும் தேய்ப்ப*  மூவாத வரை நெடுந் தோள் மூர்த்தி கண்டீர்* 

    மலை இலங்கு நிரைச் சந்தி மாட வீதி*  ஆடவரை மட மொழியார் முகத்து*  இரண்டு 
    சிலை விலங்கி மனம் சிறை கொண்டு இருக்கும் நாங்கூர்த்*  திருத்தெற்றியம்பலத்து என்செங்கண்மாலே.   


    தான்போலும் ஏன்று எழுந்தான் தரணியாளன்*  அது கண்டு தரித்திருப்பான் அரக்கர் தங்கள்*    
    கோன்போலும் ஏன்று எழுந்தான் குன்றம் அன்ன*  இருபது தோள் உடன் துணித்த ஒருவன் கண்டீர்*

    மான்போலும் மென் நோக்கின் செய்ய வாயார்*  மரகதம்போல் மடக் கிளியைக் கைமேல் கொண்டு* 
    தேன்போலும் மென் மழலை பயிற்றும் நாங்கூர்த்*  திருத்தெற்றியம்பலத்து என் செங் கண் மாலே.


    பொங்கு இலங்கு புரி நூலும் தோலும் தாழப்*  பொல்லாத குறள் உரு ஆய் பொருந்தா வாணன்* 
    மங்கலம் சேர் மறை வேள்வி-அதனுள் புக்கு*  மண் அகலம் குறை இரந்த மைந்தன் கண்டீர்*

    கொங்கு அலர்ந்த மலர்க் குழலார் கொங்கை தோய்ந்த*  குங்குமத்தின் குழம்பு அளைந்த கோலம்தன்னால்* 
    செங் கலங்கல் வெண் மணல்மேல் தவழும் நாங்கூர்த்*  திருத்தெற்றியம்பலத்து என் செங் கண் மாலே.


    சிலம்பின் இடைச் சிறு பரல்போல் பெரிய மேரு*  திருக் குளம்பில் கணகணப்ப திரு ஆகாரம் குலுங்க*
    நிலமடந்தைதனை இடந்து புல்கிக்*  கோட்டிடை வைத்தருளிய எம் கோமான் கண்டீர்* 

    இலங்கிய நால் மறை அனைத்தும் அங்கம் ஆறும்*  ஏழ் இசையும் கேள்விகளும் எண் திக்கு எங்கும்* 
    சிலம்பிய நல் பெருஞ் செல்வம் திகழும் நாங்கூர்த்*  திருத்தெற்றியம்பலத்து என்செங்கண்மாலே.


    ஏழ் உலகும் தாழ் வரையும் எங்கும் மூடி*  எண் திசையும் மண்டலமும் மண்டி*
    அண்டம் மோழை எழுந்து ஆழி மிகும் ஊழி வெள்ளம்*  முன் அகட்டில் ஒடுக்கிய எம் மூர்த்தி கண்டீர்*

    ஊழிதொறும் ஊழிதொறும் உயர்ந்த செல்வத்து*  ஓங்கிய நான்மறை அனைத்தும் தாங்கும் நாவர்* 
    சேழ் உயர்ந்த மணி மாடம் திகழும் நாங்கூர்த்*  திருத்தெற்றியம்பலத்து என்செங்கண்மாலே.


    சீர் அணிந்த மணி மாடம் திகழும் நாங்கூர்த்*  திருத்தெற்றியம்பலத்து என்செங்கண்மாலை* 
    கூர் அணிந்த வேல் வலவன் ஆலி நாடன்*  கொடி மாட மங்கையர் கோன் குறையல் ஆளி*

    பார் அணிந்த தொல் புகழான் கலியன் சொன்ன*  பாமாலை இவை ஐந்தும் ஐந்தும் வல்லார்* 
    சீர் அணிந்த உலகத்து மன்னர் ஆகி*  சேண் விசும்பில் வானவர் ஆய்த் திகழ்வர் தாமே*


    உந்திமேல் நான்முகனைப் படைத்தான்*  உலகு உண்டவன்
    எந்தை பெம்மான்*  இமையோர்கள் தாதைக்கு இடம் என்பரால்*

    சந்தினோடு மணியும் கொழிக்கும்*  புனல் காவிரி* 
    அந்திபோலும் நிறத்து ஆர் வயல் சூழ்*  தென் அரங்கமே.          


    வையம் உண்டு ஆல் இலை மேவும் மாயன்*  மணி நீள் முடி* 
    பைகொள் நாகத்து அணையான்*  பயிலும் இடம் என்பரால்*

    தையல் நல்லார் குழல் மாலையும்*  மற்று அவர் தட முலைச்*
    செய்ய சாந்தும் கலந்து இழி புனல் சூழ்*  தென் அரங்கமே.


    பண்டு இவ் வையம் அளப்பான் சென்று*  மாவலி கையில் நீர 
    கொண்ட*  ஆழித் தடக் கைக் குறளன் இடம் என்பரால்* 

    வண்டு பாடும் மது வார் புனல்*  வந்து இழி காவிரி* 
    அண்டம் நாறும் பொழில் சூழ்ந்து*  அழகு ஆர் தென் அரங்கமே.    


