பிரபந்த தனியன்கள்

முந்துற்ற நெஞ்சே. முயற்றி தரித்துரைத்து
வந்தித்து வாயார வாழ்த்தியே,-சந்த
முருகூரும் சோலசூழ் மொய்பூம் பொருநல்
குருகூரன் மாறன் பேர் கூறு.

   பாசுரங்கள்


    பிறப்பு இறப்பு மூப்புப்*  பிணிதுறந்து,*  பின்னும்- 
    இறக்கவும் இன்புஉடைத்தா மேலும்,*-மறப்புஎல்லாம்-

    ஏதமே*  என்றுஅல்லால் எண்ணுவனே,*  மண்அளந்தான்- 
    பாதமே ஏத்தாப் பகல்? 


    பகல்இரா என்பதுவும்*  பாவியாது,*  எம்மை- 
    இகல்செய்து இருபொழுதும் ஆள்வர்,*-தகவாத்-

    தொழும்பர் இவர்  சீர்க்கும்*  துணைஇலர் என்றுஓரார்,* 
    செழும்பரவை மேயார் தெரிந்து.


    தெரிந்துணர்வு ஒன்றுஇன்மையால்*  தீவினையேன்,*  வாளா- 
    இருந்தொழிந்தேன்*  கீழ்நாள்கள் எல்லாம்,*-கரந்துருவின்-

    அம்மானை*  அந்நான்று பின்தொடர்ந்த*  ஆழிஅங்கை- 
    அம்மானை ஏத்தாது அயர்த்து.


    அயர்ப்பாய் அயராப்பாய்*  நெஞ்சமே! சொன்னேன்* 
    உயப்போம் நெறிஇதுவே கண்டாய்,*-செயற்பால-

    அல்லவே செய்கிறுதி*  நெஞ்சமே! அஞ்சினேன்* 
    மல்லர்நாள் வவ்வினனை வாழ்த்து.


    வாழ்த்தி அவன்அடியைப்*  பூப்புனைந்து,*  நின்தலையைத்- 
    தாழ்த்து*  இருகை கூப்புஎன்றால் கூப்பாத பாழ்த்தவிதி*

    எங்குஉற்றாய் என்றுஅவனை*  ஏத்தாதுஎன் நெஞ்சமே,* 
    தங்கத்தான்ஆ மேலும் தங்கு.


    தங்கா முயற்றியஆய்*  தாழ்விசும்பின் மீதுபாய்ந்து,* 
    எங்கே புக்கு எத்தவம் செய்திட்டன கொல்,*-பொங்குஓதத்-

    தண்அம்பால்*  வேலைவாய்க் கண்வளரும்,*  என்னுடைய- 
    கண்ணன்பால் நல்நிறம்கொள் கார்?  


    கார்கலந்த மேனியான்*  கைகலந்த ஆழியான்,* 
    பார்கலந்த வல்வயிற்றான் பாம்புஅணையான்,*-சீர்கலந்த-

    சொல்நினைந்து போக்காரேல்*  சூழ்வினையின் ஆழ்துயரை,* 
    என்நினைந்து போக்குவர் இப்போது?   (2) 


    இப்போதும் இன்னும்*  இனிச்சிறிது நின்றாலும்* 
    எப்போதும் ஈதேசொல் என்நெஞ்சே*-எப்போதும்-

    கைகழலா நேமியான்*  நம்மேல் வினைகடிவான்* 
    மொய்கழலே ஏத்த முயல் (2)