பிரபந்த தனியன்கள்
பாசுரங்கள்
இந்திரனோடு பிரமன்* ஈசன் இமையவர் எல்லாம்*
மந்திர மா மலர் கொண்டு* மறைந்து உவராய் வந்து நின்றார்*
சந்திரன் மாளிகை சேரும்* சதுரர்கள் வெள்ளறை நின்றாய்*
அந்தியம் போது இது ஆகும்* அழகனே! காப்பிட வாராய் (2)
கன்றுகள் இல்லம் புகுந்து* கதறுகின்ற பசு எல்லாம்*
நின்றொழிந்தேன் உன்னைக் கூவி* நேசமேல் ஒன்றும் இலாதாய்!*
மன்றில் நில்லேல் அந்திப் போது* மதிற் திருவெள்ளறை நின்றாய்!*
நன்று கண்டாய் என்தன் சொல்லு* நான் உன்னைக் காப்பிட வாராய்
செப்பு ஓது மென்முலையார்கள்* சிறுசோறும் இல்லும் சிதைத்திட்டு*
அப்போது நான் உரப்பப் போய்* அடிசிலும் உண்டிலை ஆள்வாய்!*
முப் போதும் வானவர் ஏத்தும்* முனிவர்கள் வெள்ளறை நின்றாய்!
இப்போது நான் ஒன்றும் செய்யேன்* எம்பிரான் காப்பிட வாராய்!
கண்ணில் மணல்கொடு தூவிக்* காலினால் பாய்ந்தனை என்று என்று*
எண் அரும் பிள்ளைகள் வந்திட்டு* -இவர் ஆர்?- முறைப்படுகின்றார்*
கண்ணனே! வெள்ளறை நின்றாய்!* கண்டாரொடே தீமை செய்வாய்!
வண்ணமே வேலையது ஒப்பாய்!* வள்ளலே! காப்பிட வாராய்
பல்லாயிரவர் இவ் ஊரில்* பிள்ளைகள் தீமைகள் செய்வார்*
எல்லாம் உன்மேல் அன்றிப் போகாது* எம்பிரான்! நீ இங்கே வாராய்*
நல்லார்கள் வெள்ளறை நின்றாய்!* ஞானச் சுடரே! உன்மேனி*
சொல் ஆர வாழ்த்தி நின்று ஏத்திச்* சொப்படக் காப்பிட வாராய்
கஞ்சன் கறுக்கொண்டு நின்மேல்* கரு நிறச் செம் மயிர்ப் பேயை*
வஞ்சிப்பதற்கு விடுத்தான்* என்பது ஓர் வார்த்தையும் உண்டு*
மஞ்சு தவழ் மணி மாட* மதிற் திருவெள்ளறை நின்றாய்!
அஞ்சுவன் நீ அங்கு நிற்க* அழகனே! காப்பிட வாராய்
கள்ளச் சகடும் மருதும்* கலக்கு அழிய உதைசெய்த*
பிள்ளையரசே!* நீ பேயைப் பிடித்து முலை உண்ட பின்னை*
உள்ளவாறு ஒன்றும் அறியேன்* ஒளியுடை வெள்ளறை நின்றாய்!*
பள்ளிகொள் போது இது ஆகும்* பரமனே! காப்பிட வாராய்
இன்பம் அதனை உயர்த்தாய்!* இமையவர்க்கு என்றும் அரியாய்!*
கும்பக் களிறு அட்ட கோவே!* கொடுங் கஞ்சன் நெஞ்சினிற் கூற்றே!*
செம்பொன் மதில் வெள்ளறையாய்!* செல்வத்தினால் வளர் பிள்ளாய்!
கம்பக் கபாலி காண் அங்கு* கடிது ஓடிக் காப்பிட வாராய்
இருக்கொடு நீர் சங்கிற் கொண்டிட்டு* எழில் மறையோர் வந்து நின்றார்*
தருக்கேல் நம்பி! சந்தி நின்று* தாய் சொல்லுக் கொள்ளாய் சில நாள்*
திருக்காப்பு நான் உன்னைச் சாத்த* தேசு உடை வெள்ளறை நின்றாய்!*
உருக் காட்டும் அந்தி விளக்கு* இன்று ஒளி கொள்ள ஏற்றுகேன் வாராய்
போது அமர் செல்வக்கொழுந்து* புணர் திருவெள்ளறையானை*
மாதர்க்கு உயர்ந்த அசோதை* மகன்தன்னைக் காப்பிட்ட மாற்றம்*
வேதப் பயன் கொள்ள வல்ல* விட்டுசித்தன் சொன்ன மாலை*
பாதப் பயன் கொள்ள வல்ல* பத்தர் உள்ளார் வினை போமே (2)
திரிபுரம் மூன்று எரித்தானும்* மற்றை மலர்மிசை மேல் அயனும்வியப்ப*
முரிதிரை மாகடல் போல்முழங்கி* மூவுலகும் முறையால் வணங்க*
எரிஅன கேசர வாள்எயிற்றோடு* இரணியன்ஆகம் இரண்டு கூறா*
அரிஉருஆம் இவர் ஆர்கொல்? என்ன* அட்ட புயகரத்தேன்என்றாரே. (2)
வெம்திறல் வீரரில் வீரர்ஒப்பார்* வேதம் உரைத்து இமையோர் வணங்கும்*
செந்தமிழ் பாடுவார் தாம்வணங்கும்* தேவர் இவர்கொல் தெரிக்கமாட்டேன்*
வந்து குறள்உருவாய் நிமிர்ந்து* மாவலி வேள்வியில் மண்அளந்த*
அந்தணர் போன்றிவர் ஆர்கொல்? என்ன* அட்ட புயகரத்தேன்என்றாரே.
