பிரபந்த தனியன்கள்
நேரிசை வெண்பா
வாழிபரகாலன் வாழிகலிகன்றி*
வாழிகுறையலூர் வாழ்வேந்தன்*
வாழியரோ மாயோனை வாழ்வலியால் மந்திரங்கொள்*
மங்கையர்கோன் நூயோன் சுடர்மானவேல்.
கட்டளைக் கலித்துறை
நெஞ்சுக்கிருள்கடிதீபம் அடங்கா நெடும்பிறவி*
நஞ்சுக்கு நல்லவமுதம் தமிழ நன்னூல் துறைகள்*
அஞ்சுக்கிலக்கியம் ஆரணசாரம் பரசமயப்*
பஞ்சுக்கனலின் பொறி பரகாலன் பனுவல்களே.
நேரிசை வெண்பா
எங்கள்கதியே! இராமானுசமுனியே!*
சங்கைகெடுத்தாண்ட தவராசா*
பொங்குபுகழ் மங்கையர்கோனீந்த மறையாயிரமனைத்தும்*
தங்குமனம் நீயெனக்குத் தா.
பாசுரங்கள்
வானோர் அளவும் முது முந்நீர்* வளர்ந்த காலம்,* வலிஉருவின்-
மீன்ஆய் வந்து வியந்து உய்யக்கொண்ட* தண்தாமரைக் கண்ணன்*
ஆனா உருவில் ஆன்ஆயன்* அவனை அம்மா விளைவயலுள்*
கான்ஆர் புறவின் கண்ணபுரத்து* அடியேன் கண்டு கொண்டேனே. (2)
மலங்கு விலங்கு நெடுவெள்ளம் மறுக* அங்கு ஓர் வரைநட்டு*
இலங்கு சோதிஆர் அமுதம்* எய்தும் அளவு ஓர்ஆமைஆய்*
விலங்கல் திரியத் தடங்கடலுள்* சுமந்து கிடந்த வித்தகனை*
கலங்கல் முந்நீர்க் கண்ணபுரத்து* அடியேன் கண்டு கொண்டேனே.
பாரஆர் அளவும் முதுமுந்நீர்* பரந்த காலம்,* வளைமருப்பின்-
ஏர்ஆர் உருவத்து ஏனம்ஆய்* எடுத்த ஆற்றல் அம்மானை*
கூர்ஆர் ஆரல்இரை கருதி* குருகு பாய கயல் இரியும்*
கார்ஆர் புறவன் கண்ணபுரத்து* அடியேன் கண்டு கொண்டேனே.
உளைந்த அரியும் மானிடமும்* உடனாய்த் தோன்ற ஒன்றுவித்து*
விளைந்த சீற்றம் விண்வெதும்ப* வேற்றோன் அகலம் வெம்சமத்துப்*
பிளந்து வளைந்த உகிரானை* பெருந்தண் செந்நெல் குலைதடிந்து*
களம்செய் புறவின் கண்ணபுரத்து* அடியேன் கண்டு கொண்டேனே*
தொழும்நீர் வடிவின் குறள்உருவுஆய்* வந்து தோன்றி மாவலிபால்*
முழுநீர் வையம் முன்கொண்ட* மூவா உருவின் அம்மானை*
உழும்நீர் வயலுள் பொன்கிளைப்ப* ஒருபால் முல்லை முகையோடும்*
கழுநீர் மலரும் கண்ணபுரத்து* அடியேன் கண்டு கொண்டேனே.
வடிவாய் மழுவே படைஆக* வந்து தோன்றி மூவெழுகால்*
படிஆர் அரசு களைகட்ட* பாழி யானை அம்மானை*
குடியா வண்டு கொண்டுஉண்ண8 கோல நீலம் மட்டு உகுக்கும்*
கடிஆர் புறவின் கண்ணபுரத்து* அடியேன் கண்டு கொண்டேனே.
வையம் எல்லாம் உடன்வணங்க* வணங்கா மன்னனாய்த் தோன்றி*
வெய்ய சீற்றக் கடிஇலங்கை* குடிகொண்டு ஓட வெம்சமத்துச்*
செய்த வெம்போர் நம்பரனை* செழுந்தண் கானல் மணம்நாறும்*
கைதை வேலிக் கண்ணபுரத்து* அடியேன் கண்டு கொண்டேனே.
ஒற்றைக் குழையும் நாஞ்சிலும்* ஒருபால் தோன்ற தான்தோன்றி*
வெற்றித் தொழிலார் வேல்வேந்தர்* விண்பால் செல்ல வெம்சமத்துச்*
செற்ற கொற்றத் தொழிலானை* செந்தீ மூன்றும் இல்இருப்ப*
கற்ற மறையோர் கண்ணபுரத்து* அடியேன் கண்டு கொண்டேனே.
துவரிக் கனிவாய் நிலமங்கை* துயர்தீர்ந்து உய்ய பாரதத்துள்*
இவரித்து அரசர் தடுமாற* இருள்நாள் பிறந்த அம்மானை*
உவரி ஓதம் முத்துஉந்த* ஒருபால் ஒருபால் ஒண் செந்நெல்*
கவரி வீசும் கண்ணபுரத்து* அடியேன் கண்டு கொண்டேனே.