    விளைத்த வெம் போர் விறல் வாள் அரக்கன்*  நகர் பாழ்பட* 
    வளைத்த வல் வில் தடக்கை அவனுக்கு*  இடம் என்பரால்* 

    துளைக் கை யானை மருப்பும் அகிலும்*  கொணர்ந்து உந்தி* முன்
    திளைக்கும் செல்வப் புனல் காவிரி சூழ்*  தென் அரங்கமே.        


    வம்பு உலாம் கூந்தல் மண்டோதரி காதலன்*  வான் புக* 
    அம்பு தன்னால் முனிந்த*  அழகன் இடம் என்பரால்* 

    உம்பர் கோனும் உலகு ஏழும்*  வந்து ஈண்டி வணங்கும்* நல 
    செம்பொன் ஆரும் மதிள் சூழ்ந்து*  அழகு ஆர் தென் அரங்கமே.


    கலை உடுத்த அகல் அல்குல்*  வன் பேய் மகள் தாய் என* 
    முலை கொடுத்தாள் உயிர் உண்டவன்*  வாழ் இடம் என்பரால்*

    குலை எடுத்த கதலிப்*  பொழிலூடும் வந்து உந்தி*  முன்
    அலை எடுக்கும் புனல் காவிரி சூழ்*  தென் அரங்கமே.     


    கஞ்சன் நெஞ்சும் கடு மல்லரும்*  சகடமும் காலினால்*
    துஞ்ச வென்ற சுடர் ஆழியான்*  வாழ் இடம் என்பரால்* 

    மஞ்சு சேர் மாளிகை*  நீடு அகில் புகையும் மா மறையோர்*
    செஞ்சொல் வேள்விப் புகையும் கமழும்*  தென் அரங்கமே        


    ஏனம் மீன் ஆமையோடு*  அரியும் சிறு குறளும் ஆய* 
    தானும்ஆய*  தரணித் தலைவன் இடம் என்பரால்*

    வானும் மண்ணும் நிறையப்*  புகுந்து ஈண்டி வணங்கும்*  நல் 
    தேனும் பாலும் கலந்தன்னவர்*  சேர் தென் அரங்கமே


    சேயன் என்றும் மிகப் பெரியன்*  நுண் நேர்மையன் ஆய*  இம்
    மாயை ஆரும் அறியா*  வகையான் இடம் என்பரால்*

    வேயின் முத்தும் மணியும் கொணர்ந்து*  ஆர் புனல் காவிர* 
    ஆய பொன் மா மதிள் சூழ்ந்து*  அழகு ஆர் தென் அரங்கமே.  


    அல்லி மாதர் அமரும்*  திரு மார்வன் அரங்கத்தைக்*
    கல்லின் மன்னு மதிள்*  மங்கையர்-கோன் கலிகன்றி சொல்* 

    நல்லிசை மாலைகள்*  நால் இரண்டும் இரண்டும் உடன்*
    வல்லவர் தாம் உலகு ஆண்டு*  பின் வான் உலகு ஆள்வரே.


    கண்ணும் சுழன்று பீளையோடு*  ஈளை வந்து ஏங்கினால்* 
    பண் இன் மொழியார்*  பைய நடமின் என்னாதமுன்*

    விண்ணும் மலையும்*  வேதமும் வேள்வியும் ஆயினான்* 
    நண்ணும் நறையூர்*  நாம் தொழுதும் எழு நெஞ்சமே. 


    கொங்கு உண் குழலார்*  கூடி இருந்து சிரித்து*  நீர் 
    இங்கு என் இருமி*  எம்பால் வந்தது? என்று இகழாதமுன்* 

    திங்கள் எரி கால்*  செஞ் சுடர் ஆயவன் தேசு உடை*  
    நங்கள் நறையூர்*  நாம் தொழுதும் எழு நெஞ்சமே.    


    கொங்கு ஆர் குழலார்*  கூடி இருந்து சிரித்து*  எம்மை 
    எம் கோலம் ஐயா!*  என் இனிக் காண்பது? என்னாதமுன்*

    செங்கோல் வலவன்*  தாள் பணிந்து ஏத்தித் திகழும் ஊர்*
    நம் கோன் நறையூர்*  நாம் தொழுதும் எழு நெஞ்சமே.    


    கொம்பும் அரவமும்*  வல்லியும் வென்ற நுண் ஏர் இடை* 
    வம்பு உண் குழலார்*  வாசல் அடைத்து இகழாதமுன்*

    செம் பொன் கமுகு இனம் தான்*  கனியும் செழும் சோலை சூழ்* 
    நம்பன் நறையூர்*  நாம் தொழுதும் எழு நெஞ்சமே.   


    விலங்கும் கயலும்*  வேலும் ஒண் காவியும் வென்ற கண்* 
    சலம் கொண்ட சொல்லார்*  தாங்கள் சிரித்து இகழாத முன்*

    மலங்கும் வராலும்*  வாளையும் பாய் வயல் சூழ்தரு* 
    நலம் கொள் நறையூர்*  நாம் தொழுதும் எழு நெஞ்சமே. 


