பிரபந்த தனியன்கள்

நேரிசை வெண்பா
வாழிபரகாலன் வாழிகலிகன்றி*
வாழிகுறையலூர் வாழ்வேந்தன்*
வாழியரோ மாயோனை வாழ்வலியால் மந்திரங்கொள்* 
மங்கையர்கோன் நூயோன் சுடர்மானவேல்.
கட்டளைக் கலித்துறை
நெஞ்சுக்கிருள்கடிதீபம் அடங்கா நெடும்பிறவி*
நஞ்சுக்கு நல்லவமுதம் தமிழ நன்னூல் துறைகள்*
அஞ்சுக்கிலக்கியம் ஆரணசாரம் பரசமயப்*
பஞ்சுக்கனலின் பொறி பரகாலன் பனுவல்களே.
நேரிசை வெண்பா 
எங்கள்கதியே! இராமானுசமுனியே!*
சங்கைகெடுத்தாண்ட தவராசா*
பொங்குபுகழ் மங்கையர்கோனீந்த மறையாயிரமனைத்தும்*
தங்குமனம் நீயெனக்குத் தா.

   பாசுரங்கள்


    வானோர் அளவும் முது முந்நீர்*  வளர்ந்த காலம்,*  வலிஉருவின்- 
    மீன்ஆய் வந்து வியந்து உய்யக்கொண்ட*  தண்தாமரைக் கண்ணன்*

    ஆனா உருவில் ஆன்ஆயன்*  அவனை அம்மா விளைவயலுள்* 
    கான்ஆர் புறவின் கண்ணபுரத்து*  அடியேன் கண்டு கொண்டேனே.   (2)


    மலங்கு விலங்கு நெடுவெள்ளம் மறுக*  அங்கு ஓர் வரைநட்டு* 
    இலங்கு சோதிஆர் அமுதம்*  எய்தும் அளவு ஓர்ஆமைஆய்*

    விலங்கல் திரியத் தடங்கடலுள்*  சுமந்து கிடந்த வித்தகனை*
    கலங்கல் முந்நீர்க் கண்ணபுரத்து*  அடியேன் கண்டு கொண்டேனே.


    பாரஆர் அளவும் முதுமுந்நீர்*  பரந்த காலம்,* வளைமருப்பின்-
    ஏர்ஆர் உருவத்து ஏனம்ஆய்*  எடுத்த ஆற்றல் அம்மானை*

    கூர்ஆர் ஆரல்இரை கருதி*  குருகு பாய கயல் இரியும்*
    கார்ஆர் புறவன் கண்ணபுரத்து*  அடியேன் கண்டு கொண்டேனே.


    உளைந்த அரியும் மானிடமும்*  உடனாய்த் தோன்ற ஒன்றுவித்து* 
    விளைந்த சீற்றம் விண்வெதும்ப*  வேற்றோன் அகலம் வெம்சமத்துப்*

    பிளந்து வளைந்த உகிரானை*  பெருந்தண் செந்நெல் குலைதடிந்து* 
    களம்செய் புறவின் கண்ணபுரத்து*  அடியேன் கண்டு கொண்டேனே* 


    தொழும்நீர் வடிவின் குறள்உருவுஆய்*  வந்து தோன்றி மாவலிபால்*
    முழுநீர் வையம் முன்கொண்ட*  மூவா உருவின் அம்மானை*

    உழும்நீர் வயலுள் பொன்கிளைப்ப*  ஒருபால் முல்லை முகையோடும்*
    கழுநீர் மலரும் கண்ணபுரத்து*  அடியேன் கண்டு கொண்டேனே.


    வடிவாய் மழுவே படைஆக*  வந்து தோன்றி மூவெழுகால்* 
    படிஆர் அரசு களைகட்ட*  பாழி யானை அம்மானை*

    குடியா வண்டு கொண்டுஉண்ண8  கோல நீலம் மட்டு உகுக்கும்* 
    கடிஆர் புறவின் கண்ணபுரத்து*  அடியேன் கண்டு கொண்டேனே.  


    வையம் எல்லாம் உடன்வணங்க*  வணங்கா மன்னனாய்த் தோன்றி* 
    வெய்ய சீற்றக் கடிஇலங்கை* குடிகொண்டு ஓட வெம்சமத்துச்*

    செய்த வெம்போர் நம்பரனை*  செழுந்தண் கானல் மணம்நாறும்* 
    கைதை வேலிக் கண்ணபுரத்து*  அடியேன் கண்டு கொண்டேனே. 


    ஒற்றைக் குழையும் நாஞ்சிலும்*  ஒருபால் தோன்ற தான்தோன்றி*  
    வெற்றித் தொழிலார் வேல்வேந்தர்*  விண்பால் செல்ல வெம்சமத்துச்*

    செற்ற கொற்றத் தொழிலானை*  செந்தீ மூன்றும் இல்இருப்ப*  
    கற்ற மறையோர் கண்ணபுரத்து*  அடியேன் கண்டு கொண்டேனே.


    துவரிக் கனிவாய் நிலமங்கை*  துயர்தீர்ந்து உய்ய பாரதத்துள்*
    இவரித்து அரசர் தடுமாற*  இருள்நாள் பிறந்த அம்மானை*

    உவரி ஓதம் முத்துஉந்த*  ஒருபால் ஒருபால் ஒண் செந்நெல்*
    கவரி வீசும் கண்ணபுரத்து*  அடியேன் கண்டு கொண்டேனே.  


