பிரபந்த தனியன்கள்

முந்துற்ற நெஞ்சே. முயற்றி தரித்துரைத்து
வந்தித்து வாயார வாழ்த்தியே,-சந்த
முருகூரும் சோலசூழ் மொய்பூம் பொருநல்
குருகூரன் மாறன் பேர் கூறு.

   பாசுரங்கள்


    வாய்ப்போ இதுஒப்ப*  மற்றுஇல்லை வாநெஞ்சே,* 
    போய்ப்போஒய்*  வெம்நரகில் பூவியேல்,*-தீப்பால-

    பேய்த்தாய்*  உயிர்கலாய்ப் பால்உண்டு,*  அவள்உயிரை- 
    மாய்த்தானை வாழ்த்தே வலி   


    'வலியம்' எனநினைந்து*  வந்துஎதிர்ந்த மல்லர்* 
    வலிய முடிஇடிய வாங்கி,*-வலியநின்-

    பொன்ஆழிக் கையால்*  புடைத்திடுதி கீளாதே,* 
    பல்நாளும் நிற்கும்இப் பார்.


    பார்உண்டான் பார்உமிழ்ந்தான்*  பார்இடந்தான் பார்அளந்தான் 
    பார்இடம் முன்படைத்தான் என்பரால்,*  -பார்இடம்-

    ஆவானும்*  தான்ஆனால் ஆர்இடமே?,*  மற்றொருவர்க்கு- 
    ஆவான் புகாவால் அவை.  


    அவையம் எனநினைந்து*  வந்தசுரர் பாலே,* 
    நவையை நளிர்விப்பான் தன்னை,*  -கவைஇல்-

    மனத்துஉயர வைத்திருந்து*  வாழ்த்தாதார்க்கு உண்டோ,* 
    மனத்துயரை மாய்க்கும் வகை?


    வகைசேர்ந்த நல்நெஞ்சும்*  நாஉடைய வாயும்,* 
    மிகவாய்ந்து வீழா எனிலும்,*  -மிகஆய்ந்து-

    மாலைத்தாம்*  வாழ்த்தாது இருப்பர் இதுஅன்றே,* 
    மேலைத்தாம் செய்யும் வினை?


    வினையார் தரமுயலும்*  வெம்மையை அஞ்சி,* 
    தினையாம் சிறிதளவும் செல்ல நினையாது*

    வாசகத்தால் ஏத்தினேன்*  வானோர் தொழுதுஇறைஞ்சும்,* 
    நாயகத்தான் பொன்அடிக்கள் நான்.  


    நான்கூறும்*  கூற்றாவது இத்தனையே,*  நாள்நாளும்- 
    தேங்குஓத நீர்உருவன் செங்கண்மால்,*  -நீங்காத-

    மாகதிஆம்*  வெம்நரகில் சேராமல் காப்பதற்கு,* 
    நீகதிஆம் நெஞ்சே! நினை.


    நினைத்துஇறைஞ்சி மானிடவர்*  ஒன்றுஇரப்பர் என்றே 
    நினைத்திடவும் வேண்டாநீ நேரே,*  -நினைத்துஇறைஞ்ச-

    எவ்அளவர்*  எவ்இடத்தோர் மாலே,*  அதுதானும்- 
    எவ்அளவும் உண்டோ எமக்கு?


    எமக்கு யாம் விண்நாட்டுக்கு*  உச்சமதுஆம் வீட்டை,* 
    அமைத்திருந்தோம் அஃதுஅன்றே ஆம்ஆறு,*-அமைப்பொலிந்த-

    மென்தோளி காரணமா*  வெம்கோட்டுஏறு ஏழ்உடனே,* 
    கொன்றானையே மனத்துக் கொண்டு?   


    கொண்டல்தான் மால்வரைதான்*  மாகடல்தான் கூர்இருள்தான் 
    வண்டுஅறாப் பூவைதான் மற்றுத்தான்,*-கண்டநாள்-

    கார்உருவம்*  காண்தோறும் நெஞ்சுஓடும்,*  கண்ணனார்- 
    பேர்உருஎன்று எம்மைப் பிரிந்து.


    பிரிந்துஒன்று நோக்காது*  தம்முடைய பின்னே,* 
    திரிந்துஉழலும் சிந்தனையார் தம்மை,*  -புரிந்துஒருகால்-

    'ஆவா!' என இரங்கார்*  அந்தோ! வலிதேகொல்,* 
    மாவாய் பிளந்தார் மனம்?  