    மின் நேர் இடையார்*  வேட்கையை மாற்றியிருந்து* 
    என் நீர் இருமி*  எம்பால் வந்தது என்று இகழாதமுன்*

    தொல் நீர் இலங்கை மலங்க*  விலங்கு எரி ஊட்டினான்* 
    நல் நீர் நறையூர்*  நாம் தொழுதும் எழு நெஞ்சமே. 


    வில் ஏர் நுதலார்*  வேட்கையை மாற்றி சிரித்து*  இவன் 
    பொல்லான் திரைந்தான் என்னும்*  புறன் உரை கேட்பதன்முன்*

    சொல் ஆர் மறை நான்கு ஓதி*  உலகில் நிலாயவர்* 
    நல்லார் நறையூர்*  நாம் தொழுதும் எழு நெஞ்சமே.   


    வாள் ஒண் கண் நல்லார் தாங்கள்*  மதனன் என்றார்தம்மைக்* 
    கேள்மின்கள் ஈளையோடு*  ஏங்கு கிழவன் என்னாதமுன்*

    வேள்வும் விழவும்*  வீதியில் என்றும் அறாத ஊர்* 
    நாளும் நறையூர்*  நாம் தொழுதும் எழு நெஞ்சமே. 


    கனி சேர்ந்து இலங்கு நல் வாயவர்*  காதன்மை விட்டிட* 
    குனி சேர்ந்து உடலம்*  கோலில் தளர்ந்து இளையாதமுன்*

    பனி சேர் விசும்பில்*  பால்மதி கோள் விடுத்தான் இடம்* 
    நனி சேர் நறையூர்*  நாம் தொழுதும் எழு நெஞ்சமே.      


    பிறை சேர் நுதலார்*  பேணுதல் நம்மை இலாதமுன்* 
    நறை சேர் பொழில் சூழ்*  நறையூர் தொழு நெஞ்சமே! என்ற*

    கறை ஆர் நெடு வேல் மங்கையர்கோன்*  கலிகன்றி சொல்* 
    மறவாது உரைப்பவர்*  வானவர்க்கு இன் அரசு ஆவரே.   (2)         


    கண் சோர வெம் குருதி வந்து இழிய*  வெம் தழல்போல் கூந்தலாளை* 
    மண் சேர முலை உண்ட மா மதலாய்!*  வானவர்தம் கோவே! என்று*

    விண் சேரும் இளந் திங்கள் அகடு உரிஞ்சு*  மணி மாடம் மல்கு*  செல்வத்- 
    தண் சேறை எம் பெருமான் தாள் தொழுவார்*  காண்மின் என் தலைமேலாரே*


    அம் புருவ வரி நெடுங் கண்*  அலர்மகளை வரை அகலத்து அமர்ந்து மல்லல்* 
    கொம்பு உருவ விளங்கனிமேல்*  இளங் கன்று கொண்டு எறிந்த கூத்தர் போலாம்* 

    வம்பு அலரும் தண் சோலை*  வண் சேறை வான் உந்து கோயில் மேய* 
    எம் பெருமான் தாள் தொழுவார்*  எப்பொழுதும்என் மனத்தே இருக்கின்றாரே*.  


    மீது ஓடி வாள் எயிறு மின் இலக*  முன் விலகும் உருவினாளைக்* 
    காதோடு கொடி மூக்கு அன்று உடன் அறுத்த*  கைத்தலத்தா! என்று நின்று*

    தாதோடு வண்டு அலம்பும்*  தண் சேறை எம் பெருமான் தாளை ஏத்தி* 
    போதோடு புனல் தூவும் புண்ணியரே*  விண்ணவரின் பொலிகின்றாரே*     


    தேர் ஆளும் வாள் அரக்கன்*  தென் இலங்கை வெம் சமத்துப் பொன்றி வீழ* 
    போர் ஆளும் சிலைஅதனால்*  பொரு கணைகள் போக்குவித்தாய் என்று*  நாளும்

    தார் ஆளும் வரை மார்பன்*  தண் சேறை எம் பெருமான் உம்பர் ஆளும்* 
    பேராளன் பேர் ஓதும் பெரியோரை*  ஒருகாலும் பிரிகிலேனே*.


    வந்திக்கும் மற்றவர்க்கும்*  மாசு உடம்பின் வல் அமணர் தமக்கும் அல்லேன்* 
    முந்திச் சென்று அரி உரு ஆய்*  இரணியனை முரண் அழித்த முதல்வர்க்கு அல்லால்*

    சந்தப் பூ மலர்ச் சோலைத்*  தண் சேறை எம் பெருமான் தாளை*  நாளும்- 
    சிந்திப்பார்க்கு என் உள்ளம்*  தேன் ஊறி எப்பொழுதும் தித்திக்குமே*.


