பிரபந்த தனியன்கள்
நேரிசை வெண்பா
வாழிபரகாலன் வாழிகலிகன்றி*
வாழிகுறையலூர் வாழ்வேந்தன்*
வாழியரோ மாயோனை வாழ்வலியால் மந்திரங்கொள்*
மங்கையர்கோன் நூயோன் சுடர்மானவேல்.
கட்டளைக் கலித்துறை
நெஞ்சுக்கிருள்கடிதீபம் அடங்கா நெடும்பிறவி*
நஞ்சுக்கு நல்லவமுதம் தமிழ நன்னூல் துறைகள்*
அஞ்சுக்கிலக்கியம் ஆரணசாரம் பரசமயப்*
பஞ்சுக்கனலின் பொறி பரகாலன் பனுவல்களே.
நேரிசை வெண்பா
எங்கள்கதியே! இராமானுசமுனியே!*
சங்கைகெடுத்தாண்ட தவராசா*
பொங்குபுகழ் மங்கையர்கோனீந்த மறையாயிரமனைத்தும்*
தங்குமனம் நீயெனக்குத் தா.
பாசுரங்கள்
மாதவத்தோன் புத்திரன்போய்* மறிகடல்வாய் மாண்டானை*
ஓதுவித்த தக்கணையா* உருவுருவே கொடுத்தானுர்*
தோதவத்தித் தூய்மறையோர்* துறைபடியத் துளும்பிஎங்கும்*
போதில் வைத்த தேன்சொரியும்* புனலரங்கம் என்பதுவே. (2)
பிறப்பகத்தே மாண்டொழிந்த* பிள்ளைகளை நால்வரையும்*
இறைப்பொழுதில் கொணர்ந்து கொடுத்து* ஒருப்படித்த உறைப்பனுர்*
மறைப்பெருந்தீ வளர்த்திருப்பார்* வருவிருந்தை அளித்திருப்பார்*
சிறப்புடைய மறையவர்வாழ்* திருவரங்கம் என்பதுவே.
மருமகன் தன் சந்ததியை* உயிர்மீட்டு மைத்துனன்மார்*
உருமகத்தே வீழாமே* குருமுகமாய்க் காத்தானுர்*
திருமுகமாய்ச் செங்கமலம்* திருநிறமாய்க் கருங்குவளை*
பொருமுகமாய் நின்றலரும்* புனலரங்கம் என்பதுவே.
கூன்தொழுத்தை சிதகுரைப்பக்* கொடியவள் வாய்க் கடியசொற்கேட்டு
ஈன்றெடுத்த தாயரையும்* இராச்சியமும் ஆங்கொழிய*
கான்தொடுத்த நெறிபோகிக்* கண்டகரைக் களைந்தானுர்*
தேன்தொடுத்த மலர்ச்சோலைத்* திருவரங்கம் என்பதுவே.
பெருவரங்கள் அவைபற்றிப்* பிழக்குடைய இராவணனை*
உருவரங்கப் பொருதழித்து* இவ்வுலகினைக் கண்பெறுத்தானுர்
குரவரும்பக் கோங்கலரக்* குயில்கூவும் குளிர்பொழில்சூழ்*
திருவரங்கம் என்பதுவே* என் திருமால் சேர்விடமே.
கீழுலகில் அசுரர்களைக்* கிழங்கிருந்து கிளராமே*
ஆழிவிடுத்து அவருடைய* கருவழித்த அழிப்பனுர்*
தாழைமடல் ஊடுரிஞ்சித்* தவளவண்ணப் பொடியணிந்து*
யாழின் இசை வண்டினங்கள்* ஆளம்வைக்கும் அரங்கமே.
கொழுப்புடைய செழுங்குருதி* கொழித்திழிந்து குமிழ்த்தெறிய*
பிழக்குடைய அசுரர்களைப்* பிணம்படுத்த பெருமானுர்*
தழுப்பரிய சந்தனங்கள்* தடவரைவாய் ஈர்த்துக்கொண்டு*
தெழிப்புடைய காவிரிவந்து* அடிதொழும் சீரரங்கமே.
வல்யிற்றுக் கேழலுமாய்* வாளேயிற்றுச் சீயமுமாய்*
எல்லையில்லாத் தரணியையும்* அவுணனையும் இடந்தானுர்*
எல்லியம்போது இருஞ்சிறைவண்டு* எம்பெருமான் குணம்பாடி*
மல்லிகை வெண்சங்கூதும்* மதிளரங்கம் என்பதுவே.
குன்றாடு கொழுமுகில்போல்* குவளைகள்போல் குரைகடல்போல்*
நின்றாடு கணமயில்போல்* நிறமுடைய நெடுமாலூர்*
குன்றாடு பொழில்நுழைந்து* கொடியிடையார் முலையணவி*
மன்றாடு தென்றலுமாம்* மதிளரங்கம் என்பதுவே.
