பிரபந்த தனியன்கள்
பாசுரங்கள்
திருமறு மார்வ! நின்னைச்* சிந்தையுள் திகழ வைத்து,*
மருவிய மனத்த ராகில்* மாநிலத் துயிர்க ளெல்லாம்,*
வெருவரக் கொன்று சுட்டிட்* டீட்டிய வினைய ரேலும்,*
அருவினைப் பயன துய்யார்* அரங்கமா நகரு ளானே!
வானுளா ரறிய லாகா* வானவா! என்ப ராகில்,*
தேனுலாந் துளப மாலைச்* சென்னியாய்! என்ப ராகில்,*
ஊனமா யினகள் செய்யும்* ஊனகா ரகர்க ளேலும்,*
போனகம் செய்த சேடம்* தருவரேல் புனித மன்றே?
பழுதிலா வொழுக லாற்றுப்* பலசதுப் பேதி மார்கள்,*
இழிகுலத் தவர்க ளேலும்* எம்மடி யார்க ளாகில்,*
தொழுமினீர் கொடுமின் கொள்மின்!* என்றுநின் னோடு மொக்க,*
வழிபட வருளி னாய்போன்ம்* மதிள்திரு வரங்கத் தானே!
அமரவோ ரங்க மாறும்* வேதமோர் நான்கு மோதி,*
தமர்களில் தலைவ ராய* சாதியந் தணர்க ளேலும்,*
நுமர்களைப் பழிப்ப ராகில்* நொடிப்பதோ ரளவில்,* ஆங்கே-
அவர்கள்தாம் புலையர் போலும்* அரங்கமா நகரு ளானே!
பெண்ணுலாம் சடையி னானும்* பிரமனு முன்னைக் காண்பான்,*
எண்ணிலா வூழி யூழி* தவஞ்செய்தார் வெள்கி நிற்ப,*
விண்ணுளார் வியப்ப வந்து* ஆனைக்கன் றருளை யீந்த-
கண்ணறா,* உன்னை யென்னோ* களைகணாக் கருது மாறே!(2)
துவளத்தொண் டாய தொல்சீர்த்* தொண்டர டிப்பொ டிசொல்,*
இளையபுன் கவிதை யேலும்* எம்பிறார் கினிய வாறே!(2)