    பண்டு ஏனம் ஆய் உலகை அன்று இடந்த*  பண்பாளா என்று நின்று* 
    தொண்டு ஆனேன் திருவடியே துணை அல்லால்*  துணை இலேன் சொல்லுகின்றேன்*

    வண்டு ஏந்தும் மலர்ப் புறவின்*  வண் சேறைஎம் பெருமான் அடியார் தம்மைக்* 
    கண்டேனுக்கு இது காணீர்*  என் நெஞ்சும்கண் இணையும் களிக்கும் ஆறே*.


    பை விரியும் வரி அரவில்*  படு கடலுள் துயில் அமர்ந்த பண்பா! என்றும்* 
    மை விரியும் மணி வரைபோல்*  மாயவனே! என்று என்றும் வண்டு ஆர் நீலம்*

    செய் விரியும் தண் சேறை எம் பெருமான்*  திரு வடிவைச் சிந்தித்தேற்கு*  என் 
    ஐ அறிவும் கொண்டானுக்கு ஆள் ஆனார்க்கு ஆள் ஆம்*  என் அன்புதானே*.


    உண்ணாது வெம் கூற்றம்*  ஓவாதபாவங்கள் சேரா*  மேலை- 
    விண்ணோரும் மண்ணோரும் வந்து இறைஞ்சும்*  மென் தளிர்போல் அடியினானை*

    பண் ஆர வண்டு இயம்பும்*  பைம் பொழில் சூழ்தண் சேறை அம்மான் தன்னை* 
    கண் ஆரக் கண்டு உருகி*  கை ஆரத்தொழுவாரைக் கருதுங்காலே*.


    கள்ளத்தேன் பொய் அகத்தேன் ஆதலால்* போது ஒருகால் கவலை என்னும்* 
    வெள்ளத்தேற்கு என்கொலோ*  விளை வயலுள் கரு நீலம் களைஞர் தாளால்-

    தள்ள தேன் மணம் நாறும்*  தண் சேறை எம் பெருமான் தாளை*  நாளும்- 
    உள்ளத்தே வைப்பாருக்கு இது காணீர்*  என் உள்ளம் உருகும் ஆறே*.       


    பூ மாண் சேர் கருங் குழலார்போல் நடந்து*  வயல் நின்ற பெடையோடு*  அன்னம் 
    தேமாவின் இன் நிழலில் கண் துயிலும்*  தண் சேறை அம்மான் தன்னை*

    வா மான் தேர்ப் பரகாலன்*  கலிகன்றி ஒலி மாலை கொண்டு தொண்டீர்* 
    தூ மாண் சேர் பொன் அடிமேல் சூட்டுமின்*  நும் துணைக் கையால் தொழுது நின்றே*.


    விண்ணவர் தங்கள் பெருமான்*  திருமார்வன்,* 
    மண்ணவர் எல்லாம் வணங்கும்*  மலிபுகழ்சேர்,*

    கண்ணபுரத்து எம் பெருமான்*  கதிர்முடிமேல்,* 
    வண்ண நறுந்துழாய் வந்து ஊதாய் கோல்தும்பீ.!  (2)


    வேத முதல்வன்*  விளங்கு புரிநூலன்,* 
    பாதம் பரவிப்*  பலரும் பணிந்துஏத்தி,*

    காதன்மை செய்யும்*  கண்ணபுரத்து எம்பெருமான்,* 
    தாது நறுந்துழாய்*  தாழ்ந்துஊதாய் கோல்தும்பீ!


    விண்ட மலர்எல்லாம்*  ஊதி நீ என்பெறுதி,?* 
    அண்ட முதல்வன்*  அமரர்கள் எல்லாரும்,*

    கண்டு வணங்கும்*  கண்ணபுரத்து எம்பெருமான்* 
    வண்டு நறுந்துழாய்*  வந்துஊதாய் கோல்தும்பீ!


    நீர் மலிகின்றது ஓர்*  மீன்ஆய் ஓர் ஆமையும்ஆய்,* 
    சீர் மலிகின்றது ஓர்*  சிங்க உருஆகி,*

    கார்மலி வண்ணன்*  கண்ணபுரத்து எம்பெருமான்,* 
    தார்மலி தண்துழாய்*  தாழ்ந்துஊதாய் கோல்தும்பீ!


    ஏர்ஆர் மலர்எல்லாம்*  ஊதி நீ என்பெறுதி,?*
    பார்ஆர் உலகம்*  பரவ பெருங்கடலுள்,*

    கார்ஆமை ஆன*  கண்ணபுரத்து எம்பெருமான்,* 
    தார்ஆர் நறுந்துழாய்*  தாழ்ந்துஊதாய் கோல்தும்பீ!


    மார்வில் திருவன்*  வலன்ஏந்து சக்கரத்தன்,* 
    பாரைப் பிளந்த*  பரமன் பரஞ்சோதி,*

    காரில் திகழ்*  காயா வண்ணன் கதிர்முடிமேல்,* 
    தாரில் நறுந்துழாய்*  தாழ்ந்துஊதாய் கோல்தும்பீ!


    வாமனன் கற்கி*  மதுசூதன் மாதவன்* 
    தார்மன்னு*  தாசரதிஆய தடமார்வன்,*

    காமன்தன் தாதை*  கண்ணபுரத்து எம்பெருமான்,* 
    தாம நறுந்துழாய்*  தாழ்ந்துஊதாய் கோல்தும்பீ!