பருவரங்கள் அவைபற்றிப்* படையாலித் தெழுந்தானை*
செருவரங்கப் பொருதழித்த* திருவாளன் திருப்பதிமேல்*
திருவரங்கத் தமிழ்மாலை* விட்டுசித்தன் விரித்தனகொண்டு*
இருவரங்கம் எரித்தானை* ஏத்தவல்லார் அடியோமே. (2)
கவள யானைக் கொம்புஒசித்த* கண்ணன் என்றும் காமருசீர்*
குவளை மேகம் அன்ன மேனி* கொண்ட கோன் என் ஆனை என்றும்*
தவள மாடம் நீடு நாங்கைத்* தாமரையாள் கேள்வன் என்றும்*
பவள வாயாள் என் மடந்தை* பார்த்தன்பள்ளி பாடுவாளே.
கஞ்சன் விட்ட வெம் சினத்த* களிறு அடர்த்த காளை என்றும்*
வஞ்சம் மேவி வந்த பேயின்* உயிரை உண்ட மாயன் என்றும்*
செஞ்சொலாளர் நீடு நாங்கைத்* தேவ-தேவன் என்று என்று ஓதி*
பஞ்சி அன்ன மெல் அடியாள்* பார்த்தன்பள்ளி பாடுவாளே.
அண்டர் கோன் என் ஆனை என்றும்* ஆயர் மாதர் கொங்கை புல்கு
செண்டன் என்றும்* நான்மறைகள் தேடி ஓடும் செல்வன் என்றும்*
வண்டு உலாவு பொழில் கொள் நாங்கை* மன்னும் மாயன் என்று என்று ஓதி*
பண்டுபோல் அன்று என் மடந்தை* பார்த்தன்பள்ளி பாடுவாளே.
கொல்லை ஆனாள் பரிசு அழிந்தாள்* கோல் வளையார் தம்முகப்பே*
மல்லை முந்நீர் தட்டு இலங்கை* கட்டு அழித்த மாயன் என்றும்*
செல்வம் மல்கு மறையோர் நாங்கைத்* தேவதேவன் என்று என்று ஓதி*
பல் வளையாள் என் மடந்தை* பார்த்தன்பள்ளி பாடுவாளே.
அரக்கர் ஆவி மாள அன்று* ஆழ் கடல் சூழ் இலங்கை செற்ற*
குரக்கரசன் என்றும்* கோல வில்லி என்றும் மா மதியை*
நெருக்கும் மாடம் நீடு நாங்கை* நின்மலன்தான் என்று என்று ஓதி*
பரக்கழிந்தாள் என் மடந்தை* பார்த்தன்பள்ளி பாடுவாளே.
ஞாலம் முற்றும் உண்டு உமிழ்ந்த* நாதன் என்றும் நானிலம் சூழ்*
வேலை அன்ன கோல மேனி* வண்ணன் என்றும்*
மேல் எழுந்து சேல் உகளும் வயல் கொள் நாங்கைத்* தேவ தேவன் என்று என்று ஓதி*
பாலின் நல்ல மென் மொழியாள்* பார்த்தன்பள்ளி பாடுவாளே.
நாடி என்தன் உள்ளம் கொண்ட* நாதன் என்றும்* நான்மறைகள்-
தேடி என்றும் காண மாட்டாச்* செல்வன் என்றும்*
சிறை கொள் வண்டு சேடு உலவு பொழில் கொள் நாங்கைத்* தேவதேவன் என்று என்று ஓதி*
பாடகம் சேர் மெல்அடியாள்* பார்த்தன்பள்ளி பாடுவாளே.
உலகம் ஏத்தும் ஒருவன் என்றும்* ஒண் சுடரோடு உம்பர் எய்தா*
நிலவும் ஆழிப் படையன் என்றும்* நேசன் என்றும்* தென் திசைக்குத்
திலதம் அன்ன மறையோர் நாங்கைத்* தேவதேவன் என்று என்று ஓதி*
பலரும் ஏச என் மடந்தை* பார்த்தன்பள்ளி பாடுவாளே.
கண்ணன் என்றும் வானவர்கள்* காதலித்து மலர்கள் தூவும்*
எண்ணன் என்றும் இன்பன் என்றும்* ஏழ் உலகுக்கு ஆதி என்றும்*
திண்ண மாடம் நீடு நாங்கைத்* தேவதேவன் என்று என்று ஓதி*
பண்ணின் அன்ன மென்மொழியாள்* பார்த்தன்பள்ளி பாடுவாளே.