    மனம்ஆளும் ஓர்ஐவர்*  வன்குறும்பர் தம்மைச்,* 
    சினம்மாள்வித்து ஓர்இடத்தே சேர்த்து,*  -புனம்மேய-

    தண்துழாயான் அடியைத்*  தாம்காணும் அஃதுஅன்றே,* 
    வண்துழாம் சீரார்க்கு மாண்பு? 


    மாண்பாவித்து அஞ்ஞான்று*  மண்இரந்தான்,*  மாயவள்நஞ்சு- 
    ஊண்பாவித்து உண்டான்*  அது ஓர்உருவம்,*  -காண்பான்நம்-

    கண்அவா*  மற்றுஒன்று காண்உறா,*  சீர்பரவாது- 
    உண்ணவாய் தான்உறுமோ ஒன்று?  


    ஒன்றுஉண்டு செங்கண்மால்!*  யான்உரைப்பது,*  உன்அடியார்க்கு- 
    என்செய்வன் என்றே இருத்திநீ,*  -நின்புகழில்-

    வைகும்*  தம் சிந்தையிலும் மற்றுஇனிதோ,*  நீஅவர்க்கு- 
    வைகுந்தம் என்றுஅருளும் வான்?     


    வானோ மறிகடலோ*  மாருதமோ தீயகமோ,* 
    கானோ ஒருங்கிற்று கண்டிலமால்,*  ஆன்ஈன்ற-

    கன்றுஉயர தாம்எறிந்து*  காய்உதிர்த்தார் தாள்பணிந்தோம்,* 
    வன்துயரை ஆஆ! மருங்கு.


    மருங்குஓதம் மோதும்*  மணி நாகணையார்,* 
    மருங்கே வரஅரியரேலும்,*  -ஒருங்கே-

    எமக்குஅவரைக் காணலாம்*  எப்பொழுதும் உள்ளால்,* 
    மனக்கவலை தீர்ப்பார் வரவு.


    வரவுஆறு ஒன்றுஇல்லையால்*  வாழ்வுஇனிதால்,*  எல்லே! 
    ஒருஆறு ஒருவன் புகாவாறு,*  -உருமாறும்-

    ஆயவர்தாம் சேயவர்தாம்*  அன்றுஉலகம் தாயவர்தாம்,* 
    மாயவர்தாம் காட்டும் வழி. 


    வழித்தங்கு வல்வினையை*  மாற்றானோ? நெஞ்சே,* 
    தழீஇக்கொண்டு போர்அவுணன் தன்னை,*  -சுழித்துஎங்கும்-

    தாழ்வுஇடங்கள் பற்றி*  புலால்வெள்ளம் தான்உகள,* 
    வாழ்வுஅடங்க மார்வுஇடந்த மால்?   


    மாலே! படிச்சோதி மாற்றேல்,*  இனிஉனத 
    பாலேபோல்*  சீரில் பழுத்தொழிந்தேன்,*  -மேலால்-

    பிறப்புஇன்மை பெற்று*  அடிக்கீழ்க் குற்றேவல் அன்று,* 
    மறப்புஇன்மை யான்வேண்டும் மாடு?


    மாடே வரப்பெறுவராம் என்றே,*  வல்வினையார் 
    காடானும் ஆதானும் கைக்கொள்ளார்,*  -ஊடேபோய்ப்-

    பேர்ஓதம் சிந்து*  திரைக் கண்வளரும்,*  பேராளன்- 
    பேர்ஓத சிந்திக்க பேர்ந்து.


    பேர்ந்துஒன்று நோக்காது*  பின்நிற்பாய் நில்லாப்பாய்* 
    ஈர்ந்துழாய் மாயனையே என்நெஞ்சே,*  -பேர்ந்துஎங்கும்-

    தொல்லைமா வெம்நரகில்*  சேராமல் காப்பதற்கு* 
    இல்லைகாண் மற்றோர் இறை.


    இறைமுறையான் சேவடிமேல்*  மண்அளந்த அந்நாள்,* 
    மறைமுறையால் வான்நாடர் கூடி,*  -முறைமுறையின்-

    தாதுஇலகு*  பூத்தெளித்தால் ஒவ்வாதே,*  தாழ்விசும்பின்- 
    மீதுஇலகித் தான்கிடக்கும் மீன்.


    மீன்என்னும் கம்பில்*  வெறிஎன்னும் வெள்ளிவேய்* 
    வான்என்னும் கேடுஇலா வான்குடைக்குத்,*  -தான்ஓர்-

    மணிக்காம்பு போல்*  நிமிர்ந்து மண்அளந்தான்,*  நங்கள்- 
    பிணிக்குஆம் பெருமருந்து பின்.