    நீல மலர்கள்*  நெடுநீர் வயல் மருங்கில்,* 
    சால மலர்எல்லாம்*  ஊதாதே,*  வாள்அரக்கர்-

    காலன்*  கண்ணபுரத்து எம்பெருமான் கதிர்முடிமேல்,* 
    கோல நறுந்துழாய்*  கொண்டுஊதாய் கோல்தும்பீ!


    நந்தன் மதலை*  நிலமங்கை நல்துணைவன்,* 
    அந்தம் முதல்வன்*  அமரர்கள் தம்பெருமான்,*

    கந்தம் கமழ்*  காயா வண்ணன் கதிர்முடிமேல்,* 
    கொந்து நறுந்துழாய்*  கொண்டுஊதாய் கோல்தும்பீ!


    வண்டு அமரும் சோலை*  வயல்ஆலி நல்நாடன்,* 
    கண்டசீர் வென்றிக்*  கலியன் ஒலிமாலை,*

    கொண்டல் நிறவண்ணன்*  கண்ண புரத்தானைத்,* 
    தொண்டரோம் பாட*  நினைந்துஊதாய் கோல்தும்பீ!  (2)


    காவார் மடல்பெண்ணை*  அன்றில்அரி குரலும்,*
    ஏவாயின் ஊடுஇயங்கும்*  எஃகின் கொடிதாலோ,*

    பூஆர் மணம்கமழும்*  புல்லாணி கைதொழுதேன்,* 
    பாவாய்! இதுநமக்குஓர்*  பான்மையே ஆகாதே.   (2)


    முன்னம் குறள்உருஆய்*  மூவடிமண் கொண்டுஅளந்த,*
    மன்னன் சரிதைக்கே*  மால்ஆகி பொன்பயந்தேன்,*

    பொன்னம் கழிக்கானல்*  புள்இனங்காள்! புல்லாணி* 
    அன்னம்ஆய் நூல்பயந்தாற்கு*  ஆங்குஇதனைச் செப்புமினே


    வவ்வி துழாய்அதன்மேல்*  சென்ற தனிநெஞ்சம்,*
    செவ்வி அறியாது*  நிற்கும்கொல் நித்திலங்கள்*

    பவ்வத் திரைஉலவு*  புல்லாணி கைதொழுதேன்,* 
    தெய்வச் சிலையாற்கு*  என் சிந்தைநோய் செப்புமினே. 


    பரிய இரணியனது ஆகம்*  அணிஉகிரால்,*
    அரிஉருஆய்க் கீண்டான் அருள்*  தந்தவா!  நமக்கு,*

    பொருதிரைகள் போந்துஉலவு*  புல்லாணி கைதொழுதேன்,* 
    அரிமலர்க்கண் நீர்ததும்ப*  அம்துகிலும் நில்லாவே.   


    வில்லால் இலங்கை மலங்க*  சரம்துரந்த,*
    வல்லாளன் பின்போன*  நெஞ்சம் வரும் அளவும்,*

    எல்லாரும் என்தன்னை*  ஏசிலும் பேசிடினும்,* 
    புல்லாணி எம்பெருமான்*  பொய் கேட்டுஇருந்தேனே   (2)


    சுழன்றுஇலங்கு வெம்கதிரோன்*  தேரோடும் போய்மறைந்தான்,* 
    அழன்று கொடிதுஆகி*  அம்சுடரோன் தான்அடுமால்,* 

    செழுந்தடம் பூஞ்சோலை சூழ்*  புல்லாணி கைதொழுதேன்,*  
    இழந்திருந்தேன் என்தன்*  எழில்நிறமும் சங்குமே.       


    கனைஆர் இடிகுரலின்*  கார்மணியின் நாஆடல்,*
    தினையேனும் நில்லாது*  தீயில் கொடிதாலோ,*

    புனைஆர் மணிமாடப்*  புல்லாணி கைதொழுதேன்,* 
    வினையேன்மேல் வேலையும்*  வெம்தழலே வீசுமே.


    தூம்புஉடைக்கை வேழம்*  வெருவ மருப்புஒசித்த*
    பாம்பின் அணையான்*  அருள்தந்தவா நமக்கு,*

    பூஞ்செருந்தி பொன்சொரியும்*  புல்லாணி கைதொழுதேன்,* 
    தேம்பல் இளம்பிறையும்*  என்தனக்கு ஓர்வெம்தழலே. 


    வேதமும் வேள்வியும்*  விண்ணும் இருசுடரும்,* 
    ஆதியும் ஆனான்*  அருள் தந்தவா நமக்கு,*

    போதுஅலரும் புன்னைசூழ்*  புல்லாணி கைதொழுதேன்,* 
    ஓதமும் நானும்*  உறங்காது இருந்தேனே. 


