பிரபந்த தனியன்கள்

பக்தாம்ருதம் விச் வஜநா நுமோதநம் 
ஸர்வார்த்ததம் ஸ்ரீசடகோப வாங்க்மயம்
ஸஹஸ்ரசா கோபநிஷத்ஸமாகமம் 
நமாம்யஹம் த்ராவிட வேத ஸாகரம்.
திருவழுதி நாடென்றும் தென்குருகூ ரென்றும், 
மருவினிய வண்பொருநல் என்றும், - அருமறைகள் 
அந்தாதி செய்தான் அடியிணையே எப்பொழுதும், 
சிந்தியாய் நெஞ்சே. தெளிந்து.
மனத்தாலும் வாயாலும் வண்குருகூர் பேணும் 
இனத்தாரை யல்லா திறைஞ்சேன், - தனத்தாலும் 
ஏதுங் குறைவிலேன் எந்தை சடகோபன், 
பாதங்கள் யாமுடைய பற்று.
ஏய்ந்தபெருங் கீர்த்தி இராமானுசமுனிதன் 
வாய்ந்தமலர்ப் பாதம் வணங்குகின்றேன், - ஆய்ந்தபெருஞ்ச் 
சீரார் சடகோபன் செந்தமிழ் வேதந்தரிக்கும், 
பேராத வுள்ளம் பெற.
வான்திகழும் சோலை மதிளரங்கர் வண்புகழ்மேல் 
ஆன்ற தமிழ்மறைகள் ஆயிரமும், - ஈன்ற 
முதல்தாய் சடகோபன், மொய்ம்பால் வளர்த்த 
இதத்தாய் இராமுனுசன். 
மிக்க இறைநிலையும் மெய்யாம் உயிர்நிலையும், 
தக்க நெறியும் தடையாகித் - தொக்கியலும்,
ஊழ்வினையும் வாழ்வினையும் ஓதும் குருகையர்கோன், 
யாழினிசை வேதத் தியல்.

   பாசுரங்கள்


    மாதவத்தோன் புத்திரன்போய்*  மறிகடல்வாய் மாண்டானை* 
    ஓதுவித்த தக்கணையா*  உருவுருவே கொடுத்தானுர்* 

    தோதவத்தித் தூய்மறையோர்*  துறைபடியத் துளும்பிஎங்கும்* 
    போதில் வைத்த தேன்சொரியும்*  புனலரங்கம் என்பதுவே. (2)


    பிறப்பகத்தே மாண்டொழிந்த*  பிள்ளைகளை நால்வரையும்* 
    இறைப்பொழுதில் கொணர்ந்து கொடுத்து*  ஒருப்படித்த உறைப்பனுர்*

    மறைப்பெருந்தீ வளர்த்திருப்பார்*  வருவிருந்தை அளித்திருப்பார்* 
    சிறப்புடைய மறையவர்வாழ்*  திருவரங்கம் என்பதுவே.


    மருமகன் தன் சந்ததியை*  உயிர்மீட்டு மைத்துனன்மார்* 
    உருமகத்தே வீழாமே*  குருமுகமாய்க் காத்தானுர்* 

    திருமுகமாய்ச் செங்கமலம்*  திருநிறமாய்க் கருங்குவளை* 
    பொருமுகமாய் நின்றலரும்*  புனலரங்கம் என்பதுவே.


    கூன்தொழுத்தை சிதகுரைப்பக்*  கொடியவள் வாய்க் கடியசொற்கேட்டு 
    ஈன்றெடுத்த தாயரையும்*  இராச்சியமும் ஆங்கொழிய* 

    கான்தொடுத்த நெறிபோகிக்*  கண்டகரைக் களைந்தானுர்* 
    தேன்தொடுத்த மலர்ச்சோலைத்*  திருவரங்கம் என்பதுவே.


    பெருவரங்கள் அவைபற்றிப்*  பிழக்குடைய இராவணனை* 
    உருவரங்கப் பொருதழித்து*  இவ்வுலகினைக் கண்பெறுத்தானுர் 

    குரவரும்பக் கோங்கலரக்*  குயில்கூவும் குளிர்பொழில்சூழ்* 
    திருவரங்கம் என்பதுவே*  என் திருமால் சேர்விடமே.