    மீனோடு ஆமைகேழல் அரிகுறள்ஆய்*  முன்னும் இராமன்ஆய் 
    தான்ஆய்*  பின்னும் இராமன்ஆய் தாமோதரன்ஆய்*  கற்கியும்

    ஆனான் தன்னைக்*  கண்ணபுரத்து அடியன்*  கலியன் ஒலிசெய்த*
    தேன்ஆர் இன்சொல் தமிழ்மாலை*  செப்ப பாவம் நில்லாவே.  (2)


    கண்கள் சிவந்து பெரியவாய்*  வாயும் சிவந்து கனிந்து*  உள்ளே 
    வெண்பல் இலகு சுடர்இலகு*  விலகு மகர குண்டலத்தன்*

    கொண்டல் வண்ணன் சுடர்முடியன்*  நான்கு தோளன் குனிசார்ங்கன்* 
    ஒண் சங்கதை வாள்ஆழியான்*  ஒருவன் அடியேன் உள்ளானே.  (2)


    அடியேன்உள்ளான் உடல்உள்ளான்*  அண்டத்துஅகத்தான் புறத்துள்ளான்* 
    படியேஇது என்றுஉரைக்கலாம்  படியன்*  அல்லன் பரம்பரன்*

    கடிசேர் நாற்றத்துள்ஆலை*   இன்பத் துன்பக் கழிநேர்மை* 
    ஒடியா இன்பப் பெருமையோன்*  உணர்வில்உம்பர் ஒருவனே    


    உணர்வில்உம்பர் ஒருவனை*  அவனது அருளால் உறற்பொருட்டு*  என் 
    உணர்வின்உள்ளே இருத்தினேன்*  அதுவும் அவனது இன்அருளே*

    உணர்வும் உயிரும் உடம்பும்*  மற்று உலப்பிலனவும் பழுதேயாம்* 
    உணர்வைப் பெறஊர்ந்துறஏறி*  யானும் தானாய் ஒழிந்தானே.


    யானும் தானாய் ஒழிந்தானை*  யாதும் எவர்க்கும் முன்னோனை* 
    தானும் சிவனும் பிரமனும்ஆகிப்*  பணைத்த தனிமுதலை*

    தேனும் பாலும் கன்னலும்*  அமுதும்ஆகித் தித்தித்து*  என் 
    ஊனில் உயிரில் உணர்வினில்*  நின்ற ஒன்றை உணர்ந்தேனே 


    நின்ற ஒன்றை உணர்ந்தேனுக்கு*  அதனுள் நேர்மை அதுஇதுஎன்று* 
    ஒன்றும் ஒருவர்க்கு உணரலாகாது*   உணர்ந்தும் மேலும் காண்புஅரிது*

    சென்று சென்று பரம்பரமாய்*  யாதும்இன்றித் தேய்ந்துஅற்று* 
    நன்று தீதுஎன்று அறிவரிதாய்*  நன்றாய் ஞானம் கடந்ததே


    நன்றாய் ஞானம் கடந்துபோய்*  நல்இந்திரியம் எல்லாம் ஈர்த்து* 
    ஒன்றாய்க் கிடந்த அரும்பெரும்பாழ்*  உலப்புஇல் அதனை உணர்ந்துஉணர்ந்து*

    சென்றுஆங்கு இன்பத் துன்பங்கள்*  செற்றுக் களைந்து பசைஅற்றால்* 
    அன்றே அப்போதேவீடு*  அதுவே வீடு வீடாமே.


    அதுவே வீடு வீடு பேற்று*  இன்பம்தானும் அதுதேறி* 
    எதுவே தானும் பற்றுஇன்றி*  யாதும் இலிகள்ஆகிற்கில்*

    அதுவே வீடு வீடு பேற்று*  இன்பம்தானும் அதுதேறாது* 
    'எதுவே வீடு ஏது இன்பம்?' என்று*  எய்த்தார் எய்த்தார் எய்த்தாரே. 


    எய்த்தார் எய்த்தார் எய்த்தார்என்று*  இல்லத்தாரும் புறத்தாரும்- 
    மொய்த்து*  ஆங்கு அறிமுயங்க*  தாம் போகும் போது*  உன்மத்தர்போல்

    பித்தேஏறி அநுராகம்  பொழியும்போது*  எம் பெம்மானோடு- 
    ஒத்தேசென்று*  அங்குஉள்ளம்கூடக்*  கூடிற்றாகில் நல்உறைப்பே.     


    கூடிற்றாகில் நல்உறைப்பு*   கூடாமையைக் கூடினால்* 
    ஆடல் பறவை உயர்கொடி*  எம்மாயன் ஆவதது அதுவே*

    வீடைப் பண்ணி ஒருபரிசே*  எதிர்வும் நிகழ்வும் கழிவுமாய்* 
    ஓடித் திரியும் யோகிகளும்*  உளரும்இல்லை அல்லரே.


    உளரும்இல்லை அல்லராய்*  உளராய்இல்லை ஆகியே* 
    உளர்எம்ஒருவர் அவர்வந்து*  என்உள்ளத்துள்ளே உறைகின்றார்*

    வளரும் பிறையும் தேய்பிறையும்போல*  அசைவும் ஆக்கமும்* 
    வளரும் சுடரும் இருளும்போல்*  தெருளும் மருளும் மாய்த்தோமே.  


    தெருளும் மருளும் மாய்த்து*  தன்திருந்து செம்பொன் கழல்அடிக்கீழ்* 
    அருளிஇருத்தும் அம்மானாம்*  அயனாம் சிவனாம்*  திருமாலால்

    அருளப்பட்ட சடகோபன்*  ஓர்ஆயிரத்துள் இப்பத்தால்* 
    அருளி அடிக்கீழ் இருத்தும்*  நம்அண்ணல் கருமாணிக்கமே   (2)