பிரபந்த தனியன்கள்

மற்றொன்றும் வேண்டா மனமே. மதிளரங்கர், 
கற்றினம் மேய்த்த கழலிணைக்கீழ்,- உற்ற 
திருமாலை பாடும்சீர்த் தொண்டரடிப்பொடியெம் 
பெருமானை, எப்பொழுதும் பேசு.
மற்றொன்றும் வேண்டா மனமே. மதிளரங்கர்,
கற்றினம் மேய்த்த கழலிணைக்கீழ்,- உற்ற
திருமாலை பாடும்சீர்த் தொண்டரடிப்பொடியெம்
பெருமானை, எப்பொழுதும் பேசு.

   பாசுரங்கள்


    பாயும் நீர் அரங்கந்தன்னுள்*  பாம்பணைப் பள்ளி கொண்ட,* 
    மாயனார் திருநன் மார்வும்*  மரகத உருவும் தோளும்,*

    தூய தாமரைக் கண்களும்*  துவரிதழ் பவள வாயும்,* 
    ஆயசீர் முடியும் தேசும்*  அடியரோர்க்கு அகலல்ஆமே?  


    பணிவினால் மனமதுஒன்றிப்*  பவளவாய் அரங்கனார்க்குத்,* 
    துணிவினால் வாழமாட்டாத்*  தொல்லை நெஞ்சே! நீ சொல்லாய்,*

    அணியினார் செம்பொன்னாய*  அருவரை அனைய கோயில்,* 
    மணியனார் கிடந்தவாற்றை*  மனத்தினால் நினைக்கலாமே? 


    பேசிற்றே பேசல் அல்லால்*  பெருமை ஒன்று உணரலாகாது,* 
    ஆசற்றார் தங்கட்குஅல்லால்*  அறியலா வானும்மல்லன்,*

    மாசற்றார் மனத்துளானை*  வணங்கி நாம் இருப்பதல்லால்,* 
    பேசத்தான் ஆவதுண்டோ?*  பேதை நெஞ்சே!நீ சொல்லாய். 


    கங்கயிற் புனித மாய*  காவிரி நடுவு பாட்டு,*
    பொங்குநீர் பரந்து பாயும்*  பூம்பொழி லரங்கந் தன்னுள்,*


    எங்கள்மா லிறைவ னீசன்*  கிடந்ததோர் கிடக்கை கண்டும்,*
    எங்ஙனம் மறந்து வாழ்கேன்*  ஏழையே னேழை யேனே!



    வெள்ளநீர் பரந்து பாயும்*  விரிபொழி லரங்கந் தன்னுள்,*
    கள்ளனார் கிடந்த வாறும்*  கமலநன் முகமும் கண்டு*


    உள்ளமே! வலியைப் போலும்*  ஒருவனென் றுணர மாட்டாய்,*
    கள்ளமே காதல் செய்துன்*  கள்ளத்தே கழிக்கின் றாயே!



    குளித்துமூன் றனலை யோம்பும்*  குறிகொளந் தணமை தன்னை,*
    ஒளித்திட்டே னென்க ணில்லை*  நின்கணும் பத்த னல்லேன்,*


    களிப்பதென் கொண்டு நம்பீ!* கடல்வண்ணா! கதறு கின்றேன்,*
    அளித்தெனக் கருள்செய் கண்டாய்*  அரங்கமா நகரு ளானே!



    போதெல்லாம் போது கொண்டுன்*  பொன்னடி புனைய மாட்டேன்,*
    தீதிலா மொழிகள் கொண்டுன்*  திருக்குணம் செப்ப மாட்டேன்,*


    காதலால் நெஞ்ச மன்பு*  கலந்திலே னதுதன் னாலே,*
    ஏதிலே னரங்கர்க்கு எல்லே!*  எஞ்செய்வான் தோன்றி னேனே!