    பொன்அலரும் புன்னைசூழ்*  புல்லாணி அம்மானை*
    மின்இடையார் வேட்கைநோய் கூர*  இருந்ததனை,*

    கல்நவிலும் திண்தோள்*  கலியன் ஒலிவல்லார்,*
    மன்னவர்ஆய் மண்ஆண்டு*  வான்நாடும் முன்னுவரே   (2)


    சந்த மலர்க்குழல் தாழ*  தான் உகந்துஓடி தனியே-
    வந்து,*  என் முலைத் தடம்தன்னை வாங்கி*  நின் வாயில் மடுத்து,*

    நந்தன் பெறப்பெற்ற நம்பீ!*  நான் உகந்துஉண்ணும் அமுதே,* 
    எந்தை பெருமானே! உண்ணாய்*  என் அம்மம் சேமம் உண்ணாயே (2)


    வங்க மறிகடல் வண்ணா!*  மாமுகிலே ஒக்கும் நம்பீ* 
    செங்கண் நெடிய திருவே*  செங்கமலம் புரை வாயா,*

    கொங்கை சுரந்திட உன்னைக்*  கூவியும் காணாது இருந்தேன்* 
    எங்குஇருந்து ஆயர்களோடும்*  என் விளையாடுகின்றாயே


    திருவில் பொலிந்த எழில்ஆர்*  ஆயர்தம் பிள்ளைகளோடு* 
    தெருவில் திளைக்கின்ற நம்பீ*  செய்கின்ற தீமைகள் கண்டிட்டு,*

    உருகிஎன் கொங்கையின் தீம்பால்*  ஓட்டந்து பாய்ந்திடுகின்ற,* 
    மருவிக் குடங்கால் இருந்து*  வாய்முலை உண்ண நீ வாராய்    


    மக்கள் பெறுதவம் போலும்*  வையத்து வாழும் மடவார்* 
    மக்கள் பிறர்கண்ணுக்கு ஒக்கும்*  முதல்வா மதக்களிறுஅன்னாய்*

    செக்கர் இளம்பிறை தன்னை வாங்கி*  நின் கையில் தருவன்* 
    ஒக்கலை மேல்இருந்து*  அம்மம் உகந்து இனிது உண்ண நீ வாராய்


    மைத்த கருங்குஞ்சி மைந்தா!*  மாமருதுஊடு நடந்தாய்,* 
    வித்தகனே விரையாதே*  வெண்ணெய் விழுங்கும் விகிர்தா,*

    இத்தனை போதுஅன்றி என்தன்*  கொங்கை சுரந்து இருக்ககில்லா,* 
    உத்தமனே! அம்மம் உண்ணாய்*  உலகுஅளந்தாய் அம்மம் உண்ணாய்       


    பிள்ளைகள் செய்வன செய்யாய்*  பேசின் பெரிதும் வலியை* 
    கள்ளம் மனத்தில் உடையை*  காணவே தீமைகள் செய்தி*

    உள்ளம் உருகி என் கொங்கை*  ஓட்டந்து பாய்ந்திடுகின்ற* 
    பள்ளிக் குறிப்புச் செய்யாதே*  பால்அமுது உண்ணநீ வாராய்   


    தன்மகன்ஆக வன் பேய்ச்சி*  தான்முலை உண்ணக் கொடுக்க* 
    வன்மகன்ஆய் அவள் ஆவிவாங்கி*  முலைஉண்ட நம்பீ*

    நன்மகள் ஆய்மகளோடு*  நானில மங்கை மணாளா* 
    என்மகனே! அம்மம் உண்ணாய்*  என் அம்மம் சேமம் உண்ணாயே 


    உந்தம் அடிகள் முனிவர்*  உன்னைநான் என்கையில் கோலால்* 
    நொந்திட மோதவும் கில்லேன்*  நுங்கள்தம் ஆ-நிரை எல்லாம்*

    வந்து புகுதரும் போது*  வானிடைத் தெய்வங்கள் காண* 
    அந்திஅம் போது அங்கு நில்லேல்*  ஆழிஅம் கையனே! வாராய்


    பெற்றத் தலைவன் எம்கோமான்*  பேர்அருளாளன் மதலாய்,* 
    சுற்றக் குழாத்து இளங்கோவே!*  தோன்றிய தொல்புகழாளா,*

    கற்றுஇனம் தோறும் மறித்து*  கானம் திரிந்த களிறே* 
    எற்றுக்குஎன் அம்மம் உண்ணாதே*  எம்பெருமான் இருந்தாயே 


    இம்மை இடர்கெட வேண்டி*  ஏந்துஎழில் தோள்கலி அன்றி* 
    செம்மைப் பனுவல்நூல் கொண்டு*  செங்கண் நெடியவன் தன்னை*

    அம்மம் உண்என்று உரைக்கின்ற*  பாடல் இவை ஐந்தும் ஐந்தும்*
    மெய்ம்மை மனத்து வைத்துஏத்த*  விண்ணவர் ஆகலும்ஆமே   (2)


    நிலைஇடம் எங்கும் இன்றி நெடுவெள்ளம் உம்பர்*   வளநாடு மூட இமையோர்* 
    தலைஇட மற்றுஎமக்குஓர் சரண்இல்லை என்ன*   அரண்ஆவன் என்னும் அருளால்* 