மீனோடு ஆமைகேழல் அரிகுறள்ஆய்* முன்னும் இராமன்ஆய்
தான்ஆய்* பின்னும் இராமன்ஆய் தாமோதரன்ஆய்* கற்கியும்
ஆனான் தன்னைக்* கண்ணபுரத்து அடியன்* கலியன் ஒலிசெய்த*
தேன்ஆர் இன்சொல் தமிழ்மாலை* செப்ப பாவம் நில்லாவே. (2)
கண்கள் சிவந்து பெரியவாய்* வாயும் சிவந்து கனிந்து* உள்ளே
வெண்பல் இலகு சுடர்இலகு* விலகு மகர குண்டலத்தன்*
கொண்டல் வண்ணன் சுடர்முடியன்* நான்கு தோளன் குனிசார்ங்கன்*
ஒண் சங்கதை வாள்ஆழியான்* ஒருவன் அடியேன் உள்ளானே. (2)
அடியேன்உள்ளான் உடல்உள்ளான்* அண்டத்துஅகத்தான் புறத்துள்ளான்*
படியேஇது என்றுஉரைக்கலாம் படியன்* அல்லன் பரம்பரன்*
கடிசேர் நாற்றத்துள்ஆலை* இன்பத் துன்பக் கழிநேர்மை*
ஒடியா இன்பப் பெருமையோன்* உணர்வில்உம்பர் ஒருவனே
உணர்வில்உம்பர் ஒருவனை* அவனது அருளால் உறற்பொருட்டு* என்
உணர்வின்உள்ளே இருத்தினேன்* அதுவும் அவனது இன்அருளே*
உணர்வும் உயிரும் உடம்பும்* மற்று உலப்பிலனவும் பழுதேயாம்*
உணர்வைப் பெறஊர்ந்துறஏறி* யானும் தானாய் ஒழிந்தானே.
யானும் தானாய் ஒழிந்தானை* யாதும் எவர்க்கும் முன்னோனை*
தானும் சிவனும் பிரமனும்ஆகிப்* பணைத்த தனிமுதலை*
தேனும் பாலும் கன்னலும்* அமுதும்ஆகித் தித்தித்து* என்
ஊனில் உயிரில் உணர்வினில்* நின்ற ஒன்றை உணர்ந்தேனே
நின்ற ஒன்றை உணர்ந்தேனுக்கு* அதனுள் நேர்மை அதுஇதுஎன்று*
ஒன்றும் ஒருவர்க்கு உணரலாகாது* உணர்ந்தும் மேலும் காண்புஅரிது*
சென்று சென்று பரம்பரமாய்* யாதும்இன்றித் தேய்ந்துஅற்று*
நன்று தீதுஎன்று அறிவரிதாய்* நன்றாய் ஞானம் கடந்ததே
நன்றாய் ஞானம் கடந்துபோய்* நல்இந்திரியம் எல்லாம் ஈர்த்து*
ஒன்றாய்க் கிடந்த அரும்பெரும்பாழ்* உலப்புஇல் அதனை உணர்ந்துஉணர்ந்து*
சென்றுஆங்கு இன்பத் துன்பங்கள்* செற்றுக் களைந்து பசைஅற்றால்*
அன்றே அப்போதேவீடு* அதுவே வீடு வீடாமே.
அதுவே வீடு வீடு பேற்று* இன்பம்தானும் அதுதேறி*
எதுவே தானும் பற்றுஇன்றி* யாதும் இலிகள்ஆகிற்கில்*
அதுவே வீடு வீடு பேற்று* இன்பம்தானும் அதுதேறாது*
'எதுவே வீடு ஏது இன்பம்?' என்று* எய்த்தார் எய்த்தார் எய்த்தாரே.
எய்த்தார் எய்த்தார் எய்த்தார்என்று* இல்லத்தாரும் புறத்தாரும்-
மொய்த்து* ஆங்கு அறிமுயங்க* தாம் போகும் போது* உன்மத்தர்போல்
பித்தேஏறி அநுராகம் பொழியும்போது* எம் பெம்மானோடு-
ஒத்தேசென்று* அங்குஉள்ளம்கூடக்* கூடிற்றாகில் நல்உறைப்பே.
கூடிற்றாகில் நல்உறைப்பு* கூடாமையைக் கூடினால்*
ஆடல் பறவை உயர்கொடி* எம்மாயன் ஆவதது அதுவே*
வீடைப் பண்ணி ஒருபரிசே* எதிர்வும் நிகழ்வும் கழிவுமாய்*
ஓடித் திரியும் யோகிகளும்* உளரும்இல்லை அல்லரே.
உளரும்இல்லை அல்லராய்* உளராய்இல்லை ஆகியே*
உளர்எம்ஒருவர் அவர்வந்து* என்உள்ளத்துள்ளே உறைகின்றார்*
வளரும் பிறையும் தேய்பிறையும்போல* அசைவும் ஆக்கமும்*
வளரும் சுடரும் இருளும்போல்* தெருளும் மருளும் மாய்த்தோமே.
தெருளும் மருளும் மாய்த்து* தன்திருந்து செம்பொன் கழல்அடிக்கீழ்*
அருளிஇருத்தும் அம்மானாம்* அயனாம் சிவனாம்* திருமாலால்
அருளப்பட்ட சடகோபன்* ஓர்ஆயிரத்துள் இப்பத்தால்*
அருளி அடிக்கீழ் இருத்தும்* நம்அண்ணல் கருமாணிக்கமே (2)