செம்பொன்இலங்கு வலங்கைவாளி * திண்சிலை தண்டொடு சங்கம்ஒள்வாள்*
உம்பர்இருசுடர்ஆழியோடு* கேடகம் ஒண்மலர் பற்றி எற்றே*
வெம்பு சினத்து அடல் வேழம்வீழ* வெண்மருப்புஒன்று பறித்து*
இருண்ட அம்புதம் போன்றிவர் ஆர்கொல்? என்ன* அட்டபுயகரத்தேன் என்றாரே .
மஞ்சுஉயர் மாமணிக் குன்றம் ஏந்தி* மாமழை காத்துஒரு மாயஆனை அஞ்ச*
அதன்மருப்புஒன்று வாங்கும்* ஆயர்கொல் மாயம் அறியமாட்டேன்*
வெம்சுடர்ஆழியும் சங்கும் ஏந்தி* வேதம் முன் ஓதுவர் நீதிவானத்து*
அம்சுடர் போன்றிவர் ஆர்கொல் என்ன* அட்ட புயகரத்தேன் என்றாரே.
கலைகளும் வேதமும் நீதிநூலும்* கற்பமும் சொல் பொருள் தானும்*
மற்றை நிலைகளும் வானவர்க்கும் பிறர்க்கும்* நீர்மையினால் அருள் செய்து*
நீண்ட மலைகளும் மாமணியும்* மலர்மேல் மங்கையும் சங்கமும் தங்குகின்ற*
அலைகடல் போன்றிவர் ஆர்கொல் என்ன* அட்டபுயகரத்தேன் என்றாரே.
எங்ஙனும் நாம்இவர் வண்ணம் எண்ணில்* ஏதும் அறிகிலம் ஏந்திழையார்*
சங்கும் மனமும் நிறையும் எல்லாம்* தம்மனஆகப் புகுந்து*
தாமும்பொங்கு கருங்கடல் பூவைகாயா* போதுஅவிழ் நீலம் புனைந்தமேகம்*
அங்ஙனம் போன்றிவர் ஆர்கொல் என்ன* அட்டபுயகரத்தேன் என்றாரே.
முழுசிவண்டுஆடிய தண்துழாயின்* மொய்ம்மலர்க் கண்ணியும், மேனிஅம்*
சாந்துஇழுசிய கோலம் இருந்தவாறும்* எங்ஙனம் சொல்லுகேன்! ஓவிநல்லார்*
எழுதிய தாமரை அன்னகண்ணும்* ஏந்துஎழில்ஆகமும் தோளும்வாயும்*
அழகியதாம் இவர்ஆர்கொல் என்ன* அட்டபுயகரத்தேன் என்றாரே.
மேவி எப்பாலும் விண்ணோர்வணங்க* வேதம் உரைப்பர் முந் நீர்மடந்தை தேவி*
அப்பால் அதிர்சங்கம்இப்பால் சக்கரம்* மற்றுஇவர் வண்ணம் எண்ணில்*
காவிஒப்பார் கடலேயும்ஒப்பார்* கண்ணும் வடிவும் நெடியர்ஆய்*
என் ஆவிஒப்பார் இவர்ஆர்கொல் என்ன* அட்டபுயகரத்தே என்றாரே.
தஞ்சம் இவர்க்கு என்வளையும்நில்லா* நெஞ்சமும் தம்மதே சிந்தித்தேற்கு*
வஞ்சிமருங்குல் நெருங்கநோக்கி* வாய்திறந்து ஒன்று பணித்ததுஉண்டு*
நஞ்சம் உடைத்துஇவர் நோக்கும்நோக்கம்* நான் இவர் தம்மை அறியமாட்டேன்*
அஞ்சுவன் மற்றுஇவர்ஆர் கொல்? என்ன* அட்டபுயகரத்தேன்என்றாரே.