    கீழுலகில் அசுரர்களைக்*  கிழங்கிருந்து கிளராமே* 
    ஆழிவிடுத்து அவருடைய*  கருவழித்த அழிப்பனுர்*

    தாழைமடல் ஊடுரிஞ்சித்*  தவளவண்ணப் பொடியணிந்து* 
    யாழின் இசை வண்டினங்கள்*  ஆளம்வைக்கும் அரங்கமே.


    கொழுப்புடைய செழுங்குருதி*  கொழித்திழிந்து குமிழ்த்தெறிய* 
    பிழக்குடைய அசுரர்களைப்*  பிணம்படுத்த பெருமானுர்* 

    தழுப்பரிய சந்தனங்கள்*  தடவரைவாய் ஈர்த்துக்கொண்டு* 
    தெழிப்புடைய காவிரிவந்து*  அடிதொழும் சீரரங்கமே.


    வல்யிற்றுக் கேழலுமாய்*  வாளேயிற்றுச் சீயமுமாய்* 
    எல்லையில்லாத் தரணியையும்* அவுணனையும் இடந்தானுர்*

    எல்லியம்போது இருஞ்சிறைவண்டு*  எம்பெருமான் குணம்பாடி* 
    மல்லிகை வெண்சங்கூதும்*  மதிளரங்கம் என்பதுவே.


    குன்றாடு கொழுமுகில்போல்*  குவளைகள்போல் குரைகடல்போல்* 
    நின்றாடு கணமயில்போல்*  நிறமுடைய நெடுமாலூர்* 

    குன்றாடு பொழில்நுழைந்து*  கொடியிடையார் முலையணவி* 
    மன்றாடு தென்றலுமாம்*  மதிளரங்கம் என்பதுவே.


    பருவரங்கள் அவைபற்றிப்*  படையாலித் தெழுந்தானை* 
    செருவரங்கப் பொருதழித்த*  திருவாளன் திருப்பதிமேல்*

    திருவரங்கத் தமிழ்மாலை*  விட்டுசித்தன் விரித்தனகொண்டு* 
    இருவரங்கம் எரித்தானை*  ஏத்தவல்லார் அடியோமே. (2)


    கவள யானைக் கொம்புஒசித்த*  கண்ணன் என்றும் காமருசீர்* 
    குவளை மேகம் அன்ன மேனி*  கொண்ட கோன் என் ஆனை என்றும்*

    தவள மாடம் நீடு நாங்கைத்*  தாமரையாள் கேள்வன் என்றும்* 
    பவள வாயாள் என் மடந்தை*  பார்த்தன்பள்ளி பாடுவாளே.   


    கஞ்சன் விட்ட வெம் சினத்த*  களிறு அடர்த்த காளை என்றும்* 
    வஞ்சம் மேவி வந்த பேயின்*  உயிரை உண்ட மாயன் என்றும்*

    செஞ்சொலாளர் நீடு நாங்கைத்*  தேவ-தேவன் என்று என்று ஓதி* 
    பஞ்சி அன்ன மெல் அடியாள்*  பார்த்தன்பள்ளி பாடுவாளே.   


    அண்டர் கோன் என் ஆனை என்றும்*  ஆயர் மாதர் கொங்கை புல்கு 
    செண்டன் என்றும்*  நான்மறைகள் தேடி ஓடும் செல்வன் என்றும்*

    வண்டு உலாவு பொழில் கொள் நாங்கை*  மன்னும் மாயன் என்று என்று ஓதி* 
    பண்டுபோல் அன்று என் மடந்தை*  பார்த்தன்பள்ளி பாடுவாளே.      


