பிரபந்த தனியன்கள்

பக்தாம்ருதம் விச் வஜநா நுமோதநம் 
ஸர்வார்த்ததம் ஸ்ரீசடகோப வாங்க்மயம்
ஸஹஸ்ரசா கோபநிஷத்ஸமாகமம் 
நமாம்யஹம் த்ராவிட வேத ஸாகரம்.
திருவழுதி நாடென்றும் தென்குருகூ ரென்றும், 
மருவினிய வண்பொருநல் என்றும், - அருமறைகள் 
அந்தாதி செய்தான் அடியிணையே எப்பொழுதும், 
சிந்தியாய் நெஞ்சே. தெளிந்து.
மனத்தாலும் வாயாலும் வண்குருகூர் பேணும் 
இனத்தாரை யல்லா திறைஞ்சேன், - தனத்தாலும் 
ஏதுங் குறைவிலேன் எந்தை சடகோபன், 
பாதங்கள் யாமுடைய பற்று.
ஏய்ந்தபெருங் கீர்த்தி இராமானுசமுனிதன் 
வாய்ந்தமலர்ப் பாதம் வணங்குகின்றேன், - ஆய்ந்தபெருஞ்ச் 
சீரார் சடகோபன் செந்தமிழ் வேதந்தரிக்கும், 
பேராத வுள்ளம் பெற.
வான்திகழும் சோலை மதிளரங்கர் வண்புகழ்மேல் 
ஆன்ற தமிழ்மறைகள் ஆயிரமும், - ஈன்ற 
முதல்தாய் சடகோபன், மொய்ம்பால் வளர்த்த 
இதத்தாய் இராமுனுசன். 
மிக்க இறைநிலையும் மெய்யாம் உயிர்நிலையும், 
தக்க நெறியும் தடையாகித் - தொக்கியலும்,
ஊழ்வினையும் வாழ்வினையும் ஓதும் குருகையர்கோன், 
யாழினிசை வேதத் தியல்.

   பாசுரங்கள்


    மான் கொண்ட தோல்*  மார்வின் மாணி ஆய்*  மாவலி மண் 
    தான் கொண்டு*  தாளால் அளந்த பெருமானை*

    தேன் கொண்ட சாரல்*  திருவேங்கடத்தானை* 
    நான் சென்று நாடி*  நறையூரில் கண்டேனே. (2)     


    முந்நீரை முன் நாள்*  கடைந்தானை*  மூழ்த்த நாள் 
    அந்நீரை மீன் ஆய்*  அமைத்த பெருமானை* 

    தென் ஆலி மேய*  திருமாலை எம்மானை* 
    நல்நீர் சூழ்*  நறையூரில் கண்டேனே.


    தூ வாய புள் ஊர்ந்து வந்து*  துறை வேழம்* 
    மூவாமை நல்கி*  முதலை துணித்தானை* 

    தேவாதிதேவனை*  செங் கமலக் கண்ணானை*
    நாவாய் உளானை*  நறையூரில் கண்டேனே.    


    ஓடா அரி ஆய்*  இரணியனை ஊன் இடந்த* 
    சேடு ஆர் பொழில் சூழ்*  திருநீர்மலையானை

    வாடா மலர்த் துழாய்*  மாலை முடியானை* 
    நாள்தோறும் நாடி*  நறையூரில் கண்டேனே.   


    கல் ஆர் மதிள் சூழ்*  கதி இலங்கைக் கார் அரக்கன்* 
    வல் ஆகம் கீள*  வரி வெம் சரம் துரந்த

    வில்லானை*  செல்வ விபீடணற்கு வேறாக* 
    நல்லானை நாடி*  நறையூரில் கண்டேனே .    


    உம்பர் உலகோடு*  உயிர் எல்லாம் உந்தியில்* 
    வம்பு மலர்மேல்*  படைத்தானை மாயோனை*

    அம்பு அன்ன கண்ணாள்* அசோதை தன் சிங்கத்தை* 
    நம்பனை நாடி*  நறையூரில் கண்டேனே.     


    கட்டு ஏறு நீள் சோலைக்*  காண்டவத்தைத் தீ மூட்டி 
    விட்டானை*  மெய்யம் அமர்ந்த பெருமானை*

    மட்டு ஏறு கற்பகத்தை*  மாதர்க்கு ஆய்* வண் துவரை 
    நட்டானை நாடி*  நறையூரில் கண்டேனே.


    மண்ணின் மீ பாரம் கெடுப்பான்*  மற மன்னர்* 
    பண்ணின்மேல் வந்த*  படை எல்லாம் பாரதத்து*

    விண்ணின் மீது ஏற* விசயன் தேர் ஊர்ந்தானை* 
    நண்ணி நான் நாடி*  நறையூரில் கண்டேனே.      