மன்னவன் தொண்டையர் கோன்வணங்கும்* நீள்முடி மாலை வயிரமேகன்*
தன்வலி தன்புகழ் சூழ்ந்தகச்சி* அட்ட புயகரத்து ஆதிதன்னை*
கன்னிநல் மாமதிள் மங்கைவேந்தன்* காமருசீர்க் கலிகன்றி*
குன்றா இன்இசையால்சொன்ன செஞ்சொல்மாலை* ஏத்தவல்லார்க்கு இடம் வைகுந்தமே. (2)
அணைவது அரவு அணைமேல்* பூம்பாவை ஆகம்
புணர்வது,* இருவர் அவர் முதலும் தானே,*
இணைவன்* ஆம் எப் பொருட்கும் வீடு முதல் ஆம்,*
புணைவன்* பிறவிக்கடல் நீந்துவார்க்கே.
நீந்தும் துயர்ப் பிறவி* உட்பட மற்று எவ் எவையும்,*
நீந்தும் துயர் இல்லா* வீடு முதல் ஆம்,*
பூந் தண் புனல் பொய்கை* யானை இடர் கடிந்த,*
பூந் தண் துழாய்* என் தனி நாயகன் புணர்ப்பே.
புணர்க்கும் அயன் ஆம்* அழிக்கும் அரன் ஆம்,*
புணர்த்த தன் உந்தியொடு* ஆகத்து மன்னி,*
புணர்த்த திருஆகித்* தன் மார்வில் தான்சேர்,*
புணர்ப்பன் பெரும் புணர்ப்பு* எங்கும் புலனே.
புலன் ஐந்து மேயும்* பொறி ஐந்தும் நீங்கி,*
நலம் அந்தம் இல்லது ஓர்* நாடு புகுவீர்,*
அலமந்து வீய* அசுரரைச் செற்றான்,*
பலம் முந்து சீரில்* படிமின் ஒவாதே.
ஓவாத் துயர்ப் பிறவி* உட்பட மற்று எவ் எவையும்,*
மூவாத் தனி முதலாய்* மூவுலகும் காவலோன்,*
மா ஆகி ஆமை ஆய்* மீன் ஆகி மானிடம் ஆம்,*
தேவாதி தேவ பெருமான்* என் தீர்த்தனே.
தீர்த்தன் உலகு அளந்த* சேவடிமேல் பூந்தாமம்,*
சேர்த்தி அவையே* சிவன் முடிமேல் தான் கண்டு,*
பார்த்தன் தெளிந்தொழிந்த* பைந்துழாயான் பெருமை,*
பேர்த்தும் ஒருவரால்* பேசக் கிடந்ததே?
கிடந்து இருந்து நின்று அளந்து* கேழல் ஆய் கீழ்ப் புக்கு
இடந்திடும்,* தன்னுள் கரக்கும் உமிழும்,*
தடம் பெருந் தோள் ஆரத் தழுவும்* பார் என்னும்
மடந்தையை,* மால் செய்கின்ற,* மால் ஆர் காண்பாரே?
காண்பார் ஆர்? எம் ஈசன்* கண்ணனை என்காணுமாறு,?*
ஊண் பேசில் எல்லா* உலகும் ஓர் துற்று ஆற்றா,*
சேணபாலவீடோ* உயிரோ மற்று எப் பொருட்கும்,*
ஏண் பாலும் சோரான்* பரந்து உளன் ஆம் எங்குமே.
எங்கும் உளன் கண்ணன் என்ற* மகனைக் காய்ந்து,*
இங்கு இல்லையால் என்று* இரணியன் தூண் புடைப்ப,*
அங்கு அப்பொழுதே* அவன் வீயத் தோன்றிய,* என்
சிங்கப் பிரான் பெருமை* ஆராயும் சீர்மைத்தே?
சீர்மை கொள் வீடு* சுவர்க்கம் நரகு ஈறா,*
ஈர்மை கொள் தேவர்* நடுவா மற்று எப் பொருட்கும்,*
வேர் முதல் ஆய் வித்து ஆய்* பரந்து தனி நின்ற,*
கார் முகில் போல் வண்ணன்* என் கண்ணனை நான் கண்டேனே.
கண் தலங்கள் செய்ய* கரு மேனி அம்மானை,*
வண்டு அலம்பும் சோலை* வழுதி வள நாடன்,*
பண் தலையில் சொன்ன தமிழ்* ஆயிரத்து இப் பத்தும் வலார்,*
விண் தலையில் வீற்றிருந்து ஆள்வர்* எம் மா வீடே.