    பின்துரக்கும் காற்றுஇழந்த*  சூல்கொண்டல் பேர்ந்தும் போய்,* 
    வன்திரைக்கண் வந்துஅணைந்த வாய்மைத்தே,*   -அன்று-

    திருச்செய்ய நேமியான்*  தீஅரக்கி மூக்கும்,* 
    பருச்செவியும் ஈர்ந்த பரன்.


    பரன்ஆம் அவன்ஆதல்*  பாவிப்பர் ஆகில்,* 
    உரனால் ஒருமூன்று போதும்,*  -மரம்ஏழ்அன்று-

    எய்தானை*  புள்ளின்வாய் கீண்டானையே,*  அமரர்- 
    கைதான் தொழாவே கலந்து? 


    கலந்து நலியும்*  கடுந்துயரை நெஞ்சே,* 
    மலங்க அடித்து மடிப்பான்,*  -விலங்கல்போல்-

    தொல்மாலை கேசவனை*  நாரணனை மாதவனை,* 
    சொல்மாலை எப்பொழுதும் சூட்டு.


    சூட்டாய நேமியான்*  தொல்அரக்கன் இன்உயிரை,* 
    மாட்டே துயர்இழைத்த மாயவனை,*  -ஈட்ட-

    வெறிகொண்ட*  தண்துழாய் வேதியனை,*  நெஞ்சே!- 
    அறிகண்டாய் சொன்னேன் அது.  


    அதுவோ நன்றுஎன்று*  அங்கு அமர்உலகோ வேண்டில்,* 
    அதுவோ பொருள்இல்லை அன்றே?,*  -அதுஒழிந்து-

    மண் நின்று*  ஆள்வேன் எனிலும் கூடும் மடநெஞ்சே,* 
    கண்ணன் தாள் வாழ்த்துவதே கல்.


    கல்லும் கனைகடலும்*  வைகுந்த வான்நாடும்,* 
    புல்என்று ஒழிந்தனகொல்? ஏபாவம்,*  -வெல்ல-

    நெடியான் நிறம்கரியான்*  உள்புகுந்து நீங்கான்,* 
    அடியேனது உள்ளத்து அகம். 


    அகம்சிவந்த கண்ணினர்ஆய்*  வல்வினையர் ஆவார்,* 
    முகம்சிதைவராம் அன்றே முக்கி,*  -மிகும்திருமால்-

    சீர்க்கடலை உள்பொதிந்த*  சிந்தனையேன் தன்னை,* 
    ஆர்க்குஅடல்ஆம் செவ்வே அடர்த்து?


    அடர்பொன் முடியானை*  ஆயிரம் பேரானை 
    சுடர்கொள் சுடர்ஆழி யானை,*  -இடர்கடியும்-

    மாதா பிதாவாக*  வைத்தேன் எனதுஉள்ளே* 
    யாதுஆகில் யாதே இனி?


    இனிநின்று நின்பெருமை*  யான்உரைப்பது என்னே,* 
    தனிநின்ற சார்வுஇலா மூர்த்தி,*  -பனிநீர்-

    அகத்துஉலவு*  செஞ்சடையான் ஆகத்தான்,*  நான்கு- 
    முகத்தான் நின்உந்தி முதல்.  


    முதல்ஆம் திருஉருவம் மூன்றுஅன்பர்,*  ஒன்றே- 
    முதல்ஆகும்*  மூன்றுக்கும் என்பர்*- முதல்வா,-

    நிகர்இலகு கார்உருவா!*  நின்அகத்தது அன்றே,* 
    புகர்இலகு தாமரையின் பூ? 


    பூவையும் காயாவும்*  நீலமும் பூக்கின்ற,* 
    காவி மலர்என்றும் காண்தோறும்,*  -பாவியேன்-

    மெல்ஆவி*  மெய்மிகவே பூரிக்கும்,*  அவ்வவை- 
    எல்லாம் பிரான்உருவே என்று.


    என்றும் ஒருநாள்*  ஒழியாமை யான்இரந்தால்,* 
    ஒன்றும் இரங்கார் உருக்காட்டார்,*-குன்று-

    குடைஆக*  ஆகாத்த கோவலனார்,*  நெஞ்சே!- 
    புடைதான் பெரிதே புவி.  


    புவியும் இருவிசும்பும் நின்அகத்த,*  நீஎன்- 
    செவியின் வழிபுகுந்து*  என்உள்ளாய்,*-அவிவுஇன்றி-

    யான்பெரியன் நீபெரியை*  என்பதனை யார்அறிவார்,* 
    ஊன்பருகு நேமியாய்! உள்ளு.