    குரங்குகள் மலையை தூக்கக்*  குளித்துத்தாம் புரண்டிட் டோடி,*
    தரங்கநீ ரடைக்க லுற்ற*  சலமிலா அணிலம் போலேன்,*


    மரங்கள்போல் வலிய நெஞ்சம்*  வஞ்சனேன் நெஞ்சு தன்னால்,*
    அரங்கனார்க் காட்செய் யாதே அளியத்தே*  னயர்க்கின் றேனே!



    உம்பரா லறிய லாகா*  ஒளியுளார் ஆனைக் காகி,*
    செம்புலா லுண்டு வாழும்*  முதலைமேல் சீறி வந்தார்,*


    நம்பர மாய துண்டே?*  நாய்களோம் சிறுமை யோரா,*
    எம்பிராற் காட்செய் யாதே*  எஞ்செய்வான் தோன்றி னேனே!



    ஊரிலேன் காணி யில்லை *  உறவுமற் றொருவ ரில்லை,*
    பாரில்நின் பாத மூலம்*  பற்றிலேன் பரம மூர்த்தி,*


    காரொளி வண்ண னே!(என்)*  கண்ணனே! கதறு கின்றேன்,*
    ஆருளர்க் களைக ணம்மா!*  அரங்கமா நகரு ளானே!



    மனத்திலோர் தூய்மை யில்லை*  வாயிலோ ரிஞ்சொ லில்லை,*
    சினத்தினால் செற்றம் நோக்கித்*  தீவிளி விளிவன் வாளா,*


    புனத்துழாய் மாலை யானே!*  பொன்னிசூழ் திருவ ரங்கா,*
    எனக்கினிக் கதியென் சொல்லாய்*  என்னையா ளுடைய கோவே!



    தவத்துளார் தம்மி லல்லேன்*  தனம்படத் தாரி லல்லேன்,*
    உவர்த்தநீர் போல*  வென்றன் உற்றவர்க் கொன்று மல்லேன்,*


    துவர்த்தசெவ் வாயி னார்க்கே*  துவக்கறத் துரிச னானேன்,*
    அவத்தமே பிறவி தந்தாய்*  அரங்கமா நகரு ளானே!



    ஆர்த்துவண் டலம்பும் சோலை*  அணிதிரு வரங்கந் தன்னுள்,*
    கார்த்திர ளனைய மேனிக்*  கண்ணனே! உன்னைக் காணும்,*


    மார்க்கமொன் றறிய மாட்டா*  மனிசரில் துரிச னாய,*
    மூர்க்கனேன் வந்து நின்றேன்,*  மூர்க்கனேன் மூர்க்க னேனே.



    மெய்யெலாம் போக விட்டு*  விரிகுழ லாரில் பட்டு,*
    பொய்யெலாம் பொதிந்து கொண்ட*  போட்கனேன் வந்து நின்றேன்,*


    ஐயனே!அரங்க னே!உன் அருளென்னு மாசை தன்னால்,*
    பொய்யனேன் வந்து நின்றேன்*  பொய்யனேன் பொய்ய னேனே.



    உள்ளத்தே யுறையும் மாலை*  உள்ளுவா னுணர்வொன் றில்லா,*
    கள்ளத்தேன் நானும் தொண்டாய்த்*  தொண்டுக்கே கோலம் பூண்டேன்*<


    உள்ளுவா ருள்ளிற் றெல்லாம்*  உடனிருந் தறிதி யென்று,*
    வெள்கிப்போ யென்னுள் ளேநான்*  விலவறச் சிரித்திட் டேனே!



    தாவியன் றுலக மெல்லாம்*  தலைவிளாக் கொண்ட எந்தாய்,*
    சேவியே னுன்னை யல்லால்*  சிக்கெனச் செங்கண் மாலே,*


    ஆவியே! அமுதே!* என்றன் ஆருயி ரனைய எந்தாய்,*
    பாவியே னுன்னை யல்லால்*  பாவியேன் பாவி யேனே.