    அலைகடல் நீர்குழம்ப அகடுஆட ஓடி*   அகல் வான்உரிஞ்ச,*  முதுகில்- 
    மலைகளை மீது கொண்டு வரும்மீனை மாலை*   மறவாது இறைஞ்சு என் மனனே!   (2)


    செருமிகு வாள்எயிற்ற அரவுஒன்று சுற்றி*   திசைமண்ணும் விண்ணும் உடனே* 
    வெருவர வெள்ளை வெள்ளம் முழுதும் குழம்ப*   இமையோர்கள் நின்று கடைய,*

    பருவரை ஒன்று நின்று முதுகில் பரந்து*   சுழலக் கிடந்து துயிலும்,* 
    அருவரை அன்ன தன்மை அடல்ஆமைஆன*   திருமால் நமக்கு ஓர் அரணே. 


    தீதுஅறு திங்கள் பொங்கு சுடர்உம்பர் உம்பர்*  உலகுஏழினோடும் உடனே,* 
    மாதிரம் மண்சுமந்த வடகுன்றும் நின்ற*  மலைஆறும் ஏழு கடலும்*

    பாதமர் சூழ்குளம்பின் அகமண்ட லத்தின்*  ஒருபால் ஒடுங்க வளர்சேர்,* 
    ஆதிமுன் ஏனம்ஆகி அரண்ஆய மூர்த்தி*  அதுநம்மை ஆளும் அரசே. 


    தளைஅவிழ் கோதை மாலை இருபால் தயங்க*   எரிகான்றுஇரண்டு தறுகண்,* 
    அளவுஎழ வெம்மை மிக்க அரிஆகி அன்று*   பரியோன் சினங்கள் அவிழ,*

    வளை உகிர்ஆளி மொய்ம்பின் மறவோனதுஆகம்*   மதியாது சென்று ஓர்உகிரால்* 
    பிளவுஎழ விட்ட குட்டம் அதுவையம்மூடு*   பெருநீரில் மும்மை பெரிதே.


    வெந்திறல் வாணன் வேள்வி இடம்எய்தி*  அங்குஓர் குறள்ஆகி மெய்ம்மை உணர* 
    செந்தொழில் வேத நாவின் முனிஆகி வையம்*   அடிமூன்று இரந்து பெறினும்,*

    மந்தர மீது போகி மதிநின்று இறைஞ்ச*   மலரோன் வணங்க வளர்சேர்,* 
    அந்தரம் ஏழினூடு செலஉய்த்த பாதம்*  அது நம்மை ஆளும் அரசே.


    இருநில மன்னர் தம்மை இருநாலும் எட்டும்*   ஒருநாலும் ஒன்றும் உடனே,* 
    செருநுதலூடு போகி அவர்ஆவி மங்க*   மழுவாளில் வென்ற திறலோன்,*

    பெருநில மங்கை மன்னர் மலர்மங்கை நாதர்*   புலமங்கை கேள்வர் புகழ்சேர்,* 
    பெருநிலம் உண்டு உமிழ்ந்த பெருவாயர்ஆகி*  யவர் நம்மை ஆள்வர் பெரிதே.


    இலைமலி பள்ளி எய்தி இதுமாயம் என்ன*  இனம்ஆய மான்பின் எழில்சேர்* 
    அலைமலி வேல் கணாளை அகல்விப்பதற்கு*   ஓர்உருஆய மானை அமையா,*

    கொலைமலி எய்துவித்த கொடியோன் இலங்கை*   பொடிஆக வென்றி அமருள்,* 
    சிலைமலி செஞ்சரங்கள் செலஉய்த்த நங்கள்*   திருமால் நமக்குஓர் அரணே. 


    முன் உலகங்கள் ஏழும் இருள்மண்டி உண்ண*  முதலோடு வீடும் அறியாது,* 
    என் இது வந்தது? என்ன இமையோர் திசைப்ப*  எழில் வேதம் இன்றி மறைய,*

    பின்னும் வானவர்க்கும் முனிவர்க்கும் நல்கி*  இருள் தீர்ந்து இவ் வையம் மகிழ,* 
    அன்னம்-அது ஆய் இருந்து அங்கு அறநூல் உரைத்த*  அது நம்மை ஆளும் அரசே.


    துணைநிலை மற்றுஎமக்குஓர் உளது என்றுஇராது*  தொழுமின்கள் தொண்டர்! தொலைய* 
    உணமுலை முன்கொடுத்த உரவோளது ஆவி*   உகஉண்டு வெண்ணெய் மருவி,*

    பணைமுலை ஆயர் மாதர் உரலோடு கட்ட*  அதனோடும் ஓடி அடல்சேர்,* 
    இணை மருதுஇற்று வீழ நடைகற்ற தெற்றல்*   வினைப் பற்றுஅறுக்கும் விதியே.