பாருள் நல்ல மறையோர் நாங்கைப்* பார்த்தன்பள்ளிச் செங்கண்மாலை*
வார் கொள் நல்ல முலை மடவாள் பாடலைத்* தாய் மொழிந்த மாற்றம்*
கூர் கொள் நல்ல வேல் கலியன்* கூறு தமிழ்ப் பத்தும் வல்லார்*
ஏர் கொள் நல்ல வைகுந்தத்துள்* இன்பம் நாளும் எய்துவாரே.(2)
ஏறு ஆளும் இறையோனும்* திசைமுகனும் திருமகளும்,*
கூறு ஆளும் தனி உடம்பன்* குலம் குலமா அசுரர்களை,*
நீறு ஆகும்படியாக* நிருமித்து படை தொட்ட,*
மாறாளன் கவராத* மணி மாமை குறைவு இலமே. (2)
மணி மாமை குறைவு இல்லா* மலர்மாதர் உறை மார்பன்,*
அணி மானத் தட வரைத்தோள்* அடல் ஆழித் தடக்கையன்,*
பணி மானம் பிழையாமே* அடியேனைப் பணிகொண்ட,*
மணிமாயன் கவராத* மட நெஞ்சால் குறைவு இலமே.
மட நெஞ்சால் குறைவு இல்லா* மகள்தாய்செய்து ஒரு பேய்ச்சி,*
விட நஞ்ச முலை சுவைத்த* மிகு ஞானச் சிறு குழவி,*
பட நாகத்து அணைக் கிடந்த* பரு வரைத் தோள் பரம்புருடன்,*
நெடுமாயன் கவராத* நிறையினால் குறைவு இலமே.
நிறையினால் குறைவு இல்லா* நெடும் பணைத் தோள் மடப் பின்னை,*
பொறையினால் முலை அணைவான்* பொரு விடை ஏழ் அடர்த்து உகந்த,*
கறையினார் துவர் உடுக்கை* கடை ஆவின் கழி கோல் கைச்,*
சறையினார் கவராத* தளிர் நிறத்தால் குறைவு இலமே
தளிர் நிறத்தால் குறைவு இல்லாத்* தனிச் சிறையில் விளப்பு உற்ற,*
கிளிமொழியாள் காரணமாக்* கிளர் அரக்கன் நகர் எரித்த,*
களி மலர்த் துழாய் அலங்கல்* கமழ் முடியன் கடல் ஞாலத்து,*
அளிமிக்கான் கவராத,* அறிவினால் குறைவு இலமே.
அறிவினால் குறைவு இல்லா* அகல் ஞாலத்தவர் அறிய,*
நெறி எல்லாம் எடுத்து உரைத்த* நிறை ஞானத்து ஒருமூர்த்தி,*
குறிய மாண் உரு ஆகி* கொடுங் கோளால் நிலம் கொண்ட,*
கிறி அம்மான் கவராத* கிளர் ஒளியால் குறைவு இலமே.
கிளர் ஒளியால் குறைவு இல்லா* அரி உருவாய்க் கிளர்ந்து எழுந்து,*
கிளர் ஒளிய இரணியனது* அகல் மார்பம் கிழித்து உகந்த,*
வளர் ஒளிய கனல் ஆழி* வலம்புரியன் மணி நீல,*
வளர் ஒளியான் கவராத* வரி வளையால் குறைவு இலமே.
வரி வளையால் குறைவு இல்லாப்* பெரு முழக்கால் அடங்காரை,*
எரி அழலம் புக ஊதி* இரு நிலம் முன் துயர் தவிர்த்த,*
தெரிவு அரிய சிவன் பிரமன்* அமரர் கோன் பணிந்து ஏத்தும்,*
விரி புகழான் கவராத* மேகலையால் குறைவு இலமே.
மேகலையால் குறைவு இல்லா* மெலிவு உற்ற அகல் அல்குல்,*
போகமகள் புகழ்த் தந்தை* விறல் வாணன் புயம் துணித்து,*
நாகமிசைத் துயில்வான்போல்* உலகு எல்லாம் நன்கு ஒடுங்க,*
யோகு அணைவான் கவராத* உடம்பினால் குறைவு இலமே.
உடம்பினால் குறைவு இல்லா* உயிர் பிரிந்த மலைத்துண்டம்,*
கிடந்தனபோல் துணி பலவா* அசுரர் குழாம் துணித்து உகந்த,*
தடம் புனல சடைமுடியன்* தனி ஒருகூறு அமர்ந்து உறையும்,*
உடம்பு உடையான் கவராத* உயிரினால் குறைவு இலமே.
உயிரினால் குறைவு இல்லா* உலகு ஏழ் தன்னுள் ஒடுக்கி,*
தயிர் வெண்ணெய் உண்டானைத்,* தடம் குருகூர்ச் சடகோபன்,*
செயிர் இல் சொல் இசைமாலை* ஆயிரத்துள் இப்பத்தால்*
வயிரம்சேர் பிறப்பு அறுத்து வைகுந்தம் நண்ணுவரே. (2)