    உள்ளிலும் உள்ளம் தடிக்கும்*  வினைப்படலம்,* 
    விள்ள விழித்துஉன்னை மெய்உற்றால்,*  -உள்ள-

    உலகுஅளவும் யானும்*  உளன்ஆவன் என்கொல்* 
    உலகுஅளந்த மூர்த்தி! உரை. 


    உரைக்கில்ஓர் சுற்றத்தார்*  உற்றார் என்றுஆரே? 
    இரைக்கும் கடல்கிடந்த எந்தாய்,*  -உரைப்புஎல்லாம்-

    நின்அன்றி*  மற்றுஇலேன் கண்டாய்,*  எனதுஉயிர்க்குஓர்- 
    சொல்நன்றி ஆகும் துணை.


    துணைநாள் பெருங்கிளையும்*  தொல்குலமும்,*  சுற்றத்து- 
    இணைநாளும் இன்புஉடைத்தா மேலும்,*  கணைநாணில்-

    ஓவாத் தொழில்சார்ங்கன்*  தொல்சீரை நல்நெஞ்சே,* 
    ஓவாத ஊணாக உண். 


    உள்நாட்டுத் தேசுஅன்றே!*  ஊழ்வினையை அஞ்சுமே,* 
    விண்நாட்டை ஒன்றுஆக மெச்சுமே,*-மண்நாட்டில்-

    ஆர்ஆகி*  எவ்இழிவிற்று ஆனாலும்,*  ஆழிஅங்கைப்- 
    பேர்ஆயற்கு ஆள்ஆம் பிறப்பு?


    பிறப்பு இறப்பு மூப்புப்*  பிணிதுறந்து,*  பின்னும்- 
    இறக்கவும் இன்புஉடைத்தா மேலும்,*-மறப்புஎல்லாம்-

    ஏதமே*  என்றுஅல்லால் எண்ணுவனே,*  மண்அளந்தான்- 
    பாதமே ஏத்தாப் பகல்? 


    பகல்இரா என்பதுவும்*  பாவியாது,*  எம்மை- 
    இகல்செய்து இருபொழுதும் ஆள்வர்,*-தகவாத்-

    தொழும்பர் இவர்  சீர்க்கும்*  துணைஇலர் என்றுஓரார்,* 
    செழும்பரவை மேயார் தெரிந்து.


    தெரிந்துணர்வு ஒன்றுஇன்மையால்*  தீவினையேன்,*  வாளா- 
    இருந்தொழிந்தேன்*  கீழ்நாள்கள் எல்லாம்,*-கரந்துருவின்-

    அம்மானை*  அந்நான்று பின்தொடர்ந்த*  ஆழிஅங்கை- 
    அம்மானை ஏத்தாது அயர்த்து.


    அயர்ப்பாய் அயராப்பாய்*  நெஞ்சமே! சொன்னேன்* 
    உயப்போம் நெறிஇதுவே கண்டாய்,*-செயற்பால-

    அல்லவே செய்கிறுதி*  நெஞ்சமே! அஞ்சினேன்* 
    மல்லர்நாள் வவ்வினனை வாழ்த்து.


    வாழ்த்தி அவன்அடியைப்*  பூப்புனைந்து,*  நின்தலையைத்- 
    தாழ்த்து*  இருகை கூப்புஎன்றால் கூப்பாத பாழ்த்தவிதி*

    எங்குஉற்றாய் என்றுஅவனை*  ஏத்தாதுஎன் நெஞ்சமே,* 
    தங்கத்தான்ஆ மேலும் தங்கு.


    தங்கா முயற்றியஆய்*  தாழ்விசும்பின் மீதுபாய்ந்து,* 
    எங்கே புக்கு எத்தவம் செய்திட்டன கொல்,*-பொங்குஓதத்-

    தண்அம்பால்*  வேலைவாய்க் கண்வளரும்,*  என்னுடைய- 
    கண்ணன்பால் நல்நிறம்கொள் கார்?  


    கார்கலந்த மேனியான்*  கைகலந்த ஆழியான்,* 
    பார்கலந்த வல்வயிற்றான் பாம்புஅணையான்,*-சீர்கலந்த-

    சொல்நினைந்து போக்காரேல்*  சூழ்வினையின் ஆழ்துயரை,* 
    என்நினைந்து போக்குவர் இப்போது?   (2) 


    இப்போதும் இன்னும்*  இனிச்சிறிது நின்றாலும்* 
    எப்போதும் ஈதேசொல் என்நெஞ்சே*-எப்போதும்-

    கைகழலா நேமியான்*  நம்மேல் வினைகடிவான்* 
    மொய்கழலே ஏத்த முயல் (2)