    கொல்லை ஆனாள் பரிசு அழிந்தாள்*  கோல் வளையார் தம்முகப்பே* 
    மல்லை முந்நீர் தட்டு இலங்கை*  கட்டு அழித்த மாயன் என்றும்*

    செல்வம் மல்கு மறையோர் நாங்கைத்*  தேவதேவன் என்று என்று ஓதி*
    பல் வளையாள் என் மடந்தை*  பார்த்தன்பள்ளி பாடுவாளே.   


    அரக்கர் ஆவி மாள அன்று*  ஆழ் கடல் சூழ் இலங்கை செற்ற* 
    குரக்கரசன் என்றும்*  கோல வில்லி என்றும் மா மதியை*

    நெருக்கும் மாடம் நீடு நாங்கை*  நின்மலன்தான் என்று என்று ஓதி* 
    பரக்கழிந்தாள் என் மடந்தை*  பார்த்தன்பள்ளி பாடுவாளே. 


    ஞாலம் முற்றும் உண்டு உமிழ்ந்த*  நாதன் என்றும் நானிலம் சூழ்* 
    வேலை அன்ன கோல மேனி*  வண்ணன் என்றும்*

    மேல் எழுந்து சேல் உகளும் வயல் கொள் நாங்கைத்*  தேவ தேவன் என்று என்று ஓதி* 
    பாலின் நல்ல மென் மொழியாள்*  பார்த்தன்பள்ளி பாடுவாளே.            


    நாடி என்தன் உள்ளம் கொண்ட*  நாதன் என்றும்*  நான்மறைகள்-
    தேடி என்றும் காண மாட்டாச்*  செல்வன் என்றும்*

    சிறை கொள் வண்டு சேடு உலவு பொழில் கொள் நாங்கைத்*  தேவதேவன் என்று என்று ஓதி* 
    பாடகம் சேர் மெல்அடியாள்*  பார்த்தன்பள்ளி பாடுவாளே.


    உலகம் ஏத்தும் ஒருவன் என்றும்*  ஒண் சுடரோடு உம்பர் எய்தா* 
    நிலவும் ஆழிப் படையன் என்றும்* நேசன் என்றும்*  தென் திசைக்குத்

    திலதம் அன்ன மறையோர் நாங்கைத்*  தேவதேவன் என்று என்று ஓதி* 
    பலரும் ஏச என் மடந்தை*  பார்த்தன்பள்ளி பாடுவாளே.


    கண்ணன் என்றும் வானவர்கள்*  காதலித்து மலர்கள் தூவும்* 
    எண்ணன் என்றும் இன்பன் என்றும்*  ஏழ் உலகுக்கு ஆதி என்றும்*

    திண்ண மாடம் நீடு நாங்கைத்*  தேவதேவன் என்று என்று ஓதி* 
    பண்ணின் அன்ன மென்மொழியாள்*  பார்த்தன்பள்ளி பாடுவாளே.    


    பாருள் நல்ல மறையோர் நாங்கைப்*  பார்த்தன்பள்ளிச் செங்கண்மாலை* 
    வார் கொள் நல்ல முலை மடவாள் பாடலைத்*  தாய் மொழிந்த மாற்றம்*

    கூர் கொள் நல்ல வேல் கலியன்*  கூறு தமிழ்ப் பத்தும் வல்லார்* 
    ஏர் கொள் நல்ல வைகுந்தத்துள்*  இன்பம் நாளும் எய்துவாரே.(2)


    ஏறு ஆளும் இறையோனும்*  திசைமுகனும் திருமகளும்,* 
    கூறு ஆளும் தனி உடம்பன்*  குலம் குலமா அசுரர்களை,* 

    நீறு ஆகும்படியாக*  நிருமித்து படை தொட்ட,* 
    மாறாளன் கவராத*  மணி மாமை குறைவு இலமே. (2)


    மணி மாமை குறைவு இல்லா*  மலர்மாதர் உறை மார்பன்,* 
    அணி மானத் தட வரைத்தோள்*  அடல் ஆழித் தடக்கையன்,* 

    பணி மானம் பிழையாமே*  அடியேனைப் பணிகொண்ட,* 
    மணிமாயன் கவராத*  மட நெஞ்சால் குறைவு இலமே.       


