பிரபந்த தனியன்கள்

மற்றொன்றும் வேண்டா மனமே. மதிளரங்கர், 
கற்றினம் மேய்த்த கழலிணைக்கீழ்,- உற்ற 
திருமாலை பாடும்சீர்த் தொண்டரடிப்பொடியெம் 
பெருமானை, எப்பொழுதும் பேசு.
மற்றொன்றும் வேண்டா மனமே. மதிளரங்கர்,
கற்றினம் மேய்த்த கழலிணைக்கீழ்,- உற்ற
திருமாலை பாடும்சீர்த் தொண்டரடிப்பொடியெம்
பெருமானை, எப்பொழுதும் பேசு.

   பாசுரங்கள்


    திருமறு மார்வ! நின்னைச்*  சிந்தையுள் திகழ வைத்து,*
    மருவிய மனத்த ராகில்*  மாநிலத் துயிர்க ளெல்லாம்,*


    வெருவரக் கொன்று சுட்டிட்*  டீட்டிய வினைய ரேலும்,*
    அருவினைப் பயன துய்யார்*  அரங்கமா நகரு ளானே!



    வானுளா ரறிய லாகா*  வானவா! என்ப ராகில்,*
    தேனுலாந் துளப மாலைச்*  சென்னியாய்! என்ப ராகில்,*


    ஊனமா யினகள் செய்யும்*  ஊனகா ரகர்க ளேலும்,*
    போனகம் செய்த சேடம்*  தருவரேல் புனித மன்றே?



    பழுதிலா வொழுக லாற்றுப்*  பலசதுப் பேதி மார்கள்,*
    இழிகுலத் தவர்க ளேலும்*  எம்மடி யார்க ளாகில்,*


    தொழுமினீர் கொடுமின் கொள்மின்!*  என்றுநின் னோடு மொக்க,*
    வழிபட வருளி னாய்போன்ம்*  மதிள்திரு வரங்கத் தானே!



    அமரவோ ரங்க மாறும்*  வேதமோர் நான்கு மோதி,*
    தமர்களில் தலைவ ராய*  சாதியந் தணர்க ளேலும்,*


    நுமர்களைப் பழிப்ப ராகில்* நொடிப்பதோ ரளவில்,*  ஆங்கே-
    அவர்கள்தாம் புலையர் போலும்*  அரங்கமா நகரு ளானே!



    பெண்ணுலாம் சடையி னானும்*  பிரமனு முன்னைக் காண்பான்,*
    எண்ணிலா வூழி யூழி*  தவஞ்செய்தார் வெள்கி நிற்ப,*


    விண்ணுளார் வியப்ப வந்து*  ஆனைக்கன் றருளை யீந்த-
    கண்ணறா,*  உன்னை யென்னோ*  களைகணாக் கருது மாறே!(2)



    வளவெழும் தவள மாட*  மதுரைமா நகரந் தன்னுள்,*
    கவளமால் யானை கொன்ற*  கண்ணனை அரங்க மாலை,*

    துவளத்தொண் டாய தொல்சீர்த்*  தொண்டர டிப்பொ டிசொல்,*
    இளையபுன் கவிதை யேலும்*  எம்பிறார் கினிய வாறே!(2)