    பொங்கு ஏறு நீள் சோதிப்*  பொன் ஆழி தன்னோடும்* 
    சங்கு ஏறு கோலத்*  தடக் கைப் பெருமானை*

    கொங்கு ஏறு சோலைக்*  குடந்தைக் கிடந்தானை* 
    நம் கோனை நாடி*  நறையூரில் கண்டேனே.  (2)


    மன்னும் மதுரை*  வசுதேவர் வாழ் முதலை* 
    நல் நறையூர்*  நின்ற நம்பியை*  வம்பு அவிழ் தார்

    கல் நவிலும் தோளான்*  கலியன் ஒலி வல்லார்* 
    பொன்உலகில் வானவர்க்குப்*  புத்தேளிர் ஆகுவரே. (2)  


    பொன் உலகு ஆளீரோ?*  புவனி முழுது ஆளீரோ?,* 
    நல் நலப் புள்ளினங்காள்!*  வினையாட்டியேன் நான் இரந்தேன்,*

    முன் உலகங்கள் எல்லாம் படைத்த*  முகில்வண்ணன் கண்ணன்,* 
    என் நலம் கொண்ட பிரான் தனக்கு*  என் நிலைமை உரைத்தே?.


    மையமர் வாள் நெடும்கண்*  மங்கைமார் முன்பு என் கை இருந்து,* 
    நெய்யமர் இன் அடிசில்*  நிச்சல் பாலொடு மேவீரோ,* 

    கையமர் சக்கரத்து*  என் கனிவாய்ப் பெருமானைக் கண்டு* 
    மெய்யமர் காதல் சொல்லி*  கிளிகாள்! விரைந்து ஓடிவந்தே?


    ஓடிவந்து என் குழல்மேல்*  ஒளிமாமலர் ஊதீரோ,* 
    கூடிய வண்டினங்காள்!*  குருநாடு உடை ஐவர்கட்கு ஆய்* 

    ஆடிய மா நெடும் தேர்ப்படை*  நீறு எழச் செற்ற பிரான்,* 
    சூடிய தண் துளவம் உண்ட*  தூமது வாய்கள் கொண்டே?


    தூமதுவாய்கள் கொண்டுவந்து*  என் முல்லைகள்மேல் தும்பிகாள்,* 
    பூ மது உண்ணச் செல்லில்*  வினையேனைப் பொய்செய்து அகன்ற,*

    மாமதுவார் தண்துழாய்முடி*  வானவர் கோனைக் கண்டு,* 
    யாம் இதுவோ தக்கவாறு என்னவேண்டும்*  கண்டீர் நுங்கட்கே.


    நுங்கட்கு யான் உரைக்கேன் வம்மின்*  யான் வளர்த்த கிளிகாள்,* 
    வெம் கண் புள் ஊர்ந்து வந்து*  வினையேனை நெஞ்சம் கவர்ந்த* 

    செங்கண் கருமுகிலை*  செய்ய வாய்ச் செழுங் கற்பகத்தை,* 
    எங்குச் சென்றாகிலும் கண்டு*  இதுவோ தக்கவாறு என்மினே.   


    என் மின்னு நூல் மார்வன்*  என் கரும் பெருமான் என் கண்ணன்,* 
    தன் மன்னு நீள் கழல்மேல்*  தண் துழாய் நமக்கு அன்றி நல்கான்,* 

    கல்மின்கள் என்று உம்மையான்*  கற்பியாவைத்த மாற்றம்சொல்லி,* 
    செல்மின்கள் தீவினையேன்*  வளர்த்த சிறு பூவைகளே!          


    பூவைகள் போல் நிறத்தன்*  புண்டரீகங்கள் போலும் கண்ணன்,* 
    யாவையும் யாவரும் ஆய்*  நின்ற மாயன் என் ஆழிப் பிரான்,* 

    மாவை வல் வாய் பிளந்த*  மதுசூதற்கு என் மாற்றம் சொல்லி,* 
    பாவைகள்! தீர்க்கிற்றிரே*  வினையாட்டியேன் பாசறவே.  


    பாசறவு எய்தி இன்னே*  வினையேன் எனை ஊழி நைவேன்?* 
    ஆசு அறு தூவி வெள்ளைக் குருகே!*  அருள்செய்து ஒருநாள்,* 

    மாசு அறு நீலச்சுடர்முடி*  வானவர் கோனைக் கண்டு,* 
    ஏசு அறும் நும்மை அல்லால்*  மறுநோக்கு இலள் பேர்த்துமற்றே.            


    பேர்த்து மற்று ஓர் களைகண்*  வினையாட்டியேன் நான் ஒன்று இலேன்,* 
    நீர்த் திரைமேல் உலவி*  இரை தேரும் புதா இனங்காள்* 

    கார்த் திரள் மா முகில் போல் கண்ணன்*  விண்ணவர் கோனைக் கண்டு,* 
    வார்த்தைகள் கொண்டு அருளி உரையீர்*  வைகல் வந்திருந்தே.        


    வந்திருந்து உம்முடைய*  மணிச் சேவலும் நீரும் எல்லாம்,* 
    அந்தரம் ஒன்றும் இன்றி*  அலர்மேல் அசையும் அன்னங்காள்,* 

    என் திரு மார்வற்கு என்னை*  இன்னவாறு இவள் காண்மின் என்று,* 
    மந்திரத்து ஒன்று உணர்த்தி உரையீர்*  மறுமாற்றங்களே.


    மாற்றங்கள் ஆய்ந்துகொண்டு*  மதுசூத பிரான் அடிமேல்,* 
    நாற்றங்கொள் பூம்பொழில்சூழ்* குருகூர்ச் சடகோபன் சொன்ன,* 

    தோற்றங்கள் ஆயிரத்துள்*  இவையும் ஒருபத்தும் வல்லார்* 
    ஊற்றின்கண் நுண் மணல்போல்*  உருகாநிற்பர் நீராயே.