    கொலைகெழு செம்முகத்த களிறுஒன்று கொன்று*  கொடியோன் இலங்கை பொடியா* 
    சிலைகெழு செஞ்சரங்கள் செலஉய்த்த நங்கள்*  திருமாலை, வேலை புடைசூழ்*

    கலிகெழு மாட வீதி வயல்மங்கை மன்னு*  கலிகன்றி சொன்ன பனுவல்,* 
    ஒலிகெழு பாடல் பாடி உழல்கின்ற தொண்டர்*  அவர்ஆள்வர் உம்பர் உலகே.  (2)


    அம்சிறைய மட நாராய்! அளியத்தாய்!*  நீயும் நின் 
    அம்சிறைய சேவலுமாய்*  ஆஆ என்று எனக்கு அருளி*

    வெம்சிறைப் புள் உயர்த்தார்க்கு*  என் விடு தூதாய்ச் சென்றக்கால்* 
    வன்சிறையில் அவன் வைக்கில்*  வைப்புண்டால் என் செயுமோ? (2)


    என் செய்ய தாமரைக்கண்*  பெருமானார்க்கு என் தூதாய்* 
    என் செய்யும் உரைத்தக்கால்?*  இனக் குயில்காள் நீர் அலிரே?*

    முன் செய்த முழுவினையால்*  திருவடிக்கீழ்க் குற்றேவல்* 
    முன் செய்ய முயலாதேன்*  அகல்வதுவோ? விதியினமே.


    விதியினால் பெடை மணக்கும்*  மென்நடைய அன்னங்காள்!* 
    மதியினால் குறள் மாணாய்*  உலகு இரந்த கள்வர்க்கு*

    மதியிலேன் வல் வினையே*  மாளாதோ? என்று ஒருத்தி* 
    மதி எல்லாம் உள் கலங்கி*  மயங்குமால் என்னீரே!


    என் நீர்மை கண்டு இரங்கி*  இது தகாது என்னாத* 
    என் நீல முகில் வண்ணற்கு*  என் சொல்லி யான் சொல்லுகேனோ?*

    நன் நீர்மை இனி அவர்கண்*  தங்காது என்று ஒரு வாய்ச்சொல்* 
    நன் நீல மகன்றில்காள்!*  நல்குதிரோ? நல்கீரோ?


    நல்கித் தான் காத்து அளிக்கும்*  பொழில் ஏழும்; வினையேற்கே* 
    நல்கத் தான் ஆகாதோ?*  நாரணனைக் கண்டக்கால்*

    மல்கு நீர்ப் புனல் படப்பை*  இரை தேர் வண் சிறு குருகே!* 
    மல்கு நீர்க் கண்ணேற்கு*  ஓர் வாசகம் கொண்டு அருளாயே. 


    அருளாத நீர் அருளி*  அவர் ஆவி துவராமுன்* 
    அருள் ஆழிப் புட்கடவீர்*  அவர் வீதி ஒருநாள் என்று*

    அருள் ஆழி அம்மானைக்*  கண்டக்கால் இது சொல்லி* 
    அருள் ஆழி வரி வண்டே!*  யாமும் என் பிழைத்தோமே?     


    என்பு இழை கோப்பது போலப்*  பனி வாடை ஈர்கின்றது* 
    என் பிழையே நினைந்தருளி*  அருளாத திருமாலார்க்கு*

    என் பிழைத்தாள் திருவடியின்*  தகவினுக்கு என்று ஒரு வாய்ச்சொல்* 
    என்பிழைக்கும்? இளங் கிளியே!*  யான் வளர்த்த நீ அலையே?   


    நீயலையே ? சிறு பூவாய்!*  நெடுமாலார்க்கு என் தூதாய்* 
    நோய் எனது நுவல் என்ன,*  நுவலாதே இருந்தொழிந்தாய்*

    சாயலொடு மணி மாமை*  தளர்ந்தேன் நான்*  இனி உனது- 
    வாய் அலகில் இன் அடிசில்*  வைப்பாரை நாடாயே.  


    நாடாத மலர் நாடி*  நாள்தோறும் நாரணன் தன்* 
    வாடாத மலர் அடிக்கீழ்*  வைக்கவே வகுக்கின்று*

    வீடாடி வீற்றிருத்தல்*  வினை அற்றது என் செய்வதோ?* 
    ஊடாடு பனி வாடாய்!*  உரைத்து ஈராய் எனது உடலே.


    உடல் ஆழிப் பிறப்பு வீடு*  உயிர் முதலா முற்றுமாய்க்* 
    கடல் ஆழி நீர் தோற்றி*  அதனுள்ளே கண்வளரும்*

    அடல் ஆழி அம்மானைக்*  கண்டக்கால் இது சொல்லி* 
    விடல் ஆழி மட நெஞ்சே!*  வினையோம் ஒன்றாம் அளவே.


    அளவு இயன்ற ஏழ் உலகத்தவர்*  பெருமான் கண்ணனை* 
    வள வயல் சூழ் வண் குருகூர்ச்*  சடகோபன் வாய்ந்து உரைத்த*

    அளவு இயன்ற அந்தாதி*  ஆயிரத்துள் இப் பத்தின்* 
    வள உரையால் பெறலாகும்*  வான் ஓங்கு பெரு வளமே. (2)