பிரபந்த தனியன்கள்

கைதைசேர் பூம்பொல்சூழ் கச்சிநகர் வந்துதித்த,
பொய்கைப் பிரான்கவிஞர் போரேறு, - வையத்து
அடியவர் வாழ அருந்தமிழந் தாதி,
படிவிளங்கச் செய்தான் பரிந்து

   பாசுரங்கள்


    ஓர்அடியும் சாடுஉதைத்த*  ஒண்மலர்ச் சேவடியும்,* 
    ஈர்அடியும் காணலாம் என்நெஞ்சே!* - ஓர்அடியில்-

    தாயவனை கேசவனை*  தண்துழாய் மாலைசேர்,*
    மாயவனையே மனத்து வை (2)