    மட நெஞ்சால் குறைவு இல்லா*  மகள்தாய்செய்து ஒரு பேய்ச்சி,* 
    விட நஞ்ச முலை சுவைத்த*  மிகு ஞானச் சிறு குழவி,* 

    பட நாகத்து அணைக் கிடந்த*  பரு வரைத் தோள் பரம்புருடன்,* 
    நெடுமாயன் கவராத*  நிறையினால் குறைவு இலமே.


    நிறையினால் குறைவு இல்லா*  நெடும் பணைத் தோள் மடப் பின்னை,* 
    பொறையினால் முலை அணைவான்*  பொரு விடை ஏழ் அடர்த்து உகந்த,* 

    கறையினார் துவர் உடுக்கை*  கடை ஆவின் கழி கோல் கைச்,* 
    சறையினார் கவராத*  தளிர் நிறத்தால் குறைவு இலமே


    தளிர் நிறத்தால் குறைவு இல்லாத்*  தனிச் சிறையில் விளப்பு உற்ற,* 
    கிளிமொழியாள் காரணமாக்*  கிளர் அரக்கன் நகர் எரித்த,* 

    களி மலர்த் துழாய் அலங்கல்*  கமழ் முடியன் கடல் ஞாலத்து,* 
    அளிமிக்கான் கவராத,*  அறிவினால் குறைவு இலமே. 


    அறிவினால் குறைவு இல்லா*  அகல் ஞாலத்தவர் அறிய,* 
    நெறி எல்லாம் எடுத்து உரைத்த*  நிறை ஞானத்து ஒருமூர்த்தி,* 

    குறிய மாண் உரு ஆகி*  கொடுங் கோளால் நிலம் கொண்ட,* 
    கிறி அம்மான் கவராத*  கிளர் ஒளியால் குறைவு இலமே.  


    கிளர் ஒளியால் குறைவு இல்லா*  அரி உருவாய்க் கிளர்ந்து எழுந்து,* 
    கிளர் ஒளிய இரணியனது*  அகல் மார்பம் கிழித்து உகந்த,* 

    வளர் ஒளிய கனல் ஆழி*  வலம்புரியன் மணி நீல,* 
    வளர் ஒளியான் கவராத*  வரி வளையால் குறைவு இலமே.


    வரி வளையால் குறைவு இல்லாப்*  பெரு முழக்கால் அடங்காரை,* 
    எரி அழலம் புக ஊதி*  இரு நிலம் முன் துயர் தவிர்த்த,* 

    தெரிவு அரிய சிவன் பிரமன்*  அமரர் கோன் பணிந்து ஏத்தும்,* 
    விரி புகழான் கவராத*  மேகலையால் குறைவு இலமே.


    மேகலையால் குறைவு இல்லா*  மெலிவு உற்ற அகல் அல்குல்,* 
    போகமகள் புகழ்த் தந்தை*  விறல் வாணன் புயம் துணித்து,* 

    நாகமிசைத் துயில்வான்போல்*  உலகு எல்லாம் நன்கு ஒடுங்க,* 
    யோகு அணைவான் கவராத*  உடம்பினால் குறைவு இலமே.


    உடம்பினால் குறைவு இல்லா*  உயிர் பிரிந்த மலைத்துண்டம்,* 
    கிடந்தனபோல் துணி பலவா*  அசுரர் குழாம் துணித்து உகந்த,* 

    தடம் புனல சடைமுடியன்*  தனி ஒருகூறு அமர்ந்து உறையும்,* 
    உடம்பு உடையான் கவராத*  உயிரினால் குறைவு இலமே. 


    உயிரினால் குறைவு இல்லா*  உலகு ஏழ் தன்னுள் ஒடுக்கி,* 
    தயிர் வெண்ணெய் உண்டானைத்,*  தடம் குருகூர்ச் சடகோபன்,* 

    செயிர் இல் சொல் இசைமாலை*  ஆயிரத்துள் இப்பத்தால்* 
    வயிரம்சேர் பிறப்பு அறுத்து வைகுந்தம் நண்ணுவரே. (2)