    மழைக்கன்று வரைமு னேந்தும்*  மைந்தனே மதுர வாறே,*
    உழைக்கன்றே போல நோக்கம்*  உடையவர் வலையுள் பட்டு,*


    உழைக்கின்றேற் கென்னை நோக்கா*  தொழிவதே,உன்னை யன்றே*
    அழைக்கின்றேன் ஆதி மூர்த்தி!*  அரங்கமா நகரு ளானே!



    தெளிவிலாக் கலங்கல் நீர்சூழ்* திருவரங்கங் கத்துள் ளோங்கும்,*
    ஒளியுளார் தாமே யன்றே* தந்தையும் தாயு மாவார்,*


    எளியதோ ரருளு மன்றே*  எந்திறத் தெம்பி ரானார்,*
    அளியன்நம் பையல் என்னார்*  அம்மவோ கொடிய வாறே!



    மேம்பொருள் போக விட்டு*  மெய்ம்மையை மிகவு ணர்ந்து,*
    ஆம்பரி சறிந்து கொண்டு*  ஐம்புல னகத்த டக்கி,*


    காம்பறத் தலைசி ரைத்துன்*  கடைத்தலை யிருந்துவாழும்*
    சோம்பரை உகத்தி போலும்*  சூழ்புனல் அரங்கத் தானே!



    அடிமையில் குடிமை யில்லா*  அயல்சதுப் பேதி மாரில்,*
    குடிமையில் கடைமை பட்ட*  குக்கரில் பிறப்ப ரேலும்,*


    முடியினில் துளபம் வைத்தாய்!*  மொய்கழற் கன்பு செய்யும்,*
    அடியரை யுகத்தி போலும்*  அரங்கமா நகரு ளானே!



    திருமறு மார்வ! நின்னைச்*  சிந்தையுள் திகழ வைத்து,*
    மருவிய மனத்த ராகில்*  மாநிலத் துயிர்க ளெல்லாம்,*


    வெருவரக் கொன்று சுட்டிட்*  டீட்டிய வினைய ரேலும்,*
    அருவினைப் பயன துய்யார்*  அரங்கமா நகரு ளானே!



    வானுளா ரறிய லாகா*  வானவா! என்ப ராகில்,*
    தேனுலாந் துளப மாலைச்*  சென்னியாய்! என்ப ராகில்,*


    ஊனமா யினகள் செய்யும்*  ஊனகா ரகர்க ளேலும்,*
    போனகம் செய்த சேடம்*  தருவரேல் புனித மன்றே?



    பழுதிலா வொழுக லாற்றுப்*  பலசதுப் பேதி மார்கள்,*
    இழிகுலத் தவர்க ளேலும்*  எம்மடி யார்க ளாகில்,*


    தொழுமினீர் கொடுமின் கொள்மின்!*  என்றுநின் னோடு மொக்க,*
    வழிபட வருளி னாய்போன்ம்*  மதிள்திரு வரங்கத் தானே!



    அமரவோ ரங்க மாறும்*  வேதமோர் நான்கு மோதி,*
    தமர்களில் தலைவ ராய*  சாதியந் தணர்க ளேலும்,*


    நுமர்களைப் பழிப்ப ராகில்* நொடிப்பதோ ரளவில்,*  ஆங்கே-
    அவர்கள்தாம் புலையர் போலும்*  அரங்கமா நகரு ளானே!



    பெண்ணுலாம் சடையி னானும்*  பிரமனு முன்னைக் காண்பான்,*
    எண்ணிலா வூழி யூழி*  தவஞ்செய்தார் வெள்கி நிற்ப,*


    விண்ணுளார் வியப்ப வந்து*  ஆனைக்கன் றருளை யீந்த-
    கண்ணறா,*  உன்னை யென்னோ*  களைகணாக் கருது மாறே!(2)



    வளவெழும் தவள மாட*  மதுரைமா நகரந் தன்னுள்,*
    கவளமால் யானை கொன்ற*  கண்ணனை அரங்க மாலை,*

    துவளத்தொண் டாய தொல்சீர்த்*  தொண்டர டிப்பொ டிசொல்,*
    இளையபுன் கவிதை யேலும்*  எம்பிறார் கினிய வாறே!(2)